அகிலத்திரட்டு அம்மானை 10771 - 10800 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

பண்டா கமப்படியே பசாசையெல் லாமெரிக்க
என்மனதி லுற்றேன் இங்கேவந்து வாய்த்ததென்று
நன்முனியே பேயை நகன்றிடாக் காருமென்றார்
முன்னேநீ பேய்க்கு முதல்யா மியங்கொடுத்து
இந்நேரங் கூட்டி என்னிடத்தில் கொண்டுவந்தாய்
வந்தது நல்லதுதான் வாய்த்தமுனி யேயிப்போ
இந்தாப் பேய்க்கணக்கை எடுத்துரைக்கேன் கேட்டிருநீ
பொல்லாக் கலியன் பிறந்தநா ளன்றுமுதல்
நல்லவைகுண்டம் நாட்டில் வரும் வரையும்
எல்லாம் பேய்களுக்கு ஈந்தவர மானதினால்
வல்லவரான வைகுண்டபெம்மானும்
நீசன் கொடுமை நீணிலமெல் லாம்பரந்து
தேசச் சிறப்புச் சிதறிக் குலைந்ததெல்லாம்
வாயநா ராயணரும் வைகுண்ட மாய்ப்பிறந்து
ஞாய நடுகேட்டு நாட்டுக்குற்றந் தீர்த்து
ஆகாத்த தெல்லாம் அழித்துநர கத்திலிட்டு
வாகாய் நரக வாசல் தனைப்பூட்டி
நல்லோர்க்கு நாலு வரங்கொடுத் தேயெழுப்பி
பொல்லாரை நரகில் போட்டுக் கதவடைத்து
வல்லோரைச் சொல்லொன்றுள் வைந்த ரரசாளப்
பிறந்துபூ மிதனிலே பேறாக வந்தவுடன்
இறந்ததுகாண் பேய்கள் இவர்க்காகாப் பேர்களெல்லாம்
என்று பேய்களுக்கு ஈந்துவரம் கொடுத்ததெல்லாம்
அன்று பேய்க்கணக்கு வாசித்தா ராதியுமே
இம்மணியி லித்திவசம் ஈந்தவர மல்லாது
எம்மணியு மிப்பேய்க்கு எள்ளளவு மில்லையென்றார்
உண்டோகாண் பேய்க்கு ஒருமணிதா னானாலும்
கண்டோ முனியே கணக்குண்டோ சொல்லுஇனி
கேட்டு முனியும் கெஞ்சிமிக வாய்புதைத்து
நாட்டுக் குடைய நாரா யணருரைத்தால்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 10741 - 10770 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

முனிவாங்கிதந்த வார்த்தை முன்னாலே வையுமென்று
வரங்களையும் வைத்து மாண்டுபோங் கோவெனவே
துரத்தனமா யெங்களையும் துடர்ந்து பிடிக்கிறார்காண்
பதறியிங் கோடிவந்து பாட்டையும் மோடுரைத்தோம்
இதறு தனைத்தீர்த்து இரட்சிப்பீ ரென்குருவே
என்றுபே யெல்லாம் இப்படியே சொன்னவுடன்
அன்று தலையோடு அந்தமுனி தானடித்து
வைகுண்டம் பூமியிலே வந்து பிறந்தாரென்றால்
மெய்கொள் சிவன்முதலாய் மேல்பிறக்க வேணுமல்லோ
சத்தி சிவன்வரையும் சத்துப் பிறக்கணுமே
பக்தியில்லா கூளிகளே பகருவோமென்றாலும்
பொல்லாப் பிசாசுகளே புத்திகெட்டுப் போனீர்களே
வல்லாத்தா னல்லோ வைகுண்ட மாபொருளும்
அவர்நா மங்கேட்டால் அல்லவென்று சொல்வதுதான்
சீவபரன் முதலாய்ச் சிந்தை பதறணுமே
உங்களுட மூப்பு உகத்திலினி வாராது
எங்களுட மூப்புவரை இல்லையென்று போகுதுகாண்
எல்லா மவர்மூப்புக் குள்ளே யடங்குதுகாண்
பொல்லாப் பசாசுகளே பொன்றவிதி யுங்களுக்கு
ஆனாலு மீசர் அமைப்புக் கணக்கெடுத்து
நானே யிதுமேவித் தாறேனென் றிப்போது
இந்தக் கணக்கும் ஏழு யுகக்கணக்கும்
எந்தக் கணக்கும் இருப்பு மவரிடத்தில்
ஆனால் கணக்கை அவரிடத்தில் நாமள்போய்
நானாகச் சொல்லி நற்கணக் கும்பார்த்து
அறிந்துகொள்ள லாமெனவே எல்லோரும் போவோமென்று
மறந்துபோகாமல் மனதுள்மிக மகிழ்ந்து
நாரத மாமுனியும் நாட்டில்பே யத்தனையும்
காரண வைகுண்டர் காலில்வந்து தெண்டனிட்டார்
தெண்டனிட்ட போது சொல்வார் முனியுடனே

