அகிலத்திரட்டு அம்மானை 7261 - 7290 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

கேலி மிகவாகிக் கிலேச மிகவடைந்து
உதிர வெளியாகி உட்செருமல் விக்கலுமாய்த்
கெதியோவிதியென்று கேட்டுஇருக்கையிலே
தீனறா மந்தச் செடியேற்பச் செய்கையினால்
கானகமேநடக்க களைப்பா இருக்கயிலே
வீட்டை விரித்து மேலேதெய்வ வழியாய்
நாட்டையும் போட்டுக் குலபதவியுன் தனக்கே
என்று சிவனாரும் எம்பெருமாளு முரைத்து
அன்று ஏமச்சண்டன் அவ்வழியி லேயமைத்தார்
அமைக்க அணங்கும் அவனிதனி லேபிறக்க
எமக்குலத்தில் வந்து இயல்பாய்ப் பிறந்தனளாம்
மாது புவியில் வளரப் பிறந்தபின்பு
தாது கரமணிந்த சங்கு சரத்தாமன்
தேவன் தனைப்பார்த்துச் செப்புவா ரெம்பெருமாள்
பூவுலகி லுன்றனுட பெண்பிறக்கப் போனதல்லோ
ஏதுநீ தேவா இனியுனது செய்தியென்ன
சீரொத்தத் தேவன் திருப்பாட்டு ஓதலுற்றான்

விருத்தம்


ஆறுசெஞ்சடை சூடிய ஐயனே அலையிலேதுயி லாதி வராகவா
நீறுமேனி நிரந்தரம் பூசிவா நீசிவாசிவ மைத்துன ராகவா
வீறுசத்தி மணவாள ரானவா வீரலட்சுமி மன்னரரி ராகவா
ஏறுமீதினி லேறிடு மீஸ்வரா எமையாட்கொள் ளும்நாரணா போற்றியே

விருத்தம்

சீதமாங்குணச் செல்வனே போற்றி சிவசிவா சிவனே போற்றி
நீதவா நட்பெய்துவா போற்றி நீசிவா சிவராகவா போற்றி
மாதவா அரிகேசவா போற்றி வல்லனே அரிசெல்லனே போற்றி
ஆதவா அரிநாரணா போற்றி அனாதியேயுன் றன்போற்றிப் போற்றியே

விருத்தம்

அய்யனேதவம் யானிற்கும் போதிலே அந்திராணி மன்னனிந்திர னானவன்
பொய்யின் மாய்கைநினை வதினாலவன் பொற்பக்கிரீடமீ துற்பனத் தாசையால்
மெய்யின்ஞா னத்தவம் விட்டுவாடினேன் வித்தகாவுன் சித்த மிரங்கியே
செய்யும் பாவவினை தவிர்த்தாண்டருள் சிவசிவா சிவசிவா சிவாபோற்றியே

விருத்தம்


போற்றியென் றேத்தித் தேவன் பொற்பதம் வணங்கி நிற்க

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 7231 - 7260 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

மெட்டுக் கொடியிடையே மின்னிடையே நீகேளு
உன்புருஷ னங்கே உற்றஎம லோகமதில்
இன்புருகி வாடி ஏங்கித் தவிப்பதினால்
அவனைநீ மறந்து ஆனதெய்வப் பூரணனை
இவனை மிகத்தாவி இருந்த தவமதிலும்
நிறைவேற மாட்டாமல் நினைத்தகே டித்தனையால்
பிறபோநீ பூமிதனில் பெரியசான் றோர்வழியில்
எமவழியி லோர்பிறவி என்மகவா யங்கிருக்க
அமைப்பா னதற்கு அவ்வழிதா னாயிழையே
இந்தத் தவக்குறைக்கு இன்னமங்கே நீபிறந்து
முந்தப் புருஷனுக்கு முன்வேலையுங் கழித்து
அழுந்தத் துயரப்பட்டு அவனூழியங்கள் செய்து
குளிர்ந்த மொழியற்றுக் கூடுஞ் சரசமற்று
எந்நேர முன்றனக்கு ஏக்கமுட னழுந்தி
மின்னேகே ளிந்த மிகத்தேவ னுன்வழியில்
கொண்டபச்சத் தாலே கோதைய ரேயுனையும்
கண்டிச்சை கூர்ந்து கர்மக் கடுவினையால்
கருவா லுருவைக் கைக்குள் வசமாக்கிப்
பருவா பருவமதில் பாவையேநீ யிவனோடு
இருவ ரொருவரென இச்சைமிகக் கூர்ந்து
குருவை மறந்து கொண்டவனைத் தான்மறந்து
தாய்தகப்பன் மாமன் தமையன் தனைமறந்து
வாயிற் படிமறந்து வாழ்வை மிகமறந்து
சொந்த மனைமறந்து சுகசோபன மறந்து
சந்தோச மற்று சகலோர்க்கும் நாணமுற்று
முற்புரு ஷன்தனக்கு மூலக்கருக் கேடணைத்து
இப்புருஷன் தானெனவே எவ்வுலகுந் தானறியக்
கட்டிய மங்கிலியம் காசினியோர் தாமறியக்
கெட்டினாற் போலே கீர்த்தி மிகப்பிறந்து
மேலும்பல தொந்தரவு மிகுநாள் வழிதோறும்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 7201 - 7230 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

