அகிலத்திரட்டு அம்மானை 11851 - 11880 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

வேகம் பெரிய வேங்கைகடு வாய்பார்த்து
நாகமதிலுங் கடிய நல்லகடு வாய்பார்த்து
நாழிகை ஏழதுக்குள் நம்மிடத்தில் கொண்டுவரத்
தூளி யதுபறக்கும் சூறா வளியதுபோல்
கொண்டு வாவெனக் கூறிச் சறடனுமே
விண்டுரைப்பான் பின்னும் வீரியமாய்ச் சேவுகர்க்கு
நன்று மொழிகேளும் நல்வீரச் சேவுகரே
இன்றேழு மணிக்கு இங்கேகொண்டு வராட்டால்
தூக்கியே வுங்களையும் தூண்டலில் போட்டிடுவேன்
ஆக்கினைகள் செய்துவுங்கள் ஆமிசத்தை வாங்கிடுவோம்
என்று சொல்லிச் சேவுகரை இறுக்கமுட னிறுக்கி
இன்றுபோ மெனவே ஏற்றவரி சைகொடுத்து
அனுப்பினாள் சேவுகரை அந்தவே ளைதனிலே
பனிப்பிசினும் வெயிலைக் கண்டு பதறினாற்போல்
பதறியே சேவகர்கள் பண்பாகச் சட்டையிட்டுக்
குதறியே வந்து கூண்டுரைப்பார் மாயவேனாடு
நாரா யணரே நாங்கள்போ குங்கருமம்
பேராய் நடக்கவேணும் பெரிய திருமாலே
உம்மைச்சோ தனைபார்க்க குங்கருமம் ஆனதினால்
செம்மையுள்ள ராசன் சிணமே யனுப்பினர்காண்
ஆனதினால் கடுவாய் அடியேங்கள் கையதிலே
போனவுடன் சிக்கிடவும் புண்ணியரே வந்தாரும்
என்றுரைக்கச் சேவுகர்கள் எம்பெருமா ளுள்ளமதில்
நன்று நன்றென்று நாரா யணர்சிரித்து
விடைகொடுத் தார்கடுவாய் வேகமதில் சிக்கிடவும்
படைச் சேவுக்கத்தார் பாரமலை தானேறி
கடுவாய் கிடக்கும் கனமலைகள் தான்தேடி
முடுகித் தலையாரி முடிச்சு வலைவளைந்து
காடு கலைத்துக் கடுநாய்கள் விட்டேவி
வேடுவர்க ளெல்லாம் விரைந்து கலைத்தனரே

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 11821 - 11850 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

என்ன உபகாரம் இவர்க்குநாம் செய்வோமென்று
கன்னல் கதலிக் கனிகள் கொடுப்போமோ
தர்ம மால்தீர்த்தச் சஞ்சலங்க ளானதையும்
அம்மம்மா சொல்ல ஆராலு முடியுமோடி
குட்டம் பதினெட்டும் குடித்தபத மொன்றாலே
கட்டம் முதலாய்க் காணாப் பறந்ததுவே
இப்புதுமை செய்தவர்க்கு இப்போ தொருபுதுமை
கொப்பளிக்கு முன்னே கூடா தோஇவரால்

கடுவாய் சோதனை

ஏதோ வொருதொழிலாய் இவர்பம்ம லாயிருக்கார்
சூதால் கொடுமைவந்து சுற்றுங்காண் நீசனுக்கு
என்று சிலபெண்கள் ஏழைபங் கோனருளை
கண்டு தொழுது கருத்தகலா நின்றுடுவார்
அப்படியே நருட்கள் ஆதிநா ராயணரை
செப்படிபோ லவர்க்குச் செய்தநன்றி சொல்லியவர்
கூரைக்குப் போகக் கூறநினை வில்லாமல்
நாரணரைச் சூழ்ந்து நமஸ்காரஞ் செய்துநிற்பார்
சூழ்ந்து நருட்கள் தொழுதுமிக நிற்கையிலே
தாழ்ந்துசா குங்கலியன் சறடன் தனைநோக்கிப்
பேயனொரு சாணானைப் பிடித்துக்கொடு வந்தோமே
தூய இரும்பு விலங்கதிலே போட்டுவைத்தோம்
சாமியென்று பாவித்தச் சாணான்தனை நாமும்
காமியத் தால்பெருத்தக் கடுவாய் தனைவருத்தி
ஏவிவிட்டுப் பார்த்து இருவகையுந் தானறிந்து
போவெனவே சொல்லிப் பேயன் தனையனுப்ப
வேணுமே யிப்போ விவரமென்ன என்றுரைத்தான்
ஆணுவ மூர்க்க அரச னிதுவுரைக்க
நல்லதுதா னென்று நாட்டமுற் றுச்சறடன்
வல்லபெலச் சேவுகரை வாவென் றருகழைத்து
இப்போ தொருநொடியில் ஏழுமலை யுந்தேடி
வெற்போடு வெற்பெல்லாம் வேக முடன்தேடி