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 10711 - 10740 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

இகபரன் முதலா யிங்கே இருமெனச் சொல்லி வைத்துப்
பகைசெய்த கழிவை யெல்லாம் எரிக்கவே பரனங்குற்றார்

நடை

ஈசர்முதல் வானோர் எல்லோரும் போகரிது
வாச மலரோனும் மற்றோரும் போகரிது
என்று இவர்களையும் இவர்சூ ழருகிருத்தி
அன்றுபேய் கொண்டுவர அவர்நினைத்தா ரம்மானை
உடனே யுலகமதில் ஊர்ந்துதிரி யும்பேய்கள்
திடமே குளறி சிந்தை மிகக்கலங்கி
பேய்க ளொருதலத்தில் பிரமாண மாய்க்கூடி
மாய்கைத் தொழில்குளறி மனது மிகஅளறிச்
சீல முடனுரைத்த சிவவைந்த ராசர்மொழி
ஏலமேநாம் கேட்டு இருந்திலமே எல்லோரும்
என்னவோ வென்று எண்ணி நினைத்ததெல்லாம்
சன்னைபோ லாகாமல் சாக விதியாச்சே
அய்யோ கெடுத்தோம் அவர்பேரில் குற்றமில்லை
பொய்யென் றிருந்தோமே பெரியோ ருரைத்ததெல்லாம்
நம்பேரில் குற்றமல்லால் நாரணர்மேல் குற்றமில்லை
தம்பேரில் குற்றமல்லாமல் சாமிமேல் குற்றமில்லை
நமக்கு முன்னாளில் நாரத மாமுனிவர்
எமக்குயாமி யங்கொடுத்து அதிகவரம் வேண்டித்தந்தார்
அவரிடத்தில் நாமள் எல்லோரும் போயுரைத்தால்
சிவனிடத்தில் வந்து செய்திகேட் டேயுரைப்பார்
போவோம் வாருங்கோ பேய்க ளொருப்போலே
கோவேங் கிரிதனிலே குடியிருக்கும் மாமுனிவர்
அண்டை யவரணுகி அபயம் முறையமென்றார்
கண்டந்த மாமுனிவர் கழிவையெல் லாமமர்த்தி
அபயமிட்ட தேது அலகைகளே சொல்லுமென்றார்
கௌவை துயரமுற்ற கழிவெல்லாஞ் சொல்லலுற்று
மனுவுருப்போல் வையகத்தில் வைகுண்டம் வந்திருந்து
இனியுங்க ளையெல்லாம் எரிப்போ மிப்போதெனவே

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 10681 - 10710 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

விருத்தம்

வரவென வுரைத்த போது மறைமுதல் வேதன் வானோர்
துரகத மீதோ டாவிச் சீக்கிரம் வந்தா ரங்கே
பரமருள் வைந்த ராசர் பார்த்தவர் தன்னை நோக்கி
விரைவுடன் பேய்க்கு முன்னாள் விதிதனைப் பாரு மென்றார்

விருத்தம்

விதிதனைப் பார்த்து வேதன் விளம்புவான் வைந்த ரோடு
துதிகொடு எழுத்து மென்றன் சுருதியுங் கேண்மோ அய்யா
ஆதிநாரா யணர்தா னிந்த அழிகலி யுகத்தி லேதான்
பதிவை குண்ட மென்று வந்தன்றே யவர்கள் போனார்

விருத்தம்

பேயொடு பசாசு கூளி பொறாமையுங் கலியும் நீசம்
மாயொடு கபடு கள்ளம் மனக்கறுப் புகங்கள் தீர்ப்பு
பொய்யொடு மிரட்டு வஞ்சம் பிழைபொல்லாப் பென்ற தெல்லாம்
வாயொடு வாயால் கெட்டு மறுபிறப் பில்லாப் போனார்