என்றுசொல்லித் தேவன் ஏற்ற விருத்தமதாய்
நன்றினிய முப்பொருள்மேல் நற்போற்ற லேபடிக்கப்

விருத்தம்

காரணா அரிநாரணா கருணாகரத்தருணா
வாரணா வெகுபூரணா வந்தாய் அருள்செய்வாயே
நாரணா பரிபூரணா நான்செய்த குற்றம்பொறுத்து
காரணா வைகுந்தம் கருத்தாய் அருள்வீரே

நடை

பரதே வதையான பைங்கிளியு மப்போது
திரமான தாயார் சிவசக்தி பேரதிலும்
சிவநாமப் பேரதிலும் ஸ்ரீகிருஷ்ணர் பேரதிலும்
விவமான ஆசிரிய விருத்தம்போல் போற்றலுற்றாள்

விருத்தம்

காரணா அரிநாரணா கவிபூரணா வெகுதோரணா
கவிஞோர் தொழும் வாரணா கருணகரத் தருணா
வெகு தருணா கவிவருணா கவிமால் சிவாபோற்றி
காயாம்பூவின் மேனிநிறமாயா சிவசிவாயா
கருவா யுருவுருவா யுனைத் தினமேயருள் மாயா
குறிமத்தகா கருணாகரா போற்றி
குணசீரா வெகுதீரா நவிவீரா புவிநாதா
தருணா கருணா இந்த்தருணம் வந்தாலே
கருவாய் உருத்திரண்டு கருத்தாய் வளர்ந்துஅன்று
இருந்தாய் எமலோகம் ஈசர்மாயிதான்என்று
திருவுருவம் கொண்டு சிவனும்நீரும் வந்ததினால்
திருவோடுறு மார்பா சிறியார்மிக தறியாச்செய்த
வெறியானதைச் சிறிதாக்கியே சேர்ப்பாய்
முகம்பார்ப்பாய் முடிவானதை யறியாமலே
மோகமாய் வெகுதாகமாய் உளறித் தவங்குளறியே
உன்சொற்பதம் அஞ்சல்லென
ஒஞ்சிப்பத மஞ்சினோம் உன் செயல்தந் தருள்வாயே

நடை


இப்படியே கன்னி ஏற்றபர தேவதையும்
முப்படியே யாசீர் விருத்தமொன்று பாடிடவே
கேட்டு அரிநாரணரும் கிளிமொழியைத் தான்பார்த்து

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 7171 - 7200 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