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 11791 - 11820 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

நாட்டுக் கலியனுக்காய் நற்சோத னையெனவே
நீட்டின காலில் நீசனிட்ட விலங்கோடே
ஏழைகளுக் காக இருந்தார்பா ராவதிலே
கோழைக் குடும்பக் குறும்பர் தமைவதைக்க
மனுப்பா ராவதிலே மாயாண்டி தானிருந்தார்
தனுப்பா ரமடக்கித் தாழ்மையுட னேயிருக்க
ஆகாத நீசன் அழியும் நினைவதினால்
போகாத படிக்குப் பேயன் தனைவிலங்கில்
போட்டு வையென்றும் புள்ளி பதனமென்றும்
கோட்டுக்கா ரர்தமக்குக் கொடுத்தானே வுத்தரவு
அந்தக் கலிராசன் அவனுரைத்த வுத்தரம்போல்
சந்தமுனி மாயனையும் தான்விலங்கி லிட்டுவைத்தான்
அப்போது மாயன் அதிகசான் றோர்களுக்காய்
இப்போ பொறுதிகொண்டு இருக்கே னெனஇருந்தார்
நாட்டுச் சோதனைக்காய் நாராயணர் விலங்கில்
நீட்டின காலோடே நிலம்பார்த் தேயிருந்தார்
சாணான் பால்வைத்துச் சந்தோசப் பாலேற்று
நாணாம லெம்பெருமாள் நற்சோலையி லிருந்தார்
சோலையில் வாழ்பறவை சாமிவந்தா ரென்றுசொல்லி
ஏலேல முங்கூறி எந்நேர முந்தொழுது
நன்றான மாமுனியும் நற்பறவை யானதுவும்
கொண்டாடிக் கொண்டாடிக் கொஞ்சிவிளை யாடிருக்கும்
இந்தவனச் சோலையிலே எம்பெருமாள் தானிருக்க
சந்த முடனருட்கள் சதாகோடி யாகவந்து
தொழுது நமஸ்கரித்துத் தூயோன் பதம்பூண்டு
முழுது முன்பாதமென மொய்குழ லார்சிலர்கள்
நாற்பது வயசாய் நான்சேயில் லாதிருந்தேன்
காப்பதுன் பாதமெனக் கண்டு தொழுதபின்பு
தந்தாரே யெங்களுக்குச் சந்ததி தழைத்தோங்க
வந்தாரே நாயடியார் வாழு மனையிடத்தில்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 11761 - 11790 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

