அகிலத்திரட்டு அம்மானை 11161 - 11190 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

தோள்கா ரர்கோடி சுரண்டிக்கா ரர்கோடி
அம்புக்கா ரர்கோடி ஆயுதக்கா ரர்கோடி
வம்புக்கா ரர்கோடி வந்தா ரவன்கூட
வெடிக்கா ரர்கோடி வேல்கா ரர்கோடி
அடிக்கா ரர்கோடி வந்தா ரவன்கோடி
இத்தனை யார பாரத் துடன்நீசன்
தத்தியுடன் நடந்து தமுக்கு மிகஅடித்து
வந்து கூடாரம் இட்டான் சுசீந்திரத்தில்
தந்துதந் தாகத் தங்கள் மிகக்கூடி
கொந்துகொந் தாகக் கொடும்படைகள் கூடிவர
மந்திரி மாரோடு வந்திருந் தேதுசொல்வான்
கேளாய்நீ மந்திரியே கிருபையுட னோர்வசனம்
வாளாற் பெரிய மன்னர்களந் நாள்முதலாய்
நமக்கா யிருந்ததுகாண் நம்முடைய நாளையிலே
துடுக்கான வெள்ளை நசுறாணி யவன்தனக்காய்
ஆச்சுதே நாடு அவனுக்கே யாகிடினும்
பேச்சுநா மல்லால் பின்னொருவர் காணாதே
ஆனதாற் பூமியிலே ஆரொருவ ரானாலும்
மானமற வேநமக்கு மாற்றானாய்க் கண்டதுண்டால்
ஆய்ந்து விசாரித்து அறிவித்துச் சொல்லுமென்றான்
தேர்ந்துநின்று மந்திரியும் தீநீசக் குலமதினால்
பொல்லாத சூத்திரப் பிசாசுக் குலமதினால்
கல்லாதான் கூடிக் கண்டுதேர்ந் தேதுரைப்பான்
வேறொரு வரையும் மேதினியில் நாம்காணோம்
வாறோர் ஞாயமாற்றம் வையகத்தில் காணுதிப்போ
நமக்கு இறையிறுத்து நாடூழியங் கள்செய்யும்
குமுக்கா யினம்பெருத்த கூண்டசா ணாரினத்தில்
வைகுண்ட மாக வந்து பிறந்தோமென்று
மெய்கொண்ட பூமியெல்லாம் வேறொருவ ராளாமல்
நான்தான் முடிசூடி நாடுகெட்டி ஆள்வேனெனத்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 11131 - 11160 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

மையில்லை உலகத் தோரே வாழுமோர் நினைவா யென்றார்

விருத்தம்

இத்தனை யெல்லா மில்லை என்றரி நாதன் சொல்லப்
புத்தியி லறிந்து மண்ணோர் புதுமையென் றன்பாய் கண்டு
முத்தியி லிவரைக் கண்டு முயன்றவர் பேறு பெற்றார்
பத்தியில் லாதா ரெல்லாம் பாழெனச் சொல்லி நின்றார்

விருத்தம்

இப்படி மனுட ரெல்லாம் இவர்மொழி தர்மங் கண்டு
ஒப்புடன் கூடி வந்து ஒருவனே தஞ்ச மென்று
செப்பிடத் தொலையா தையா சீர்பதம் பதமே யென்று
நற்புடன் மனுட ரெல்லாம் நாடியே மகிழ்ந் திருந்தார்

கலியரசன் வைகுண்டரைப் பிடிக்க வருதல்

விருத்தம்

நாடியே யுலகி லுள்ள நருடகளோர் தலத்தில் வந்து
கூடியே நிற்கும் போது குறோணிதன் கொடியால் வந்த
சாடிக ளதினால் நீசன் சாகிற தறியா மீறி
பாடிய வைந்தர் தன்னைப் படையேவிப் பிடிக்க வந்தான்

விருத்தம்

வந்தவன் சுசீந்திரந் தன்னில் வளைந்து கூடார மிட்டு
மந்திரி மாரை நோக்கி வகையெனப் புகல்வா னீசன்
இந்தமா நிலத்தி லென்னோ(டு) எதிரிதா னாரோ சொல்வீர்
விந்தையா யவரைச் சென்று விருதிட்டு வருக என்றான்