இப்படியே மானாளும் ஏற்றசம் பூரணனும்
அப்படியே வந்தோர் அடிபணிந்து போற்றிடவே
மாய பரனும் மனமகிழ்ந்து கொண்டாடி
ஆயனைப் பார்த்து அருளுவா ராதியுமே
மாயவரே கேட்டீரோ வாய்த்தஇத் தேவனுந்தான்
தூயவரே நின்றதவம் துலைத்தறுத்தா னில்லையிவன்
முற்றுந் தவமும் முழுதும்நிறை வேறுகையில்
சிற்றின்ப மாகித் திருமுடிமே லிச்சைகொண்டு
வாடி யயர்ந்தான் மங்கையருந் தேவனுமே
நாடி யிவன்தனக்கு நல்வளமை யேதுசொல்வீர்
அப்போது நாரணரும் அகமகிழ்ந்து கொண்டாடிச்
செப்புகிறா ரந்தச் சிவனோடு எம்பெருமாள்
ஏது விதமாய் இருந்ததவ மேகுறைய
தீதுவந்த ஞாயம் செப்பிடீ ரென்றுரைத்தார்
அப்போ சிவனார் அகமகிழ்ந்து தேவனோடு
இப்போ துன்சிந்தை எண்ணமெல்லாஞ் சொல்லுவென்றார்
தேவ னதைக்கேட்டுச் சிந்தை மிகக்கலங்கி
ஆவி மறுகி அவனேது சொல்லலுற்றான்
காரணரே நாங்கள் கருத்தில் நினைத்ததெல்லாம்
பூரணமா யங்கே புகுந்துதோ யென்சிவனே
ஐயோநான் சொன்னேனென் ஆயிழையோ டல்லாது
கையோ கண்ணாலே காணேனே மற்றொருவர்
ஊமை மொழிபோல் ஒதுக்கி லுரைத்தாற்போல்
நாமறியப் பெண்ணறிவாள் நாடறியா தென்றிருந்தோம்
இவர்க ளறிவதற்கு யார்சொல்லிப் போட்டாரோ
எவர்களும் நாம்பேசுகையில் இங்குவரக் காணோமே
ஆர்சொல்லிப் போட்டாரோ அறியோமே யென்சிவனே
தார்சிறந்த என்சிவனே சர்வ தயாபரனே
பூரணனே வாசவனே பொறுத்தினிக் கொள்ளுமையா
நாரணரே என்சிவனே நாடிப் பொறுவுமையா

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 7141 - 7170 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

மானே கேளிந்த வானவர்கோன் தன்சிரசில்
தானாகிய மான சங்குசரத் தங்கமுடி
என்தலையி லேவைத்து ஏந்திழையே உன்னோடு
தென்தலைவ ரத்தினச் சிங்கா சனமீதில்
இருபேரும் வாழ்ந்து இராச துரைத்தனமாய்ப்
பெருக்கான தெய்வகன்னி பெற்ற மனுவழியை
எல்லா மருகிருத்தி ஏற்றவொரு சொல்லதுக்குள்
வல்லான நீத வையகத்தை யாண்டிருந்தால்
எத்தனையோ நாமள் இலங்கு மகிழ்ச்சையுடன்
வர்த்தனையாய் வாழ்வதற்கு வாய்த்தமுடி ஈதல்லவோ
என்றுசொல்லத் தேவன் இச்சைகொண்டு பெண்ணாளும்
நன்றுநீர் சொன்னமொழி நல்லா யிருக்குதுகாண்
அப்படித்தா னம்மை ஆதிசிவன் படைத்தால்
இப்படியும் படைத்தோர் இறவா திருப்பாரோ
என்றுபெண் ணாளுரைக்க ஏற்றசம் பூரணனும்
அன்று பெருமூச்சு அலைபோ லெறியலுற்றான்
அந்தப் பொழுதில் ஆதி சிவமுதலும்
வந்தங்கு நின்றார் மாகிருஷ்ண மாலவரும்
கண்டந்தத் தேவன் கைமறந்த நிஷ்டையோடு
தண்டமிழ்சேர் பதத்தைத் தையலும்வந் தேவணங்கி
இத்தனைநாள் யாங்கள் நின்றதவம் கண்டிரங்கிச்
சித்த மிரங்கிச் சிவனேநீர் வந்தீரோ
எந்தன் பெருமானே இறையவரே வந்தீரோ
நந்தகோ பால நாரணரே வந்தீரோ
குருவே அரிநாதா கோபாலா வந்தீரோ
முருகக் குருபரனே முத்தாநீர் வந்தீரோ
செல்வக் கடலே சீமானே வந்தீரோ
கல்விக் கடலான கறைக்கண்டா வந்தீரோ
அரவணிந் தத்திவுரித்(து) அணிந்தோரே வந்தீரோ
பரமசிவ மான பச்சைமால் வந்தீரோ