வெறிப்பேய னென்று விரட்டி மிகஎறியார்
எல்லாம் பொறுதியுடன் எம்பெருமா ளுமடக்கிக்
கல்லாரை யெல்லாம் கமக்கியறுப் பேனென்று
மனதி லடக்கி மாய நெடுமாலும்
கனகத் திருமேனி கண்கவிழ்ந் தேநடந்தார்
நடந்தாரே கோட்டாறு நல்ல பிடாகைவிட்டுக்
கடந்தாரே சுங்கான் கடையெல்கைத் தானும்விட்டுப்
பத்மனா புரத்தெல்கைப் பார்த்துத் தெருவோடே
உற்பனமாய் மாயன் உள்தெருவோ டேநடக்க
ஆகாத பாவியெல்லாம் அவரைக்கண் டேபழித்து
வாகாகப் பேசி வைதாரே நீசரெல்லாம்
அதிலு மன்போர்கள் அவரைக்கண் டேபணிந்து
இதுநாள் வரையும் இவர்நடந்த சட்டமதில்
பொல்லாங்கு செய்தாரெனப் பேருநாம் கேட்டதில்லை
எல்லாங் கடைதலைக்கு இட்டதர்ம மேகாக்கும்
என்றன்போர் சொல்லி இவரழுது நின்றராம்
அன்றந்த நாதன் அதுகடந்துப் போயினரே
போனாரே தக்கலையின் புரைக்குள்ளே யுமிருந்து
மானான பொன்மேனி வாலரா மங்கடந்து
வாரிக் கரையும் வாய்த்த நதிக்கரையும்
சீரிய நாதன் சென்றகண் டேநடந்தார்
நடந்துத் திருவனந்தம் நல்லபுரத் தெல்கைகண்டு
அடர்ந்த மரச்சோலை அடவி வனங்கள் கண்டு
கண்டுகொண் டெம்பெருமாள் கண்கொள்ளாக் காட்சியுடன்
பண்டுநாம் சீரங்கத்தைப் பார்த்தகன் றேநடந்து
இவ்வூரைக் கண்டு எத்தனைநா ளாச்சுதென்று
செவ்வுமகா விட்டிணுவும் சிந்தைக்குள் ளேயடக்கி
சிங்காரத் தோப்பில் சுவாமி சிறை
அவ்வூரைப் பாராமல் அந்த வனமானதுக்குள்
எவ்வுயிர்க்குந் தானாய் ஈயுகின்ற பெம்மானும்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 11731 - 11760 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

தருந்தார ருக்காகத் தடியிரும்பி லுமிருந்தார்
சான்றோருக்காகத் தடியிரும்பிலுமிருந்து
மாண்டோ ரையுமெழுப்பும் மாய வலுவாண்டி
அய்யோ அவரை அடைத்துவைத் தேயிருந்த
பொய்யோ புரைக்குள் பொறுக்குமோ கண்ணுகண்டால்
மோளுக் குழியும் மொய்த்தத்தெள் ளினங்களுமாய்த்
தோளு வழியே சொரியுதே தெள்ளினங்கள்

அய்யாவை அனந்தபுரம் கொண்டு செல்லல்

அட்டை மிதக்க அரியத்தேள் ஈமிதிக்க
விட்ட நரகு மிகுவாய்ப் புழுமிதக்க
நாற்றத் துறைகள் நரகத் துறைபோலே
பார்த்த இடமெல்லாம் பலபுழுக்க ளுஞ்சரிய
ஐயோ அய்யாவை அடைத்தப் புரையதிலே
கையாடி நிற்கக் காரணமோ மாயவர்க்கு
சான்றோ ருக்காகத் தர்மக் குருநாதன்
மீன்று முழியாமல் முகமலர்ந் தங்கிருந்தார்
ஏழை களுக்காக ஈரொன்றொரு நாளாய்
மீளாச் சிலுவையிலே முள்ளா லடிகள்பட்டு
மரித்துப் பிறந்ததுபோல் மாயக் குருநாதன்
இதுவுகத்துக் கிப்புரையில் இருந்து அழுந்தவென்று
இருந்தாரே மாயவனார் ஏழைகளுக் காயிரங்கிக்
கருந்தார மார்பன் கருத்தில் மிக அடக்கி
எல்லா மடக்கி இவரிருக்கும் நாளையிலே
பொல்லாக் கலியன் புறப்பட்டான் மேற்கெனவே
இப்பே யனையும் இங்கேகொடு வாருமென்று
அப்போது சொல்லி அவனடந்தான் மேற்கெனவே
உடனே சிவாயி உற்றநா ராயணரைத்
திடமாகக் கூட்டிச் சிணமே நடக்கலுற்றான்
கொண்டு போனாரே கோட்டாற்று ஊரோடே
கண்டுபெரும் பாவியெல்லாம் கட்டிகொண்டு தானெறிய
எறிவார் சிலபேர் ஏசுவா ரேசிலபேர்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 11701 - 11730 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