நடை

நாடுங் குறோணி நாதவழி யாய்பிறந்து
மூட மடைந்த முழுநீச மாபாவி
இருந்த நகர்விட்டு எழுந்திருந்து தானேகி
வருந்தப் படையோடு வந்தான் சுசீந்திரத்தில் 
ஆனைத் திரள்கோடி அதிகப் பரிகோடி
சேனைத்திரள் கோடி சென்றார் சுசீந்திரத்தில்
சேவுகக் காரர் திலுக்கர் துலுக்கருடன்
ராவுத்தர் கோடி ராட்சதர்கள் முக்கோடி
சரடன் கரடன் சவுனி கெவுனியுடன்
முரட னுடனே மூர்க்கர் முழுமூடர்
படைக ளலங்கரித்துப் பார வெடிதீர்த்துக்
குடைக ளலங்கரித்துக் கொடிகள் மிகப்பிடித்து
வாள்கா ரர்கோடி வல்லயக்கா ரர்கோடி

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 11101 - 11130 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சங்கையுட னோர்தலத்தில் தண்ணீர் குடித்திருங்கோ
வாந்திருங்கோ நீங்கள் வைகுண்ட ருண்டெனவே
தாழ்ந்திருங்கோ வென்று தங்கள் கிளைபோலே
மிருக இனத்துக்கு இதுவுரைத்துப் பட்சிகட்கு
உறுதி யுடனே உரைத்தார்வை குண்டருமே
பட்சியெல்லா இனமும் பண்பா யொருஇனம்போல்
கட்சி யுடனே களிகூர்ந்து வாழ்ந்திருங்கோ
சிறிது பெரிது என்றுமிகச் சீறாமல்
உறுதி பெரிது உடையோனே தஞ்சமென்று
கூடிக் குலாவி குணமாய் மகிழ்ந்திருங்கோ
நாடி யுரைத்தார் நல்லபட்சி தங்களுக்கு
புல்பூ டானதுக்கும் பொறுதி மிகவுரைத்துக்
கல்வாரி தனக்கும் கனத்தசே டன்தனக்கும்
தங்கள் தங்களுக்கு தாழ்மை மிகவுரைத்து
மங்கள மாக மனமகிழ்ந்து வைந்தருமே
நாட்டுக்கு நம்முடைய நல்லதர்மத் தின்படியே
கூட்டுக்கு ஏற்றக் குருவுபதே சம்போலே
எய்யாமல் நாதன் எல்லோருந் தானறிய
செய்தர் மஞாயச் செய்திகே ளும்நடுவே

விருத்தம்

அன்னீதத் தாலே லோகம் அவனி யீரேழும் வாடி
குன்னியே கலியில் மூழ்கிக் குறுகியே யலைவர் கண்டு
கன்னிகள் மதலை யானக் கற்பகக் குலங்கள் தன்னில்
மன்னிய மனுப்போல் தோன்றி மன்னுகத் துதித்தார் தானே

விருத்தம்

உதித்தாயிரத் தெட்டாமாண்டில் உவரிசெந் தூரில்பெற்றுக்
குதித்தாண் டருள்மாசியில் தெச்சணா குருநாட்டினில்
பதித்தாமரை யூரினில் பள்ளிதான் கொண்டநாள்
விதித்தாமிதைத் கருத்தாய் அருளுரைத்தா ரறவுரையே

விருத்தம்

பொய்யில்லை பசாசு இல்லை பில்லியின் வினைக ளில்லை
நொய்யில்லை நோவு மில்லை நொம்பலத் துன்ப மில்லை
தொய்யில்லை யிறைக ளில்லை சுருட்டுமா ஞால மில்லை

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 11071 - 11100 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

