அகிலத்திரட்டு அம்மானை 14161 - 14190 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

நடக்கும் வழிதனிலே நாயகியோ கேகேட்பார்
வடக்குநா டுநமக்கு வசந்தான் வழிநடப்பு
தெச்சணா பூமி திசைமாற்ற மாயிருக்கும்
பச்சை வளையணிந்த பாவையரே பார்த்துநட
திக்குத் திசைகள் தெரியுதில்லை யென்பேத்தி
முக்கொரு மூலைதன்னை முன்னாடிப் போவோமென
வாரிக் கரைவழியே வாய்த்தநேர் மேற்காகக்
காரிருளாகு முன்னே கால்விரைவாய்ப் போவோமெனச்
சொல்லச் சிறுகன்னி தியங்கிமெள்ள வாயுரைப்பாள்
அல்லல் வினையோ ஆண்டவன் தன்செயலோ
வெளிகாணா தேயிருந்த மெல்லி வெளியில்வந்தால்
வழிதான் தெரியுமோகாண் மாபெரிய போத்தியென்றாள்
பதறாதே பெண்கொடியே பகவான் துணையுண்டுமடி
இதறாதே நாமள் இவ்வழியே சென்றாக்கால்
தெச்சணத்தில் பள்ளிக்கொண்டு தெய்வமட வார்களையும்
நிச்சயம் மணம்புரிந்த நீலவண்ண ருண்டுமடி
கலங்காதே கண்ணே கடற்கரையே போவோம்
விலங்காம லிவ்வழியே மேற்குநோக் கிப்போவோம்
என்றுசொல்லி மாதை இளக்கிமிகப் போகையிலே
அறைந்த வாரி அதற்கு வடபுறமாய்
இடம்மான வோசை டகுடகா வென்றுமிக
இடம்மானம் நாகசுரம் இரைச்சல் மிககேட்டுச்
சற்றே பொறுபேத்தி சத்தமொன்று கேட்குதிங்கே
மெத்த இரைச்சல் மேளத் தொனிகேட்குக்
குரவை யொலியும் குத்து வெடியுங்கேட்குப்
பரசா திக்குரல்கள் பலவிதமாய்க் கேட்குப்
பார்த்து நடப்போம் பாதைவிட் டுவிலகிச்
சேர்ந்து வடக்கேறி தான்பார்த்துப் போவோமென
என்றுரைக்கப் போத்தி இயம்புவாள் நாயகியும்
நன்றுநன்று கிழவா நடவுமுன் னேயெனவே

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 14131 - 14160 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

பார்த்து வரவேணும் பண்டையுள்ள போத்தியென்றாள்
சாற்று மொழிகேட்டு தாதன் மிகமகிழ்ந்து
அப்படியே யானால் ஆயிழையே யுன்னருகில்
பொற்பணிவே லைபுரியும் பெண்ணா ரறியாமல்
இங்குள்ள பேர்கள் எள்ளளவு மறியாமல்
கங்கைக் கரைவழியே காணாது போய்விடுவோம்
போக வென்றாலும் பொழுது புறப்படுமுன்
ஏகவேணும் நாமென்று இயல்பா யுரைத்தனராம்
அப்போது கன்னி ஆயிழையும் நல்லதென்று
இப்போ தெழுந்திரியும் இதுகடந்து போவோமெனச்
சொல்லிக் கிழவன் சிரித்து மனமகிழ்ந்து
நல்லகா ரியமெனவே நாம்போவோ மென்றுவுன்னி
அரிஹரி கோவிந்தா அலைதுயின்றாய் போற்றுயென்று
கரிஹரி கோவிந்தா காரியங்கைக் கொண்டோமென்று
குன்னி மிகவெழுந்து கோலு மிகபிடித்து
உன்னி யிருப்பும்விட்டு உடனே வெளியில்வந்து
சன்னை மிகஇருமித் தள்ளாடித் தள்ளாடிப்
பின்னே விழுவார்போல் போத்திமுவ் னிற்கையிலே
மாது கதவெல்லாம் வாங்கி மிகஅடைத்துக்
கேது விளைத்துவந்த கிழவன்பின் னாலேகி
வந்தவளை யழைத்து வாவா பிறகெனவே
சந்தமுடன் லாடகுரு சாடைசெய்து முன்னடந்தார்
முன்னடக்கப் போத்தி மொய்குழலாள் பின்னடக்க
அன்னநடைகள் விட்டு அலைவாய்க் கரைவழியே
முட்டாங்கு மிட்டு முகந்தெரியா வண்ணமவள்
கட்டாய்க் கவிழ்ந்து கன்னி பகவதியும்
கிழவன் பிறகே கிளிமொழியாள் தானடக்க
மலர்மாரி தூவ வாயு மரைவீச
பூமி குலுங்காமல் பொருப்பு மசையாமல்
காமி குமரி காலசையா மல்நடந்தாள்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 14101 - 14130 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