கண்டு பிடித்துக் கட்டுவார் நம்மையுமே
தொண்டுசெய்யுஞ் சான்றோர் துயரமது மாறாது
நாம்நினைத்தக் காரியமும் நடந்திடா தானதினால்
ஏனிதைத்தான் சொல்லப் போறோ மெனஅடக்கி
எல்லாம் படைத்த ஏகன் கிருபையென
அல்லா நினைத்தபடி ஆகு மெனவுரைத்தார்
அப்போது நீசன் அவன்வெகுளி யாயுரைப்பான்
இப்போ தொருமருட்டாய் இவன்சமைந்தான் சுவாமியென்று
மருளிதுதா னென்று மாநீசன் தான்மருண்டு
கொண்டுபோங் கோசறடன் கூண்டவன் முன்பதிலே
என்றுரைத்த போது ஏவல்சீவா யிகளும்
நடத்தி யிழுத்து நாரா யணரையுமோ
கடத்திச் சறடன் கண்டிருக்கக் கொண்டுவிட்டார்
உடனே சறடன் உபாயமதைப் பார்ப்போமென்று
தடதடென எழுந்து சாராய மானதிலே
அஞ்சுவகை நஞ்சு அதில்கலந்தான் மாபாவி
நஞ்சில்லை யென்று நல்லபா லென்றீந்தான்
பாலென்ற போது பச்சைநா தன்மகிழ்ந்து
காலனைக்கா லாலுதைத்தக் கடவுளார் தாமகிழ்ந்து
வேண்டி யகமேற்றார் வேதநா ராயணரும்
ஆண்டி யதனால் அஞ்சா திருப்பதையும்
பார்த்துச் சறடன் பண்நா யகமகிழ்ந்து
வேற்றொரு சூட்சம் வேறேயுண் டாகுமென
என்னமோ என்று இவனுணர்ந்துப் பாராமல்
பொன்னர் மயக்கம் பெரிய மயக்கமதால்
கொடுபோங் கோவென்று கூறினான் சேவகநாடு
வெடுவாகக் கொண்டு வெறுநீசன் டாணாவில்
அடைத்துவைத் தானங்கே அன்னீத மாபாவி
திடத்தமுடன் நாரணரும் சிந்தைமிக மகிழ்ந்து
இருந்தா ரேயங்கே ஏழைக்கிரங்கி யவர்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 11671 - 11700 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

இவன்தா னடியோ என்னையுமே ஆடவைத்துச்
சவந்தனையே சுட்டதுபோல் தான்சுட்டப் பேயனிவன்
தலைமயிரைப் பனையில் தான்பங்கு வைத்திறுக்கிக்
குலையக் குலையக் கொன்னகொடும் பாவியிவன்
என்று எறிவாள் இவள்சிலர்க ளம்மானை
அன்றுதுகள் கண்டு அதிலுஞ் சிலமடவார்
ஆமடியோவுங்களையும் அழைத்தானோ வீட்டில்வந்து
ஓமடியோ இந்த இறுமாப்புப் பேசாதுங்கோ
அன்றைக் கவனை அடிபணிந்து நின்றுகொண்டு
இன்றைக் கவனை எறியத் தொடர்ந்தாயோ
என்று சிலபேர் எறியாதே யென்றுரைப்பார்
நன்று நன்றென்று நாரணரு முள்ளடக்கி
ஒருதிக் கொருதி உரைத்திடுகோவெனவே
கருதிமுகம் பாராமல் கண்ணர் மிகநடந்தார்
பாவிக் குலங்கள் பச்சைமால் நாரணரை
தாவிச் சுசீந்திரத் தலம்நோக்கிக் கொண்டுசென்றார்