ஒன்றுபோ லெல்லோரும் ஒருபுத்தி யாயிருங்கோ
காணிக்கை யிடாதுங்கோ காவடி தூக்காதுங்கோ
மாணிக்க வைகுண்டம் வல்லாத்தான் கண்டிருங்கோ
வீணுக்குத் தேடுமுதல் விறுதாவில் போடாதுங்கோ
நாணியிருக்காதுங்கோ நன்றிவுள்ள சான்றோரே
வைகுண்டருக் கேபதறி வாழுவ தல்லாமல்
பொய்கொண்ட மற்றோர்க்குப் புத்தியயர்ந் தஞ்சாதுங்கோ
அவனவன் தேடுமுதல் அவனவன்வைத் தாண்டிடுங்கோ
எவனெவனுக் கும்பதறி இனிமலைய வேண்டாமே
என்று வைகுண்டர் இராச்சியத்தி லுள்ளோர்க்குக்
கன்றுக்குமா தாஇரங்கிக் கற்பித்தது போலுரைத்தார்
எல்லோருங் கேட்டு எங்கள்வினை தீர்ந்துதென்று
நல்லோர்கள் முன்னே நவின்றிருந்த சொற்படியே
வருவார் வைகுண்டர் வந்தா லிருப்பவர்க்குத்
தருவார் கெதிகள் சாகாத வாழ்வுகளும்
என்றுசொல்லி முன்னோர் எங்கள்கா லமதிலே
நன்று திருமொழியை நாங்களுமே தான்கேட்க
எங்கள் கலிதீர்ந்து எம்பரனே யென்றுசொல்லி
சங்கை யுடனேபல சாதியெல் லாமறிந்தார்
நருளறிய தர்மமிதை நாட்டியே யென்பெருமாள்
துரித முடனே தொல்புவியில் வாழுகின்ற
பட்சி பறவைகட்கும் பலசீவ செந்துகட்கும்
அச்சு அரிமுதற்கும் ஆனமிரு கங்களுக்கும்
ஊர்வனங் களானதுக்கும் உதித்தபுற் பூண்டுகட்கும்
கார்சேட னாறுகட்கும் கரடுகல் லானதுக்கும்
உத்தரவாய்த் தர்மம் உரைக்கிறா ரன்போரே
சித்திரமாய்கேட்டு சிறந்திருக்கும் அன்போரே
மிருகமொடு மிருகம் மிகமகிழ்ந்து வாழ்ந்திருங்கோ
மறுக்கலச்சலிட்டு மாளாமல் வாழ்ந்திருங்கோ
உங்களுக்குப் புற்பூண்டு உண்டு மதைப்புசித்துச்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 11041 - 11070 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

துரோக மடைந்து தீநரகில் மாள்வீர்கள்
என்று சபித்தார் எம்பெருமா ளானவரும்
அன்று அவர்கேட்டு அப்படியே வந்ததென்றால்
சொன்ன நரகில் செத்திறந்து போவோமென
அன்னப் பெருமாள்முன் ஆணையிட் டுப்போனார்
போனா ருலகில் பிச்சைவேண் டிக்குடித்து
வானோ ரறிய மந்திரமா ஞாலமற்று
மந்திர வித்தை மாமுனிவன் சாஸ்திரமும்
தந்திரமும் போச்சுதென்று சகலோருங் கொண்டாடி
வைகுண்ட சுவாமி வாய்த்த கணக்கதிலே
மெய்கொண்ட வானோர் மிகஅறியத் தானெழுதி
மேலோக மான வைகுண்ட ராச்சியமும்
பூலோக முமறியப் பெரியோ னெழுதினரே

விருத்தம்


மாந்திரங் கழிவு சூன்யம் மாரணக் கருவு கோளும்
உபாந்திரக் கேடு தீதோ(டு) ஊறியப் பொய்பொல் லாங்கு
ஏந்திய நினைவு பாசம் இதுமுதல் வினைக ளெல்லாம்
சாந்தியி லெரித்து நீற்றித் தர்மத்தை வளர்க்க லுற்றார்

அய்யா தர்மம் கூறல்

நடை

நல்லநா ராயணரும் நாமமணி வைகுண்டராய்ச்
செல்லத் திருவுளமாய்ச் சீமைக் குறுதியுமாய்
மனிதவதா ரமெடுத்து வைகுண்ட வாசவனும்
பனிதவழும் பத்தினியாள் பாலருட வங்கிசத்தில்
தனுவையடக்கி தவசு இருந்துகொண்டு
ஒன்றாக்கி வாழ உலகமதிலிருந்து
உண்டாகி வளர்ந்து உலக மறிவதற்கு
குண்டணிப்பேய் பொய்யும் குறளிக்கரு வைத்தியமும்
ஆகா தெனஎரித்து அப்பிறப் புமறுத்து
வாகாகத் தர்மபதி வாழுங்கோ மானிடரே
என்றுசொல்லித் தர்மம் எம்பெரு மாள்நினைத்து
மன்றுபதி னாலறிய வாய்த்ததர்மங் கூறினரே
இன்றுமுத லெல்லோரும் இகபரா தஞ்சமென்று