தெய்வ மடவாரைத் திருமணங்கள் செய்தாரென்று
வையமது சொன்ன வளமுரைத்தீ ரென்போத்தி
மாதரையும் பார்க்க மனவிருப்ப மாயிருக்கு
ஆதரவாய்ப் போத்தி அதுவரையும் என்னையும்நீர்
கூட்டிக்கொண்டு போவீர் கிழவனா னபோத்தி
பூட்டியுந் தன்பிறகே பிள்ளைபோ லேவருவேன்
செய்தியென்ன வென்று தேவி யுருக்கமுடன்
செய்தி மிகவடைந்த தாதனோ டேயுரைத்தாள்
அப்பொழுது லாடகுரு அவரேது சொல்லலுற்றார்
இப்படியே சொன்னதற்கு யான்கூட்டிப் போயிடுவேன்
ஓடி நடக்க ஓட்டாது தள்ளாட்டம்
கூடி நடக்கக் குறுக்குப் பெலக்காது
பேசி நடக்கப் பிசகுமம்மா என்னாக்கு
வீசி நடக்க விழிக்குக்கொஞ் சமறைவு
கக்க லிருமல் கால்பெலக்க வொட்டாது
சிக்கெனவே நடந்தால் செருக்கிரும லீளைவரும்
இத்தனை துன்பம் இருக்குங் கிழவனுடன்
சிற்றிடையீர் நல்ல சிறுபிரா யம்நடந்தால்
ஒக்குமோ பேத்தி உன்னடையு மென்னடையும்
பக்குவமோ நான்தான் பாதை நடப்பதற்கு
நானடப்பேன் காதவழி நாலுநாள் தங்கலென
நீயென்னோ டேநடந்தால் நிகராமோ பேத்தியென்றார்
அப்போது நல்ல ஆயிழையு மேதுரைப்பாள்
நற்போடு வொத்த நம்முடைய பேராநீர்
வேறாட்கள் கூடவெளியேறப் போகாது
வீறாகப் போத்தி மெல்லநடை யாகிடினும்
உம்மோடே நடக்க உள்ளாசை யாயிருக்கு
எம்மாத்திரம் நாட்கள் எவ்வளவு சென்றாலும்
பைய இருந்திருந்து பாதை மிகநடந்து
நெய்யதியக் கன்னி நேரிழைமா ரேழ்வரையும்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 14071 - 14100 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