சுசீந்திரத்தில் அய்யா

கொண்டுபோ கும்வேளை கொடும்பாவி நெட்டூரன்
விண்டுரைக்கக் கூடாத வேதனைகள் செய்யலுற்றான்
அய்யய்யோ மாயவரை அன்னீத மாபாவி
செய்த வினையெல்லாம் சொல்ல முடியாதே
கொண்டுவிட்டு மாயவரைக் கூண்டகலி ராசன்முன்னே
கண்டு கலிராசன் கருத்தில் மிகத்தேர்ந்து
பார்ப்போம் பரிட்சை பயித்தியக்கா ரனுடனே
தாற்பரிய மாகத் தன்விரலின் மோதிரத்தைக்
கழற்றி யொருவர் காணாமல் கையடக்கிச்
சழத்தி வருவது தானறியா நீசன்வன்
ஏதடா என்றன் கைக்குள் ளிருப்பதையும்
ஓதடா வுன்றன் உற்ற வலுவாலே
அப்போது மாயன் அடக்க மிக அறிந்து
இப்போ துரைத்தால் இந்தநீ சக்குலங்கள்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 11641 - 11670 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

ஆளுவே னோர்குடைக்குள் ஆனவை குண்டமனாய்
வாளுவோம் மக்கா வையகத்தை நாமாக

விருத்தம்

ஒன்றுக்கு மலைய வேண்டாம் உகபர நாத னாணை
என்றுக்கு மலையின் மீதில் ஏற்றின தீபம் போலே
கன்றுக்குப் பாலு போலும் கண்ணுக்குப் புருவம் போலும்
என்றுக்கு மக்கா வுங்கள் இடமிருந் தரசு ஆள்வேன்

விருத்தம்


முன்முறை விதியா லிந்த முழுநீசப் பாவி கையால்
என்விதிப் படவே வுண்டு இறப்பொன் றனக் கென்றதாலே
பின்விதி யெனக்கு நன்றாம் பெரும்புவி யாள்வோ மக்கா
உன்விதி நல்ல தாகும் ஒளிவறா வாழ்வீர் தாமே

சுவாமி கைது


நடை


என்று மகிழ்ந்து எம்பெருமா ளுள்ளடக்கி
மன்று தனையளந்த மாலோன் நடக்கலுற்றார்
கெட்டினக் கெட்டைக் கிறுக்க முடனிறுக்கிக்
கட்டினக் கட்டோடே கடுநீசன் தானடத்தி
ஏசுவார் மாயவரை எறிவார்காண் மாயவரைப்
பேசுவார் மாயவரைப் பேயனென்பார் மாயவரை
இப்படியே நீசக் குலங்களெல்லா மாயவரை
அப்படியே பேசி அடித்து மிகநடத்தி
நீசக் குலமிருக்கும் நெடுந்தெருக்க ளூர்வழியே
பாசக் கயிறோடு பகற்கள்ள னைப்போலே
தெருவுக்குத் தெருவு சிறுகுழந்தை நீசர்குலம்
வருகின்ற மாயவரை மண்கட்டி பேர்த்தெறிவார்
தலையைப் பிடித்திழுப்பார் சடைப்பேயன் பேயனென்பார்
இலைசருகு போலே எரியுகின்ற சாதியெல்லாம்
குண்டியிலே யொருவன் கோல்கொண்டு குத்திடுவான்
நொண்டியோ வென்று நெளியிலே குத்திடுவான்
நம்மள் குலத்தை நாணங் கெடுக்கவந்த
பம்பக் குறும்பேயன் பம்பைதனைப் பின்னுமென்பார்
அதிலுஞ் சிலபேர் அடடாபோ என்றிடுவார்
மதிலேறி வந்து மாமட வார்சிலர்கள்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 11611 - 11640 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

எவ்வுகத் துக்கும் இப்பாடு என்பாடு
இவ்வுகத் துக்கும் இப்பாடு என்பாடு
அவ்வுகத்தி லுள்ள அநியாயப் பாவிகளை
இவ்வுகத்தைப் போலே எரியாமல் விடடேனோ
என்று மனதில் இதமாய் மிகவடக்கி
ஒன்று முரையாமல் ஊமைபோ லேநடந்தார்
நடக்கவே மாயன் நல்லன்பு சான்றோர்கள்
கடக்கவந்து நின்று கண்ணீர் மிகத்தூவி
ஏழைக்கா யிரங்கி எங்கள்குல மீதில்வந்தீர்
கோழைக் குலநீசன் கொண்டடிக்க வந்தானே
பாவிநீ சனாலே பட்ட துயரறிந்து
ஆவுமேய்த் தநாதன் ஆளவந்தார் நம்மையுமே
அய்யோஇனி நாமள் அலைந்துமிகப் போவோமென
மெய்யோடே குத்தி விழுந்தழுவார் சான்றோர்கள்
தாய்தகப்ப னில்லையென்று தானடித்த நீசனெல்லாம்
வாயயர்ந் திருந்தானே இவர்வந்த நாள்முதலாய்
இனியாரு நம்மை ஏற்றுக்கை தாறதுதான்
தனியானோம் நாமளினித் தலையெடுப்ப தெக்காலம்
என்று சான்றோர்கள் சொல்லி யழுதசத்தம்
கன்றுக் கிரங்கும் கண்ணர் மிகக்கேட்டு