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 11011 - 11040 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

என்று மலையரசர் எல்லோருஞ் சம்மதித்து
அன்று வைப்போமென்று அடிபணிந்து தெண்டனிட்டு
ஐயாவே யெங்களுட ஆதிநா ராயணரே
கையார வைக்கக் கருவுகொண்டு வந்தோமில்லை
ஏடுகொண்டு வந்தோ மில்லையே யெம்பரனே
வீடுவரைப் போயெடுத்து விரைவாக வாறோம்நாம்
என்றுரைக்க மந்திரத்தோர் எம்பெருமா ளேதுரைப்பார்
நன்று அதுதூரம் நம்முடைய கைக்குள்ளொரு
சூட்ச முண்டு பிள்ளாய் சொல்லக்கேள் நீங்களெல்லாம்
மாச்சல் படவேண்டாம் மலையரசா நீங்களெல்லாம்
எல்லா விதத்தொழிலும் இந்திரமா ஞாலமுதல்
எல்லாம் வைத்தோமென்று ஆணையிட் டாற்போதும்
நல்லதுவே யென்று நாடி மலையரசர்
வல்ல விதத்தொழிலும் மந்திரமா ஞாலமுதல்
எல்லா மடக்கி இப்போது வைத்தோமென்றார்
அய்யாணை யிட்டு அவர்முன்னே வைத்தார்காண்
மெய்யாணை யிட்டப் பொழுதே மலையரசர்
எங்கள் பிழைப்பு இப்போதே போச்சுதையா
தங்கடங்க ளொன்று தானிருக்கு தையாவே
இதினால் பிழைப்பு என்றிருந்தோ மித்தனைநாள்
விதியால் குறைந்ததுகாண் வித்தை பிழைப்பெல்லாம்
மலையில் பயிரிட்டு வயிறு பிழைப்பதற்கு
உலைவில்லா நொம்பலமும் உலாவுமிரு கச்சிறையும்
இல்லாமலே விலக்கி இப்போ தரவேணும்
நல்லாப் பயிர்விளைந்து நாங்கள் பிழைக்கவேணும்
என்று இவர்கேட்க இதுதந்தோ மென்றுரைத்தார்
அன்று அவரனுப்பி அவர்மலைக் கேகுகையில்
வைத்த தொழிலை மலையரசா நீங்களெல்லாம்
செயித்த தறியாமல் திருப்பியே செய்ததுண்டால்
நரக மதுபிடித்து நாள்வழியே கொன்னுகொன்னு

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 10981 - 11010 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

உந்தன் துயரம் ஒக்கஇப்போ தீரவென்றால்
எந்தன் மொழிகேட்டு இடைவீரோ நீங்களெல்லாம்
அப்போது மலையில் வாழு மலையரசர்
இப்போது சுவாமி என்னநீர் சொல்வீரோ
அதுக்கெல்லாம் நாங்கள் அல்லவென்று சொல்லோங்காண்
பொதுக்கெனக் கேட்டுப் புகல்வார் வைகுண்டருமே
மாந்திர தந்திர மாமுனிவன் சாஸ்திரமும்
உபாந்திர வாகடமும் உபாயச் சமூலமதும்
மாயக் கருவும் மாரண வித்தையதும்
உபாயக் கருவும் உயர்ந்தகரு மோடிகளும்
தம்பனவுச் சாடனமும் சல்லியம் பேதனமும்
வம்புசெய்யு மாஞால மந்திர மட்டகர்மம்
எட்டு மடக்கி இதுமுதலாய் மந்திரமும்
கட்டுடனே யிப்போ கருசமூ லத்துடனே
ஒக்கவைத்தோ மென்று ஓருடக்கா யுடக்கி
மிக்க என்முன்னே மேதினியீ ரேழறிய
ஆணையிட்டு வையும் அருமலையில் வாழரசா
நாணமிட்டுப் போகுமுன்னே நம்முன்னே வையுமென்றார்
உடனே மலையரசர் ஒக்க மனதலைந்து
குடலே மருண்டு குறுக முழிமுழித்து
வம்பறுக்க வந்த மாயக்கூத் தனெனவே
தம்பெலங்க ளற்றுத் தலைசாய்ந் துடனயர்ந்து
மாட்டோமென்றோ மானால் மலைமிருகங் கேளாது
வீட்டைப் பிரித்தெறிந்த மிருகம் விலகாது
குடியிருப்பு நமக்குக் குன்றுமே லங்குமில்லை
படியீரே ழளந்த பரமனம்மை யிங்குவிடார்
அய்யாவுரைத்த ஆணை வழிப்படியே
மெய்யாக வைத்து வீடுமட்டும் போயிருப்போம்
அல்லாதே போனால் அம்மலையி லிருப்புமில்லை
எல்லா மறிந்து இனிப்போவ துமரிது