விருத்தம்


நாரணர் வைகுண்ட மாகி நாட்டினில் வந்த அன்றே
காரண மெல்லா மாச்சு கலியுக மழிந்து போச்சு
பூரண வேத நூலும் புராணமுன் னாக மங்கள்
சாரமுங் கெட்டுப் போச்சு சதாசிவம் வைகுண்ட மாச்சே

விருத்தம்

அழிவதை யழித்துப் போட்டு அவரொரு சொல்லுக் குள்ளாய்
சுழிவரை யெழுத்தை யூனி தெய்வமா தவரு மாகி
வழிதனில் வன்னி யாகி வகுத்திடும் மகவோ ராகி
அழிவில்லாப் பதிதா ளாள்வார் ஆகமத் துரைதா னென்றார்

விருத்தம்

ஆனதா லாகா தென்ற அவ்வகைக் கிதுநாள் சாக
ஏனமு மிதுதா னென்று இயம்பிட வேதன் தானும்
மானமாய்க் கேட்டு வைந்தர் வானவர் சாட்சி யென்று
தானவர் கணக்கி லூனி சத்தியாய்ப் பதித்தா ரன்றே

விருத்தம்


கணக்கிலே யெழுதிக் கொண்டு கருத்தினி லடக்கி வைத்து
இணக்கியே யவரை யெல்லாம் இலக்குலக் கதிலே கொல்வோம்
பிணக்கியே கொல்லே னானும் பிசகில்லா வழியே செய்வோம்
குணக்கில்லாச் செய்வோம் பாரும் கோகிரித் தேவ ரெல்லாம்

விருத்தம்


உகசிவா வானோர் வேதன் ஒருவரும் போக வேண்டாம்
வகையுடன் நான்தான் செய்யும் வழிதனைப் பார்த்துக் கொள்ளும்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 10651 - 10680 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

என்று நருட்களறியும்படி உபதேசித்துக் கொண்டிருந்தார்
அதை  உலகோர் அறிந்தும் கேட்டும் முன்னுள்ள ஆகமமுஞ்சரி,
இவர் சொல்கிறதுஞ் சரியென்று ஒத்துக்கொண்டு
இவர்தான் வைகுண்ட சுவாமி யென்று கேட்டறிந்து,
இவர் தலத்திலே போவோமென்று வந்தார்கள்
பின்னும் நாராயண வைகுண்ட சுவாமிதானே,
பேய் பல சீவசெந்து ஊர்வனம்
புற்பூண்டு கற்காவே ரியறிய உபதேசித்தார்
எப்படி யென்றால், வல்லாத்தான் வைகுண்டம் பிறந்து
காணிக்கை கைக்கூலி காவடி
ஆடுகிடாய் கோழி பன்றி இரத்தவெறி தீபதூபம்
இலைப்பட்டை இது முதலானதென்றனக்கு வேண்டாம்
அவசியமில்லையென்று, தர்மம் நித்திச்சு நாடு குற்றங்கேட்க
நாராயணம் சிறையிருக்கும்போது, இனி ஆரேக்கார் என்று பார்க்க,
அதையறிந்து  நீங்களும்  ஒதுங்கியிருங்கோ வென்று உபதேசித்தார்,
உடனதுகளெல்லாம் அய்யாவாணை  நாங்களொன்றும்
ஏற்கமாட்டோமென்று சொல்லிப் போனார்
உடனே நாராயண வைகுண்ட  சுவாமி தானே 
ஓராண்டு ஒன்னரையாண்டு கழித்து உகஞ்சோதித்து வரும்போது,
பேய்  செய்கிற  அன்னீதம் பொறுக்காமல்
மானிடர் வைகுண்ட சுவாமியிடம் வந்து ஆவலாதி வைத்தார்
உடனே வைகுண்டராசரும் திட்டிச்சுப் பார்க்கும் போது
பேய்  செய்கிறது அன்னீதந்தான் என்றறிந்து
பேய்களுக்குள்ள முன்னாகமக் கணக்கைச் சோதித்துப் 
பேயை எரிக்கவேணு மென்று
நாராயண வைகுண்ட சுவாமி தானே மனதிலுத்தரித்தார்

