அகிலத்திரட்டு அம்மானை 11251 - 11280 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு அம்மானை 11251 - 11280 of 16200 அடிகள்
பம்மாத்தாய்க் காணுதுகாண் பிராக்கிரம மந்திரியே
இப்போ தொருநொடியில் இந்தச்சா ணான்தனையும்
மெய்ப்பாகக் கொண்டு விடவேணு மென்றன்முன்னே
என்றுமந் திரிமாரை ஏவுந் தறுவாயில்
அன்று அருகிருந்த ஆவிடையர் தம்வழியில்
ஒருவ னெழுந்து உற்றரசனை நோக்கிக்
கருதனம்போல் புத்தி கற்பித்தா னம்மானை
கலியரசனுக்குப் பூவண்டர் உபதேசம்
விருத்தம்
கேட்டீரோ முன்னா ளுள்ளக் கெறுவித வளங்க ளெல்லாம்
தாட்டிமை யாகச் சொல்வேன் தமியனும் வணங்கி நின்று
பூட்டியே மனதில் வைத்துப் புத்தியென் றெண்ணி நீரும்
நாட்டினில் நன்மை செய்து நலமுட னரசு செய்யும்
விருத்தம்
மாயனோ உபாயத் தாலே மனுவது போலே யாகி
ஆயனக் குலமுந் தோன்றி அவனியி லிருப்பன் கண்டீர்
மாயத்தை யறியா நீரும் மாளவே போக வேண்டாம்
ஞாயமா யுரைத்தே னையா நம்முட அரசுக் கேகும்
விருத்தம்
எளிமையாங் குலங்க ளென்று எண்ணுற மனுவே யல்ல
பழியென ஆதி நாதன் பார்க்கவே மாட்டா ரையா
அழிவது யுகத்துக் காச்சு ஆனதால் வருவார் திட்டம்
வழியிது இல்லை யையா மாறியே போவோம் வாரும்
விருத்தம்
தசரதன் மகவாய் மாயோன் சீமையில் வந்து தோன்றி
புசமுடப் பிறப்போர் கூடப் பிறந்ததுங் கேட்டி லீரோ
வசையுடன் மனுத்தா னென்று வாதிட்ட அரக்கன் தன்னை
விசையுட னறுத்த செய்தி விளம்பியுங் கேட்டி லீரோ
விருத்தம்
தெய்வகி வயிற்றி லுற்று ஸ்ரீகிருஷ்ணன் எனவே தோன்றி
வைவசு தேவன் பெற்ற மனுவென வளங்கள் நாட்டி
நெய்யிடை வழியிற் சேர்ந்து நெருட்டிமா ஞாலஞ் செய்து
செய்வதுங் கஞ்சன் தன்னைச் செயித்ததுங் கேட்டி லீரோ
விருத்தம்
ஐவர்க்குத் தூத னாகி அங்குமிங் கோடிச் சென்று
மைக்குழல் சிலர்கள் தம்மை மணங்களு மிகவே செய்து
மெய்ப்புடன் கிளைக ளோடு மேவியே குழாங்கள் செய்து
விளக்கவுரை :
பம்மாத்தாய்க் காணுதுகாண் பிராக்கிரம மந்திரியே
இப்போ தொருநொடியில் இந்தச்சா ணான்தனையும்
மெய்ப்பாகக் கொண்டு விடவேணு மென்றன்முன்னே
என்றுமந் திரிமாரை ஏவுந் தறுவாயில்
அன்று அருகிருந்த ஆவிடையர் தம்வழியில்
ஒருவ னெழுந்து உற்றரசனை நோக்கிக்
கருதனம்போல் புத்தி கற்பித்தா னம்மானை
கலியரசனுக்குப் பூவண்டர் உபதேசம்
விருத்தம்
கேட்டீரோ முன்னா ளுள்ளக் கெறுவித வளங்க ளெல்லாம்
தாட்டிமை யாகச் சொல்வேன் தமியனும் வணங்கி நின்று
பூட்டியே மனதில் வைத்துப் புத்தியென் றெண்ணி நீரும்
நாட்டினில் நன்மை செய்து நலமுட னரசு செய்யும்
விருத்தம்
மாயனோ உபாயத் தாலே மனுவது போலே யாகி
ஆயனக் குலமுந் தோன்றி அவனியி லிருப்பன் கண்டீர்
மாயத்தை யறியா நீரும் மாளவே போக வேண்டாம்
ஞாயமா யுரைத்தே னையா நம்முட அரசுக் கேகும்
விருத்தம்
எளிமையாங் குலங்க ளென்று எண்ணுற மனுவே யல்ல
பழியென ஆதி நாதன் பார்க்கவே மாட்டா ரையா
அழிவது யுகத்துக் காச்சு ஆனதால் வருவார் திட்டம்
வழியிது இல்லை யையா மாறியே போவோம் வாரும்
விருத்தம்
தசரதன் மகவாய் மாயோன் சீமையில் வந்து தோன்றி
புசமுடப் பிறப்போர் கூடப் பிறந்ததுங் கேட்டி லீரோ
வசையுடன் மனுத்தா னென்று வாதிட்ட அரக்கன் தன்னை
விசையுட னறுத்த செய்தி விளம்பியுங் கேட்டி லீரோ
விருத்தம்
தெய்வகி வயிற்றி லுற்று ஸ்ரீகிருஷ்ணன் எனவே தோன்றி
வைவசு தேவன் பெற்ற மனுவென வளங்கள் நாட்டி
நெய்யிடை வழியிற் சேர்ந்து நெருட்டிமா ஞாலஞ் செய்து
செய்வதுங் கஞ்சன் தன்னைச் செயித்ததுங் கேட்டி லீரோ
விருத்தம்
ஐவர்க்குத் தூத னாகி அங்குமிங் கோடிச் சென்று
மைக்குழல் சிலர்கள் தம்மை மணங்களு மிகவே செய்து
மெய்ப்புடன் கிளைக ளோடு மேவியே குழாங்கள் செய்து
விளக்கவுரை :