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 10951 - 10980 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

உங்க ளுடதுயரம் ஓட வழிகேளீர்
தங்களுக்கு மெங்களுக்கும் சகலவுயி ரானதுக்கும்
நாயகமாய் வந்து நாட்டில் மிகஇருக்கார்
வாச மணக்குதுகாண் வையகங்க ளீரேழும்
பேரு வைகுண்டர் பெரிய திறவான்காண்
நேரா யிருப்பவர்க்கு நிச்சமாய்க் கைகொடுப்பார்
அவரைநீங் கள்கண்டு ஆனதுய ரமுரைத்தால்
தவிருந் துயரமெல்லாம் சுவாமியவர் தன்னருளால்
என்று குறத்தி ஈதுரைக்க நாகரசர்
நன்று குறத்தியுடன் நம்துயரஞ் சொன்னோமோ
சொல்லா திருந்திடினும் சொன்னாளே நம்துயரம்
எல்லாத் துயரமதும் இதினாலே தீருமென்று
சந்தோசங் கொண்டு சற்குறத்தி யையனுப்பி
வந்தார்கள் தெச்சணத்தில் வைகுண்டர் வாழ்பதியில்
கண்டுவை குண்டரையும் கரங்குவித் தேபணிந்து
பண்டுபட்ட பாட்டைப் பகர்ந்தா ரவருடனே
கேட்டு வைகுண்டர் கிருபையுட னேதுரைப்பார்
நாட்டுக் குடைய நாராயணர் பாலன்
பிறந்து வைகுண்டம் பெரிய யுகமாளச்
சிறந்து தவசு செய்யு முறைமையினால்
துக்கக் களையறுத்துச் சுத்தமரை யாளாக்கிப்
பக்கக் களையறுத்துப் பகைஞரொன் றில்லாமல்
ஒருசொல்லுக் குள்ளே யுகமழித் துகமெழுப்பி
இருசொல்லுக் குள்ளே இராச்சியத்தை யாளுதற்குப்
பிறந்துகொண் டிருக்கும் பெருமைக் கடையாளம்
இறந்ததுகாண் பேய்கள் இப்போது தந்திரமும்
போக நினைத்தேன் பெரியதெய்வ முந்தனைத்தான்
வேகந் தனிலே விடுத்ததுகா ணென்றன்முன்னே
நல்லது கைவாய்த்து நமக்குவிதி தானாச்சு
பொல்லாத தெல்லாம் போக விதியாச்சு.

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 10921 - 10950 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

விரட்டத் தொடுத்ததுகாண் மிருக மிகக்கூடி
அதட்டுப் பொறுக்காமல் அந்த மலையரசர்
ஓமந் தனைவளர்த்து ஒருகோடி பூச்சொரிந்து
ஆமா அரியெனவே அட்சரங்கள் தானெழுதி
புவனைவலிச் சக்கரங்கள் பீட மதில்நிறுத்தி
நமனை யழைக்கும் நல்லவலுச் சக்கரமும்
சத்தி நிறுத்தி சதாகோடிப் பீடமிட்டு
சுற்றிவர வோமம் சுழலக் கனலெழுப்பி
வேண்டும் படைப்பு விதம்விதமாய்த் தான்படைத்துக்
கூண்டு மலையரசன் குறளிகளைத் தான்வருத்தச்
சேவித்தான் மூன்று நாளாக மந்திரங்கள்
கோபித்துப் பார்த்தான் குறளிகள் தன்பேரில்
சற்றும் பலிக்காமல் சடைத்துமந்தி ரத்தோனும்
கற்றத் தொழிலும் கருவுங் கலைகலைந்து
என்ன விதமோ என்று மிகக்குளறி
மன்னன் மலையரசன் மார்கள் மிகநடுங்கி
எங்கே யினிப்போவோம் என்று மனம்பதறி
சங்கை யழிந்து சருவில் மிகஇறங்கி
தட்டழிந்து வாடி தவித்துநின் றேதுரைப்பார்
பட்டபா டேதெனவே பண்பாகக் கேட்பதற்குக்