பேய்களை எரித்தல்

விருத்தம்

பேய்கள்தான் பிறந்த வாறும் பெருவரம் பெற்ற நாளும்
மாய்கையால் உலகில் பேய்கள் வந்ததோர் நாளும் பார்த்து
ஞாயமாய் நடுவுங் கேட்டு நாமதை யெரிக்க வென்றே
ஆயர்முன் னெழுத்துங் கொண்டு அருள்முனி வரவே யென்றார்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 10621 - 10650 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சீமையைம்பத் தாறும் சொல்லொன்றுக் குள்ளாக்கி
மேன்மைச் சான்றோர்க்கு முத்திரிசெங் கோல்கொடுத்துத்
தாழ்வில்லாச் சான்றோரைத் தர்மபதி மீதில்வைத்து
ஆள்வதுவும் நிசமே ஆதியா கமப்படியே
நாரா யணர்க்கு நாள்பகையாய் வந்தவர்க்குப்
போரா தெனக்காலம் புராண முரைக்கிதுகாண்
சொல்லி யுலகோர் தொல்புவியில் கொண்டாடிப்
பல்லுயிரு மறிந்து பண்பாய் மகிழ்ந்திருந்தார்
மகிழ்ந்து சிலநாள் வைகுண்டர் பாதமதில்
மிகுந்துபல சாதிமுதல் மிகவந் துரைகேட்டார்
வந்த நருளறிய வைகுண்டர் வாய்திறந்து
சொந்தமுடன் வசனம் சொல்லிமிகக் கூறலுற்றார்

திருவாசகம் - 4

1008 ஆம் ஆண்டு மாசியில் கடற்கரையாண்டி
நாராயணம் பண்டாரம் தெச்சணம் பள்ளிகொண்டு
காணிக்கை கைக்கூலி காவடி முதல் என்றனக்கு
அவசியமில்லையென்று, தர்மம் நித்திச்சு,
கொற்றவரும் மாண்டு குறும்பு மிகத்தோன்றி,
உற்ற துலுக்கன் உடன் வந்துடனோடி,
மற்றொரு பத்தாமாண்டில் வைகுண்டம் வருவோ மென்ற
ஆகமத்தின்படி வந்து வைகுண்டம் பிறந்து கொண்டிருக்கும்
நச்சேத்திரத்தில் குதிச்சிக் கொள்ளுந்தன்னே,
மாளுவது மாண்டு கொள்ளுந் தன்னே,
முழிக்கப்பட்டது முழிச்சி கொள்ளுந்தன்னே,
முழிக்கப்பட்டது கண்டு கொள்ளுந்தன்னே,
ஒரு நெல் எடுத்துடைக்க நாடு கேட்டுக் கொள்ளுந்தன்னே,
இரு நெல் எடுத்துடைக்க நாடு தாங்காது தன்னே,
வானமும் பூமியும் கிடுகிடென்றாடிடுந் தன்னே,
வானத்திலிருக்கிற வெள்ளிகளெல்லாம் ஆலங்காய்போல்
உதிர்ந்திடுந்தன்னே, மலைகள் இளகிடும் தன்னே,
பதி எழும்பிடும் தன்னே, முழிக்கப்பட்டது கண்டுகொள்ளுந்தன்னே.

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 10591 - 10620 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