தண்ணீ ரதுவாம் தான்கொடுக்கு முத்திரியாம்
மண்ணிலுள்ளோர் யாரும் வந்து வணங்குறாராம்
தண்ணீர் மண்ணீந்து சகலவினை தீர்க்கிறாராம்
புண்ணிய தானங்கள் போதமிகச் செய்கிறாராம்
குட்டங் குறைநோவு குருடூமை யானதுவும்
கட்டங் கொடியக் கர்மமுதல் தீர்க்கிறாராம்
சந்ததிகளில்லாத தரணிமனுப் பெண்களுக்கு
மைந்தர் கொடுக்கிறாராம் மகாதர்மஞ் செய்கிறாராம்
மனுப்பேரில் பேயை மாகிலுக்க மாயாட்டித்
தனுப்பெலங்கள் வாங்கி சருவி லெரிக்கிறாராம்
தெய்வமட வாரெனவே தேவியேழு பெண்களையும்
வைய மறிய மாலையிட்டுக் கொண்டாராம்
நித்தந் திருநாள்போல் நீணிலத் துள்ளோர்கள்
மெத்தக் குமுக்காய் மிகவந்து கூடுறாராம்
டம்மான வெடிகள் டகுடகென நாகசுரம்
இம்மாத்திர மெனவே எண்ணவுங் கூடாதாம்
காட்சிரெம்ப வுண்டாம் கலிமுடிக்க வந்தோமென்றும்
பேச்சுமிகச் சொல்லி பிரான்யாமங் கூறுறாராம்
இப்படியே பேச்சு இதுவுறுதி யானாக்கால்
எப்படியுங் கர்த்தன் இவரெனவே சொல்லிடலாம்
அல்லாமல் கலியுகங்கள் அழியுகின்ற நாளையிலே
சொல்லால் பெரிய திருமால் சொரூபமதாய்த்
தெச்சணத்தில் வந்து திருவிளையாட் டாகுமென
அச்சமறப் பேச்சென்று ஆதியிலே கேட்டதுண்டு
அந்த முறைதானோ அவனியிலே கேட்கிறது
எந்த விதமோ தெரியுதில்லை யென்பேத்தி
போய்ப்பார்த் தால்தெரியும் பொன்மகளே பேத்தியென்றார்
வாய்பார்த்த போது மாது மிகமகிழ்ந்து
கண்ணரிய  போத்தி காரணத்து நற்போத்தி
திண்ணமுள்ள போத்தி செப்புவதை நீர்கேளும்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 14041 - 14070 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

ஏற்றுநீ ரிளைப்பு மாறி இன்றிரா கழித்து ஏகும்
சாற்றிய மொழியைக் கேட்டுத் தனதுள மகிழ்ந்தார் போத்தி

நடை

அம்மா நீசொன்ன அருமை யெனக்கதிகம்
மும்மால்க்கு மேற்று முகுந்தன் பதம்பெறுவாய்
தாகமல்லால் பசிகள் தானெனக்கு இல்லையம்மா
தேகமது வாடாமல் செலந்தந்தால் போதுமென்றார்
பால்மோரு போலே பதங்கொடுத்து மாகுமரி
காலாறிப் போமெனவே கன்னி மிகவுரைத்தாள்
தாக மதுதீர்ந்து தானிருக்கு மப்பொழுது
நாகரீகக் குமரி நாயகியு மேதுரைப்பாள்
போற்றி யுமக்குப் போதவய தானதினால்
நாற்றிசைக ளெங்கும் நடமாட்ட மாயிருக்கும்
ஏதேது தீர்த்தம் இகனைபல மாயுளது
மாதோடே சொல்லும் மாபெரிய போத்தியென்றாள்
உடனே கிழவன் உளமகிழ்ந்து நன்றெனவே
மடமாதே காசி மகாதீர்த்தம் நல்லதுதான்
கன்னி மாகுமரி காசித்தீர்த்தம் நிகராம்
பின்னு மற்றதெல்லாம் பிரமாண மப்படிதான்
இப்போ தொருசெய்தி இராச்சியத்தில் சொல்லுகிறார்
எப்படியோ நிசமாய் இருந்தாலது மேன்மையதாம்
என்றுரைக்க நல்ல இளங்குமரி ஏதுரைப்பாள்
விண்டுரைத்த ஞாயமதை விளம்புவீர் போத்தியென்றாள்
அப்போது கிழவன் ஆச்சரிய மாய்மகிந்து
இப்போது வேணும் இவளை மிகஇளக்க
என்று மனதுள் இருத்தி மிகத்தெளிந்து
மன்றுதனில் கேட்ட வளமைகே ளென்றுசொல்லி
ஆயிரத் தெட்டாண்டாம் ஆனதொரு மாசியிலாம்
வாயிதமாய்ச் செந்தூர் வாரிதனி லேபிறந்து
வைகுண்ட மென்று வையகத்தில் வந்திருந்து
கைகண்ட அற்புதங்கள் கனகோடி செய்கிறாராம்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 14011 - 14040 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

