அகிலத்திரட்டு அம்மானை 2701 - 2730 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு அம்மானை 2701 - 2730 of 16200 அடிகள்
இனத்தைப் பிரிந்த மானதுபோல் இருப்போம் வனத்தி லென்றனரே
அம்மைமார் தவம்
கன்னியர்கள் மேனி கனிந்து மினுமினுத்து
மின்னித் தனங்கள் மிகுபால் சுரந்திடவே
கற்புக் குழறி கயிலையுக மானதற்கு
அற்புத வேள்கங்கை அவர்நினை வில்லாமல்
எல்லோரு மிக்க ஈசுரரைத் தானினைத்து
வல்லோனே யென்று வரம்பெறவே நின்றனராம்
நின்றார் தவத்தின் நிலைமைகே ளம்மானை
இன்றெங்கள் கற்பை ஈடழித்த மாமுனிவர்
வந்தெங்கள் தம்மை மாலையிட வேணுமென்று
பந்துத் தனமின்னார் பாவையேழு பேரும்
ஈசுரரே தஞ்சமென இருந்தார் தவசதிலே
மாசொன்று மில்லா மாத ரேழுபேரும்
தெற்கு முகமாய்த் தேவி யேழுபேரும்
மிக்கத் தவசு மிகப்புரிந்தா ரம்மானை
கற்பழித் தெங்கள்கையில் கன்னிதிர ளாமல்வைத்தோர்
பொற்பாத முண்டெனவே பூவை தவசுநின்றார்
பாலிளகி நல்லமிர்தம் பாலாறா யோடிடவே
காலிளகா வண்ணம் கடுந்தவசு செய்தனரே
பிள்ளை யேழுபேரும் பெற்றுப் பெருகிடவும்
கள்ளஞ்செய்த மாமுனிவர் கைப்பிடிக்க எங்களையும்
மக்களையு மெங்களையும் மாமுனிவர் வந்தெடுத்து
ஒக்க வொருமித்து உலகாள வைத்திடவும்
நின்றார் தவசு நேரிழைமா ரெல்லோரும்
நன்றான மாமடவார் நாடித் தவசிருக்க
பிறந்த பிள்ளைதன்னுடைய புதுமைகே ளன்போரே
அறந்தழைக்கும் நாரா யணர்மக வாகியதோர்
சான்றோர் பிறந்ததுவும் தரணியர சாண்டதுவும்
வேண்டும் பெரிய விருதுவகை பெற்றதுவும்
அய்யா உரைக்க அடியே னதையெழுதி
விளக்கவுரை :
இனத்தைப் பிரிந்த மானதுபோல் இருப்போம் வனத்தி லென்றனரே
அம்மைமார் தவம்
கன்னியர்கள் மேனி கனிந்து மினுமினுத்து
மின்னித் தனங்கள் மிகுபால் சுரந்திடவே
கற்புக் குழறி கயிலையுக மானதற்கு
அற்புத வேள்கங்கை அவர்நினை வில்லாமல்
எல்லோரு மிக்க ஈசுரரைத் தானினைத்து
வல்லோனே யென்று வரம்பெறவே நின்றனராம்
நின்றார் தவத்தின் நிலைமைகே ளம்மானை
இன்றெங்கள் கற்பை ஈடழித்த மாமுனிவர்
வந்தெங்கள் தம்மை மாலையிட வேணுமென்று
பந்துத் தனமின்னார் பாவையேழு பேரும்
ஈசுரரே தஞ்சமென இருந்தார் தவசதிலே
மாசொன்று மில்லா மாத ரேழுபேரும்
தெற்கு முகமாய்த் தேவி யேழுபேரும்
மிக்கத் தவசு மிகப்புரிந்தா ரம்மானை
கற்பழித் தெங்கள்கையில் கன்னிதிர ளாமல்வைத்தோர்
பொற்பாத முண்டெனவே பூவை தவசுநின்றார்
பாலிளகி நல்லமிர்தம் பாலாறா யோடிடவே
காலிளகா வண்ணம் கடுந்தவசு செய்தனரே
பிள்ளை யேழுபேரும் பெற்றுப் பெருகிடவும்
கள்ளஞ்செய்த மாமுனிவர் கைப்பிடிக்க எங்களையும்
மக்களையு மெங்களையும் மாமுனிவர் வந்தெடுத்து
ஒக்க வொருமித்து உலகாள வைத்திடவும்
நின்றார் தவசு நேரிழைமா ரெல்லோரும்
நன்றான மாமடவார் நாடித் தவசிருக்க
பிறந்த பிள்ளைதன்னுடைய புதுமைகே ளன்போரே
அறந்தழைக்கும் நாரா யணர்மக வாகியதோர்
சான்றோர் பிறந்ததுவும் தரணியர சாண்டதுவும்
வேண்டும் பெரிய விருதுவகை பெற்றதுவும்
அய்யா உரைக்க அடியே னதையெழுதி
விளக்கவுரை :