ஒருதலமாய் வந்து ஒன்றாய்க் குவிகிறதும்
கருதினமாய்ப் பார்த்து அவர்கள் மிகவுரைப்பார்
முன்னாள் மொழிந்த முறையாக மம்போலே
இந்நாள் சமைந்திருக்கு தென்று மகிழ்ந்துரைப்பார்
வைகுண்ட ராசர் வருவார்தான் பூமியிலே
மெய்கொண்ட ராசர் மேதினியில் வந்தவுடன்
சாதிபதி னெண்ணும் தலமொன்றி லேகுவிந்து
கோதிக் குளிக்கும் ஒருகிணற்றி லல்லாது
கர்மவியா திசெவிடு கண்குரு டூமையெல்லாம்
தர்மத்தால் தீர்த்தார் சகலவுயி ரானதுக்கும்
செல்வ முண்டாகும் சீமானார் வந்தவுடன்
அல்லல் மிகத்தீரும் அவரை யறிந்தவர்க்கு
எளியோர் வலியோர் எல்லா மொருப்போலே
பழியான பேச்சுப் பாரினில் கேட்கவிடார்
தேசமெல்லாம் பரக்கும் சீமானார் வந்தசெய்தி
தோசமெல்லா மகலும் சுத்தமாய்க் கண்டவர்க்கு
சார்ந்தவர்க்கு சாந்தனுமாய்த் தர்மங்கொடுத் தருள்வார்
சேர்ந்தவர்க்கு நல்ல செல்வமுண் டாகுமெனச்
சொல்லியிருந் தாகமத்தின் துல்யச் சுருதிப்படி
நல்லவை குண்டர் நாட்டில்வந்தா ரென்றுசொல்லி
சாதிபதி னெண்ணும் சடல வரவுமற்று
ஆதிவை குண்டர் அடிவீழ்ந் தேத்தியவர்
எல்லா மொருதலத்தில் இரண்டு மனுப்போலே
அல்லோரும் வந்தோர் ஆவிநீ ருண்டிருந்தார்
அல்லாமல் முன்னாள் ஆகமத் தின்படியே
எல்லாமுன் வியாசர் எழுதின சொற்படியே
தெய்வச்சான் றோர்களுக்குச் சேர்ந்த வியாழமது
மெய்வகையாய் வந்து மிகத்தோன்றி யேயிருக்க
இன்ன மிவர்வழியில் இயல்பாய் மணமுகித்து
மன்னர் வைகுண்டர் மகராச ராகியவர்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 10561 - 10590 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

முக்கிய மாக ஓடிவந்தா ரம்மானை
ஆகாயங் காணாது அறைக்குள் ளடைத்திருந்த
வாகா ஸ்திரீமாரும் வந்தார்கா ணன்போரே
கிழவன் முடவன் கெற்ப ஸ்திரீமாரும்
இளவயசு கொண்ட ஏந்துபச லைமுதலாய்
ஒக்கவே வந்தார்காண் உடையவனார் தன்னிடத்தில்
வந்த நருட்கெல்லாம் வாய்த்தவலு வியாதிமுதல்
சிந்தையுடன் தன்னால் தீர்த்தாரே தர்மமதாய்
ஐம்பது வயதாய் அரைதளர்ந்தப் பெண்ணாட்கும்
சம்பத்துக் கேற்ற சந்ததிகள் தான்கொடுத்தார்
உடல்தன மில்லாது உருவழிந்த பெண்ணாட்கும்
சடலமுருக் கொடுத்துச் சந்ததி யுங்கொடுத்தார்
பிறவிக் குருடூமை பேச்சறா நாக்குழறல்
திறவி யொளிபோல் திறமும் மொழிகொடுத்தார்
தர்மமில்லாப் பாவிகட்குத் தாண்மை மிகக்கொடுத்தார்
கர்ம வியாதிகளால் கால்கள்மொட்டிக் கைகள்மொட்டி
அந்தமொட்டி யெல்லாம் அறத்தா லதைத்தீர்த்துச்
சந்தமுடன் கைகால் தானாக்கித் தான்கொடுத்தார்
உடலை யுருக்கும் உற்ற சயஇருமல்
குடலைப் புரட்டும் குன்மவாய் வுமுதலாய்த்
தீர்த்துக் கெடுத்தார் தேசத்தோர் கண்டுமிகப்
பார்த்துப்பார்த் துமகிழ்ந்துப் பச்சமுற்று வந்தனர்காண்
கர்த்தாதி கர்த்தன் கடவுளா ரென்றுசொல்லி
என்தேசத் தோரும் இங்குவந்தா ரன்போரே
பதிணென் சாதிகளும் பண்பா யொருதலத்தில்
விதிவந்து தென்று மேவிக்குலா வியிருந்தார்
மேவிக் குலாவி மிகவே யொருதலத்தில்
ஆவிநீ ருண்டு அகமகிழ்ந்தா ரம்மானை
நொம்பலங்க ளெல்லாம் நிசமாகத் தீருவதும்
அன்பா யுலகில் ஆனதே சத்தோரும்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 10531 - 10560 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

நாமிருப் பதுவோ நாலு திரையதனுள்
ஆமவரே கண்டு அறிந்தா லதுவீதம்
இச்சொரூபத் துள்ளே இதுவிதிக்க வொண்ணாது
வச்சுகந்து பார்ப்பீரால் வழிதெரியு மிந்தேட்டில்
என்னமோ வென்று எண்ணம்வைத்துக் கேட்பீரால்
அன்னமுத லற்று ஆக்கினைக்குள் ளாவீர்
நல்லவர்கள் நல்லாவார் நானுரைக்கே னம்மானை
செல்லத் திருகேட்கச் செப்புகிறார் நாரணரும்