தள்ளாடி மெள்ளச் சன்னை மிகப்போட்டுப்
பிள்ளாய்ப் பகவதியே பேத்தியென்றன் பொன்மகளே
கண்ணு மயிலே கனகவொளி மாமணியே
பெண்ணும்பிள்ளாய்ப் பேத்தி பேரனுக்குக் கஞ்சிவிடு
என்றுசொல்லி மெள்ள ஏந்திழையாள் தானிருக்கும்
குன்றுமணிக் கோவிலுக்குள் குன்னிமெள்ளச் சென்றனரே
பேத்தியென்ற சொல்லைப் பிரியமுடன் நாயகியும்
காற்றில் மிகக்கேட்டு கன்னி மிகப்பார்த்து
ஆர்காணும் நானிருக்கும் அரங்குக்குள் வாறதுதான்
பாரழியும் நாளோ பையரங்குக் குள்ளேவந்தாய்
எங்கிருந்து நீதான் எவ்வூ ருன்பேரேது
கிங்கிலுக்க வந்தவனோ கிழவன்தா னோவுரைநீ
அம்மா என்பேத்தி ஆயிழையே நாயகியே
சும்மா மயங்காதே சூட்சமொன்று மில்லையம்மா
பரமார்த்த மம்மா பழனிமலை யென்றனக்கு
விதமாற்ற மில்லை வினோதவித்தை தானுமில்லை
இலாடகுருவம்மா இராமனென்றன் பேர்பேத்தி
திலாடம திலிருந்து தீர்த்தமிங் காடவந்தேன்
வந்தேனான் கண்மயக்காய் வழிதப்பி யிங்கேதான்
உந்தன் திருப்பதியை ஒருஅகர மென்றிருந்தேன்
மகளே யென்பேத்தி மாஞால மொன்றுமில்லை
செகமெல்லாந் தீர்த்தம் சென்றேனா னிவ்வயதுள்
உன்னுடைய தீர்த்தம் உகந்தாட இப்போவந்தேன்
பின்னுமொரு பேச்சு பேசுகிறா ரிவ்வுலகில்
இன்றுந் தன்பதியில் இருந்திந்த ராவிடிந்தால்
நின்றுநின்று போயாலும் நிச்சயம்பார்த் தேமகிழ்ந்து
என்னுடைய வூருக்கு ஏகவே ணும்பேத்தி
பொன்னு மகளே பேத்தியெனப் போத்திசொன்னார்

விருத்தம்

பேத்தியென் றுரைத்த போது பொன்பக வதித்தாய் மெச்சிப்
போத்தியே யுமக்குக் கொஞ்சம் பொரிமாவு பிசைந்து தாறேன்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 13981 - 14010 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சிணமாகச் செய்து சிறந்து மிகஇருந்து
குணமாக மாயன் கோதையொடு வாழ்ந்திருந்தார்
வாழ்ந்து திருநாள் வாரஞ்செவ் வாச்சைமுதல்
ஆழ்ந்த திருமால் அவதாரக் காட்சியுடன்
கும்மி யிகனை குவலயத் தீர்ப்புரைத்துத்
தம்மியல்பு கொண்டு சுவாமிவெண் பட்டுடுத்தித்
தங்கக்குல் லாஅணிந்து தாமரிய நீராளம்
எங்கு மகிழ எம்பெருமாள் தானணிந்து
ஆயிழைமா ரவர்க்கு அழகுவெண் பட்டுடுத்தி
வாயிதமாய் மாயன் மகிழ்ந்துமிகக் கொண்டாடி
மங்களமா யிகனை மகாயிகனைத் தான்கூறி
சங்க மகிழ சுவாமிதிரு நாள்நடத்தி
பாக்கியங் களோடே பவிசா யிருக்கையிலே
தாக்கமிக மாயன் சந்தோச மாய்மகிழ்ந்து
பொல்லாக் கலிநாடு பொன்றிவருங் காலமதில்
வல்லாமை யான வாய்த்த பகவதிக்கும்
மாது உமைக்கும் மண்டைக்காட்டாள் பார்வதிக்கும்
தீதகலும் வள்ளி தெய்வானை நாயகிக்கும்
கலிமுடியு முன்னே கலியுகத்தோர் கண்காண
வலியான மாதர்களை மணமுகிக்க வேணுமென்று