அய்யா சான்றோர்க்கு அருளல்

மலையாதுங் கோநீங்கள் மாமுனிவன் புத்திரரே
அலையாதுங்கோ மக்காள் அய்யா திருவாணை
இப்பூமி தன்னில்வந்து இத்தனை நாள்வரைக்கும்
கைப்பொருளுக் கிச்சை கருத்தில் மிகநினைத்துக்
கைக்கூலி வேண்டிக் கருமஞ்செய்தே னானாக்கால்
இக்குவ லயத்தில் இனிவரேன் கண்டிருங்கோ
தன்மமது நிச்சத்துத் தாரணியில் வந்துண்டால்
நன்மைக் கடைப்பிடித்து நான்வருவேன் நானிலத்தில்
ஒன்றுக்கு மலைய வேண்டாங்கா ணுத்தமரே
என்றைக்கும் நானிருப்பேன் என்மக்கள் தங்களிடம்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 11581 - 11610 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சமைத்தாய் நீசுவாமியென்று சாணாப் பனையேறி
உனைசாமி என்று உன் தேகத்தைப்பார்த்து
பனைச்சிரங் கின்னம் பற்றித் தெளியலையே
உனைச்சுவாமி யென்றால் ஒருவருக்கு மேராதே
ஆளான ஆளோநீ ஆளில் சிறந்தவனோ
தாழாய்க் கிடந்து சாமியென்று வந்தாய்நீ
நாரண சுவாமி நானென்ற தும்நீயோ
வாரணத்தின் காலில்கட்டி வாட்டுவோம் பாருஎன்பான்
உன்னோடு நின்றவர்கள் உன்னை யடிக்கையிலே
என்னோடு வந்து என்னவென்று கேட்கலையே
நீசுவா மியென்றால் நெகிழுவ ரோஇவர்கள்
பாசக் கயிறு பற்றுமோ வுன்கையிலே
வகைதேட வென்று மனுச்சுவாமி யென்றாயே
புகையோடு புகையாய்ப் போறாய்நீ வம்பாலே
நருளை வருத்திவிட்ட நல்லமந்தி ரத்தாலே
மருளச்செய் தெங்களையும் மண்ணில்விழ வைபார்ப்போம்
அல்லாம லுன்கைக் கட்டு மறுவதற்கு
வல்லாமை யுண்டானால் மந்திரத்தைப் பார்நீயும்
கூனைப் போலிருந்து குறுமுழி முழிப்பதென்ன
நானன்னா வென்று நகைப்பா ரொருகோடி
ஏசுவார் கோடி எறிவா ரொருகோடி
பேசுவார் கோடி பேயன்வெறும் பேயனெனச்
சொல்லி நகைப்பார் சுத்தமுள்ள நாரணரை
பல்லுயி ரும்படைத்த பரமன்வாய் பேசாமல்
கவிழ்ந்து கண்மூடிக் களிகூர்ந் தேமகிழ்ந்து
சவந்தரிய நாதன் தானே நடக்கலுற்றார்
வெடிகொண் டிடிப்பார் வெட்டவா ளோங்கிடுவார்
அடித்தடித்துத் தள்ளி அங்குமிங் குமிழுத்து
வேதனைகள் செய்வார் வேதநா ராயணரை
சாதனைக ளுள்ள சர்வபர நாரணரும்

விளக்கவுரை :   
Powered by Blogger.