அய்யா மக்களுக்கு அருளல்

சீமையைம்பத் தாறு தேச நருட்களையும்
நேர்மை யொழுங்காய் நிமைப்பொழுதில் வந்திடவே
செல்லவை குண்டச் சீமானு மப்பொழுது
வல்ல தவமும் மனதுளரா தேமுடித்து
உலக நருட்கள் ஒக்கவொரு மிக்கவரத்
தலமளந்த நாதன் தானினைத்தா ரம்மானை
வடக்குக் கிழக்கு வடமேற்கு நேர்மேற்கு
நடக்கும் படியே நல்லதிக்கு நாற்றிசையும்
அடங்கல் குடியிருக்கும் ஆட்களெல் லாம்வரவே
சாணார் முதலாய்ச் சாதிபதி னெட்டையுமே
நாணாம லோடிவர நாரா யணர்நினைத்தார்
நினைத்த வுடனே நிமிசம் பொறுக்காமல்
தினந்தோறும் வந்து சேரும் நருட்களது
எண்ணக் கூடாது எவராலு மன்போரே
திண்ணமுள்ள சாதி செப்பொண்ணா தன்போரே
சாணா ரிடையர் சாதி வணிகருடன்
நாணாத காவேரி நல்லதுலுப் பட்டர்முதல்
சூத்திரன் பிரமா தொல்வணி கன்பறையன்
ஊத்திர நீசன் உழவ னுடன்குறவன்
கம்மாள னீழன் கருமற வன்பரவன்
வெம்மா நசுறாணி வேகவண்ட ரிடையர்
சக்கிலிய னோடு சாதிபதி னெட்டுகளும்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 10501 - 10530 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சீராக தெச்சணத்தில் சிறந்ததவஞ் செய்யலுற்றார்
ஆறு வருசத் துள்ளே யவர்நினைத்து
வாறு வகையெல்லாம் வந்து வழிப்படவே
நின்றார் தவசு நெடியநா ராயணரும்
குன்றாக் கடலில் கொண்ட வழிப்படியே
கடலில் மிகவே கண்டதெல்லாம் விள்ளாமல்
உடலுள் சூட்சம் ஒருவருக்குங் காணாமல்
அகமதுவே பூசித்து அதிகத் தவமிருந்தார்
தவப்புதுமை சொல்லித் தானுரைக்கக் கூடாது
ஈசர் முன்னாளில் இருந்தா ரொருதவசு
வாசக் குழலுமையை மதலை யுருவாக்க
வேட்டுவனுக் கீந்த விஞ்சைதனை நெஞ்சில்வைத்துக்
கூட்டுக் கிளியைக் குழந்தையுரு வாக்கவென்று
அத்தவந்தான் போதாது அய்யா இவர்தவத்தே
கற்றைக் குழலுமையாள் கரியமுற் காலமதில்
சூர னெனவந்தத் தோசப்பொல் லாதவனை
வீரத் தனமாய் வெட்டிச் சரமறுக்க
ஆறு முகமாய் அரியதொரு ஆண்பிள்ளைதான்
பேறுடனே நமக்குப் பிறக்கவே ணுமெனவே
சரவணப் பொய்கையிலே சாம்புவ னைநினைந்து
அரகரா அவள்தான் அன்றுநின் றதவமும்
இவர்தவத்துக் கொவ்வாது ஈசரரிலும் பெரிதாய்
அவர்தவமு மொவ்வாது அய்யா இவர்தவத்தே
சீதை தவசியதும் செப்பவொண்ணா தித்தவத்தே
நாத அரிச்சுனனும் நாட்டத் தவத்ததிலும்
எத்தனையோ கோடி இவர்தா னிருக்கும்தவம்
வித்தரிக்க வென்றால் வெகுமணிகள் சென்றிடுங்காண்
சொல்ல எளிதல்லவே சொன்னா லுலகிலுள்ளப்
பொல்லாத் பேரும் பொருந்தியிதைக் கேட்டாக்கால்
பாவந் தொலைந்திடுமே பாவிகட்கு மோர்நினைப்பாய்

விளக்கவுரை :   
Powered by Blogger.