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 7111 - 7140 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

நாட்டி லிருப்பேனோ நம்முடைய மைத்துனரே
சீதை மகரச் சிலைபோ லங்கேவளரப்
பாதையது தேடாமல் பதிந்திருக்க ஞாயமுண்டோ
அப்போ துசிவனார் அவரேது சொல்லலுற்றார்
செப்போடு வொத்த திருமாலே நீர்கேளும்
நடத்தும்படி யுள்ள ஞாயமெல்லா மிப்போது
சடைத்து இருக்காமல் தானடத்து மென்றுரைத்தார்

சம்பூர்ணத் தேவன் பரதேவதை மனுப்பிறப்பு

அந்தப் பொழுதில் ஆதிநா ராயணரும்
சிந்தை மகிழ்ந்து செப்புவா ராதியோடு
நல்லதுகா ணீசுரரே நாடுந்தே வாதிகளில்
வல்லசம் பூரணனும் வாய்த்த எமலோகமதில்
பரதே வதையான பைங்கிளியுந் தேவனுமாய்
மருவனைய மாதும் மன்னவனு மாய்ப்பிறக்க
உருவேற்றி நம்மை உயர்ந்ததவஞ் செய்திடவே
ஆனதா லவரை அவனிதனி லேபிறவி
ஈனமுட னமைக்க இதுநா ளாகுவதால்
நின்றந்தத் தேவனுட நிஷ்டைநிறை வேறினதோ
என்றெனவே பார்க்க எழுந்தருளு மீசுரரே
அப்படித்தா னீசுரரும் ஆதிநா ராயணரும்
இப்படியே தேவனிடம் ஏகின்ற வேளையிலே
தேவ ரெதிரே தெய்வேந் திரன்தானும்
மூவர் நடுவன் முத்தனரி நாரணரின்
சங்கு சரம்போல் தங்கநவ ரத்தினத்தால்
எங்கு மொளிவீசும் இரத்தினத் திருமுடியைச்
சூடித்தெய் வேந்திரனும் சிவனெதிரே போகவென்று
நாடி யகமகிழ்ந்து நாராயணருடனே
சந்தோச மாகத் தான்வருகும் வேளையிலே
முன்தோசத்தால் தேவன் முடியணிந்த இந்திரனைக்
கண்டுசம் பூரணனும் கைமறந்து நிஷ்டையது
பண்டு மையலாய்ப் பாவையோ டேதுரைப்பான்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 7081 - 7110 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

மடமடென வந்து வாரியெடுத் தாயிழையைச்
செந்தூ ரலைவாரி திரைமே லெடுத்திருத்தி
அந்தூரு வாரி அம்மை தனையெடுத்துச்
சந்தன வாரி சமுத்திரத்தி னுள்ளிருத்திப்
பந்தியாய் வைத்த பரமமணிக் கோட்டையதுள்
தெய்வரம்பை சூழத் தேவரெல்லா மோலமிட
மெய்பரமக் கன்னியர்கள் மிகுவாய்க் குரவையிட
இடம்மான மெக்காளம் டகுடகா வென்றிடவே
மடம்மான வாத்தியங்கள் மடமடென வேயதிர
வலம்புரிக ளெல்லாம் மாதுவந்தா ளென்றூத
சிலம்புனைந்த ரத்தினங்கள் சில்விளக் கேந்திநிற்க
முத்துகள் சிப்பி முன்வந் தொளிவீச
கொத்துக் கொத்தாகக் கோமேதகஞ் சூழ
கன்னிமா ரெல்லாம் கால்கவரி வீசிநிற்க
தன்னிகரில் லாமறையோர் சாஸ்திரங்க ளோதிநிற்க
மகரச் சிலையாள் மாதுதிரு லட்சுமியாள்
சிகரகோ புரத்தாள் திருவுருவந் தான்வளர்ந்தாள்
பார்பதி மாதுமையும் பரமேஸ்வரித் தாயும்
சீர்பதியு மங்கே தினமூன்று நேரம்வர
ஈஸ்வரனும் வேதா இவர்கள் தினம்வரவே
வாசவனும் வானவரும் வந்துநிதம் போற்றிசெய்ய
செய்ய அமரரெல்லாம் சிவசிவா வென்றுநிற்க
வெய்யவனுஞ் சந்திரனும் மெல்லிபதம் போற்றிநிற்க
புஷ்ப மலர்தூவிப் பொன்னுலகத் தோர்சூழ
செப்பமுள்ள மகரச் சிலைபோல் திருவளர்ந்தாள்
மாதுதிரு லட்சுமியாள் மகரச் சிலைபோலே
ஒது மணியலைக்குள் ஒவியம்போ லேவளர
மாதை மகரச் சிலையாய் வளரவிட்டுத்
தாதணியும் நாதன் சங்கரரோ டேதுரைப்பார்
கூட்டுக்கிளி போலிருந்த கொடியிடையைப் போகவிட்டு