அய்யா கன்னிபகவதி பதியேகல்


முன்னுரைத்த ஆகமத்தின் முறைநூற் படியாலே
நன்னூல் வழியாய் நாமுகிக்க வேணுமென்று
உன்னித் திருமால் உள்ளில் மிகஅடக்கி
கன்னியந்தமாகுமரி வாழும் பகவதியை
மாயமாய்க் கொண்டு வரவேணு மென்றுசொல்லி
உபாயமாய் மனதில் உடைய பரனினைத்தார்
கிழவனா கச்சமைத்து கிருதஞ்செய்ய வேணுமென்று
தளதளெனத் தேகம் தன்னுடம் புமினுக்காய்
மெக்குவாய் பொக்கனுமாய் முடியுமிக வெண்ணரையாய்
கக்க லிருமலுமாய்க் கையதிலே கோலூன்றி

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 13951 - 13980 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சரமதையும் வாங்கிடுவேன் சுவாமியுடன் போயுரைநீ
என்றுசொல்லி நாளும் எட்டுரண் டாச்சுதையா
அன்று வுரைக்க அய்யாமிகக் கோபமுற்று
பாவிப் பயலே பகராம லித்தனைநாள்
மேவி யிருந்தாயே மெல்லி யிழந்தேனே
தீட்டிவைத்த சொற்பனத்தைச் சொல்லா திருந்ததினால்
கூட்டில் மிகவாழ்ந்த கிளியைமிகத் தோற்றேனே
முந்திவந்து நீயும் மொழிந்ததே யுண்டானால்
என்ற னிளமயிலை இழந்துமிக வாடேனே
பூவண்ட ரானால் பெரிய பிதாவல்லவோ
மாவண்டப் பயலே வந்துசொல் லாதிருந்தாய்
அய்யா மூலகுண்டப்பதி எழுந்தருளல்
இப்போ பதிக்கு எழுந்தருள வேணுமென்று
மைப்போடு வொத்த மாதரொடு மக்களுமே
கூடி நடந்தார் கூண்டரிய பொற்பதியில்
தேடிமூ லப்பதியின் சிறப்பெல்லாந் தான்பார்த்து
ஏலமே இப்பதியில் எட்டுநாட் குள்ளேவந்தால்
மாலவரின் மக்களுக்கு மாய்வுசற்றும் வாராதே
கெடுத்தானே சொர்ப்பனந்தான் கெணித்தவுடன் சொல்லாமல்
கொடுத்தோமே நம்முடைய குலமக்கள் மாதரையும்
இப்பதியில் வந்தால் எள்ளளவுந் தோசமில்லை
எப்பதியு மிப்பதிக்கு ஒவ்வாது என்றுசொல்லி
எல்லோ ருடனே எம்பெருமா ளுமகிழ்ந்து
அல்லல் வினைதீர்ந்து அதில்வாழ்ந் திருந்தனராம்
தோப்புப் பதிபோல் தொட்டிக்கட் டம்பலமும்
கோப்புப் புரையும் குளிர்ந்த மணியரங்கும்
பள்ளி யறையும் பார்சவுககை மண்டபமும்
துள்ளி யிகனை சுகசோ பனம்வரவே
பூம்பந்த லும்பெரிய புகுவீர மேடைகளும்
ஊண்புரையும் நல்ல உகத்தீர்ப்பு மேடைகளும்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 13921 - 13950 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