குறத்தி வருதல்

குறத்தியொன்று காண்கிலமே குறிகேட்டுப் பார்ப்பதற்கு
உரைத்து அவரிருக்க உடையவ னாரருளால்
குறத்தி யொருத்தி குறப்பெட்டி யுமிடுக்கி
விறைத்துரைத்து வந்தாள் விசாரமிடு வோர்கள்முன்னே
கண்டார் குறத்தியையும் கலிதீர்ந்தோ மென்றுசொல்லி
வண்டாடுஞ் சோலை வனத்தில்வா என்றழைத்து
அருகி லிருத்தி அவளைமிக ஆதரித்துச்
சரிவிலுள்ள மாங்கனிதேன் தகையாற வேகொடுத்து
பசிதீர்ந்து குறத்தி பகர்வா ளொருவசனம்
விசியா யெனதுடைய பசிவிசா ரந்தீர்த்தீர்.

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 10891 - 10920 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

மலைதனிலே வந்து மாண்டசெய்தி தானறிய
இலையி லாடிட்ட இடையர்மிகக் கண்டுளறி
அய்யோபேய் மலையில் அலறிக் கரிவதுதான்
மெய்யாகக் கண்டு மிகப்பதறு தெங்கள்மனம்
அழுதுமுறை யிட்டுப்பேய் அக்கினியில் சாடுவதும்
முழுது மலைகள் முழக்கிக் கிடுகிடென
ஆடு மிகப்பதறி அம்மலையில் மேயாமல்
சாடுதுகாண் தரையில் சாரங்கள் சீமானே
என்று இடையர் இயம்பக்கேட் டெம்பெருமாள்
அன்று நருளறிய அவர்போ தித்தார்சாட்சி
கேட்டு மனுநருட்கள் கெட்டிகெட்டி யிந்தமுறை
நாட்டுக் குடைய நாரா யணரிவர்தான்
மன்று தனையளந்த மாயத் திருநெடுமால்
என்று பலரும் இயல்பா யறிந்திருந்தார்

விருத்தம்
ஆகமப் படியே பேய்கள் அதினுட வரங்கள் வாங்கி
லோகங்கள் அறியக் காட்டி யுகபர சாட்சி நாட்டி
வேகத்தில் மந்திர தந்திர விசையெல்லா மடக்க வென்று
நாகத்தி லுண்டு வாழும் மலையரசனை வருத்த வென்றார்

விருத்தம்

வருத்தவே வேணு மென்று மகாபரன் மனதி லுன்ன
விருத்தமாய் மலையில் வாழும் மிருகங்கள் கோப முற்றுத்
துரத்தலைக் கண்டு மெத்தத் துயரமுற் றயர்ந்து மந்திர
வருத்தலைச் செய்து பார்த்து மலைந்தன னரசன் தானே

மந்திரவாதிகளின் விசையடக்குதல்

நடை

மந்திர தந்திர மாமுனிவன் சாத்திரங்கள்
விந்தைசெய்யு மாய்மால விசையடக்க வேணுமென்று
நினைத்த வுடனே நெடுமலையில் தான்வாழும்
அனர்த்த மிடும்மிருகம் ஆனை புலிகடுவாய்
கடுகிக் கரடி கனத்தமந் திக்குரங்கும்
முடுகி யெழுந்து மூச்சுவிட் டேவிரைவாய்ச்
சீறி யெழுந்து சென்றுமலை யில்வாழும்
கூறித் தொழில்கடிய குன்றரசர் தங்களையும்

விளக்கவுரை :   
Powered by Blogger.