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 7051 - 7080 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

பண்டுள்ள சூரியர்கள் பதிந்திருக்கு மென்விழியில்
நெற்றி தனில்பிறையும் நெடியவட அக்கினியும்
சுற்றிக் கனல்மேனி துய்யமாற்றெண் ணாயிரமாம்
பளிரெனவே லோகம் பதினாலுக் கோருருவாய்த்
துளிரெனவே வாரிச் சூழல வெகுகனலாய்க்
காதம் பன்னிரண்டில் கண்டகலி யன்றெரிய
தீதக் கனலாய்ச் செயகுண்டமும் பதித்துக்
காலில் தர்மமணியைக் கலிரெனவே தண்டையிட்டு
மேலில்பல வேதமதை மின்னுடம்பாக விரித்துப்
பெண்ணரசே நான்வருகும் பெருமைக் கடையாளம்
கண்ணரசே நீயுமென்மேல் கருத்திருந்தால் பிழைப்பாய்
இப்படியேநான் உன்னருகே வருவேன்காண்
அப்படியே அங்கிருந்து அன்றுதவசு பண்ணி
நாரணரை வைகுண்டராய் நல்மகவாய் எடுத்து
சீரான தெட்சணத்தில் சிறையுமிருக்க வைத்து
நாட்டுச் சோதனைக்கு நாமனுப்பித் தாம்பார்த்துக்
கோட்டிசெய்த பாவி குறுங்கலியைத் தானெரித்து
அதின்மே லுனக்கும் எனக்குமிகு ஆனந்தம்
மதுவாக ஈன்ற மதலைநா டாளுமடி
என்று பிறவிக்கு ஏற்றஅடையா ளமுரைத்து
நன்றினிய மாதே நடப்பதற்குச் சங்கடமேன்
உடனேதான் லட்சுமியும் உரைக்கிறா ளாதியுடன்
திடமான கோவே செய்ய மணிவிளக்கே
என்னை மகரச் சிலைபோல் பிறவிசெய்ய
என்ன விதமாய் இசைவீர்கா ணென்கோவே
என்றுரைக்க அம்மை ஏதுரைப்பா ரெம்பெருமாள்
நன்றுநன்று பெண்ணே நமக்குத்தொழி லோகடிது
அலையி லுனையும் ஆமதியப் பொன்மகரச்
சிலைபோல் வளருவெனச் சிந்தித்தா ரெம்பெருமாள்
வடகயிலை வாசலிலே வந்தலைந்த வாரிதிரை

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 7021 - 7050 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