அவதாரத் தின்படியே அன்றமைத்த பெண்கொடியை
உபகார மாமணங்கள் உடையவரே நீரருளி
வையகத்தோ ரெல்லாம் மனமகிழ்ந் திருக்கையிலே
செய்யஇந்த மாயம் செய்வாரோ மாயவரே
ஆரார்க்கு ஏற்கும் அரிவையர்கள் மக்களுந்தான்
போரா வழியானப் பொல்லாப்புச் செய்தாரோ
ஆதியே யவர்கள் அநியாயஞ் செய்ததென்ன
சோதியே யென்று தொழுதார் மடவார்கள்
அப்போ தொருமகன்றான் அஞ்சாறு நாளதுமுன்
சொப்பனங்கள் கண்டதுவைச் சொல்லாமல் தட்டழிந்து
அன்றைப் பொழுது அவன்வந் தடிதொழுது
நன்றினிய எங்கள் நாரணரே நாயகமே
பத்துநா ளுண்டும்நான் படுத்திருக்கு மவ்வளவில்
பெற்றுச் சழிந்தவர்போல் பெரியபூவண் டர்வடிவாய்
வந்தென் றனோடு வளப்பமென்ன சொல்லலுற்றார்
சந்தமுடன் நானுரைத்தச் சட்டமற வாதபடி
கொஞ்சநாள் தோப்பு குளிர்ந்தபதி யானதிலே
அஞ்சிரண் டாண்டு அதில்வாழ்ந் திருந்துபின்னும்
அஞ்சிரண்டுவயதில் அதில்வாழ்ந்திருந்துபின்னும்
மூலகுண்டப் பதியில் மிகஇகனை செய்யெனவே
ஏலமே சொன்னதெல்லாம் எண்ணமதி லில்லாமல்
பெண்களைக் கண்டவுடன் பூத்தான மாய்மகிழ்ந்து
கண்ணாட்ட மறந்து கலியை முடிப்பதற்கு
மனமுமில்லாமல் மறையின்தெளிவான
நினைவு மயர்ந்து நிலைபேர்ந் திருக்குகிறான்
நாட்டுக்குற்றங் கேட்க நானயைச்சு வைத்தற்கு
கோட்டு மடவாரைக் குறிப்பாக எண்ணிமிக
எண்ணி யிருக்குகிறான் இப்போது அங்கேசென்று
நண்ணிமூ லப்பதியில் நாடிவரச் சொல்லிவிடு
வரவில்லை யானால் மாதருடன் மக்களையும்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 13891 - 13920 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

வந்து வளர்பதியில் வாழ்ந்துண் டினிதிருப்பார்
சந்தோ சமாகத் தண்மை வெகுகுணமாய்
இப்படியே பெண்களோடு இகனை மிகநடத்தி
ஒப்புரவாய் மாயன் உகந்துண் டிருக்கையிலே
செந்தூ ரலையில் தேவனுதித் தன்றுவந்து
முந்துமூலப் பதியில் உவரிக் கரையிடத்தில்
சென்றங் கிருந்து சிவலிங்கத் தானமைத்து
மன்றுக்குள் கொஞ்சம் மறைத்துவைத்து மாயவரும்
நான்தவ சிருந்து நாட்கள்கொஞ்ச மேகழித்து
வான்புதுமை யற்புதங்கள் மாநிலத்தோர் தாமறியச்
செய்துதெய்வ மாதர்களைச் சிறந்த மணமுகித்து
தெய்திதனி லிங்கே திருநாளைக் கொண்டாடி
வருவே னெனச்சிலைக்கு வாக்குமிகக் கொடுத்துத்
திருவேற்றி வைத்த தேதியின்று வந்ததென
சும்மா இவரைத் திருப்பதியில் வாநீயென்று
நம்மா லுரைத்தால் ஞாயமில்லை யென்றுசொல்லிக்
கொஞ்ச மொருசூத்திரம் கூர்மையாய்ச் செய்யவென்று
அஞ்சலெனச் சாமளாத் தேவிதனை யழைத்துக்
கன்னியிலே ரண்டு பேரைக் கலக்கமிட்டு
என்னுடைய மக்களிலும் யாம முறைப்படியே
கொஞ்சமது வாந்தி கொடுத்துயிரைத் தான்வாங்கி
மஞ்சறை யில்வைத்து வாகாகக் காருமென்று
விடைகொடுக்க நாதன் வேண்டினாள் தேவியவள்
திடமுடனே சொன்ன சொல்வாக் குரைப்படியே
கன்னியரில் ரண்டு கடத்தினாள் மாதேவி
மின்னி னொளிமதலை வீரத் தனமாக
நாலுமூ ணுடனே நகட்டினாள் மாதேவி
மாலுடையதேவி மடந்தைகளிமொழியும்
உடனே சனங்கள் உடையவரே தஞ்சமெனத்
தடமேலே வீழ்ந்து சுவாமி அபயமென்றார்

விளக்கவுரை :   
Powered by Blogger.