தேனினிய மண்டபமும் தேரும்பூங் காவனமும்
சூழ அரங்குவைத்துத் தெய்வரம்பை சூழவைத்து
காளமொடு பேரிகையுங் கண்ணாளர் சூழ்ந்துநிற்க
அகரத் தெருவும் அரம்பையர்கள் தந்தெருவும்
சிகரத் தெருவும் சேர்த்துவைப்பே னுன்சூழ
நித்தம் வலம்புரிகள் நின்றுவுனைச் சூழ்ந்து
தித்தியென வேமுழங்கி சேவிக்க வைத்திடுவேன்
கோட்டைகள் சூழக் கோடிமண்டப முகித்து
வீட்டலங் காரம்போல் வேலையிலுந் தருவேன்
உந்தனுட மேனி உரைக்கெளிதாத் தங்கமெனச்
செந்தழல்போல் மகரச் சிலைபோல் வளர்ந்திருநீ
நானும்சிவமும் நல்தவசியிலே வருவோம்
நீனும் தவமிருந்த நிலமையதுகேட்டு
நாரணரை வைகுண்டமென நம்மகவாய் தானாக்கி
சீரான தெச்சணத்தில் சிறையும் இருக்கவைத்து
நாட்டு நருளின் நகர்சோ தனைபார்த்துத்
தீட்டுக் கலியறுத்துச் செவ்வுமனு தானெடுத்துத்
நாடுன் மகன்றனக்கு நல்லமுடியுங் கொடுத்துத்
தேடுந் தர்மச்சீமை செலுத்தசெங் கோல்கொடுத்து
அரசாள வைக்கவொரு ஆண்பிள்ளை நீபெறவே
துரைசானி போவெனவே சொன்னார்கா ணம்மையுடன்
கேட்டுமிக லட்சுமியும் கிளிமொழிவாய் தான்திறந்து
நாட்டுக் குடையவரே நாரா யணப்பொருளே
மகரச் சிலையாய் வாரிதனில் நான்வளர்ந்தால்
சிகரநற் கோபுரமே திருவுளமே நீர்தானும்
வருகுவ தென்னவித மாக வுருவெடுத்து
அருகில் நீர்வருக அடையாள மென்னவென்றாள்
அப்போது அய்யா ஆனந்த மேபெருகி
செப்புகிறோ மென்று திருவோ டிதுவு ரைக்க
மூன்று சடையில் முறுக்குச்சடை யொன்றெனவும்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 6991 - 7020 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

வல்லப் பொருளே மறைகாணா தோவியமே
காளி சிறைதான் கவிழ்ந்திருக்கும் ஞாயம்வந்தால்
ஆழிவளை வையகத்தில் ஆர்க்குச் சுகம்வாய்க்கும்
முதற்றான் கலியை முடிக்கப் பரகாளி
விதத்தமுள்ள அக்கினியில் மிகவே சிறையிருக்கப்
பார்த்துநா மிங்கிருக்கப் படுமோகா ணீசுரரே
சாற்றும்நீ ரின்னதென்று சத்திகொண்ட ஈசுரரே
உடனேதான் ஈசர் உரைக்கிறா ரன்போரே
கடனோகா ணென்னோடு கலங்குமொழி பேசுவது
நானோ தடுத்தேன் நாட்டுக்கலி தீட்டறுக்க
ஏனோகாண் மைத்துனரே என்னோடு பேசுவது
எப்போ கலியழித்து எங்களுக்கு நற்பேறு
எப்போ தருவீரென்று எண்ணிமிக வாடுறோமே
தீட்டை மிகக்கழித்துச் சிவஞான முத்திதந்து
வீட்டையெப்போ கயிலை விளக்குவீ ரென்றுமிக
தவித்து முகம்வாடித் தானிருக்கும் ஞாயமதும்
குவித்து முகம்மலர்ந்து கொள்ளுவதுங் காணலையோ
என்றே காபரமும் எடுத்துரைக்க எம்பெருமாள்
நன்றென்றா கட்டெனவே நாரணருங் கொண்டாடி

மகாலெட்சுமி மகரமாதல்

லட்சுமியைத் தானழைத்து ஏதுரைப்பா ராதிமுதல்
சச்சுடராய் நின்ற தருணத் திரவியமே
இதுமுன் பிறப்பு இருந்தா யுருப்பிணியாய்
மதுவினியப் பெண்ணே மாயக் கலியறுக்க
நான்நிச்சித் திருப்பதினால் நாயகியே நீயுமொரு
பூனிரைச்சப் பொன்மகரப் பெண்மயில்போல் நீவளர
அலையி லறுமுகவன் அவன்பதியி னாழிதனில்
நிலையிலே நின்று நீவளரு கண்மணியே
நீவளரச் சூழ நிறைந்ததங்க மாமணியால்
பவளக்கால் மண்டபமும் பவளமணி மேடைகளும்
ஆனிபொன் வைரம் அதுவளரும் மண்டபமும்

விளக்கவுரை :
Powered by Blogger.