அகிலத்திரட்டு அம்மானை 6181 - 6210 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சுரைக்கூடிட் டேதிரிவான் சுத்தநாற் பத்திரண்டான்
நாற்பத்தி மூன்றான் நத்தைச்சூரி விதையை
தாற்பத்தி யமெனவே தானிருப்பான் கண்டாயே
விராலி யிலையும் விளாங்காய் வெறுந்தோடும்
நிராதனமாய் வைத்து நித்த மருந்துவன்காண்
நாற்பத்தி நாலான் என்றே யிவனையறி
நாற்பத்தைந் தானுடைய நல்விபரம் நீகேளு
பூப்பறித்துத் தின்று பூனைமொழி பேசிடுவான்
நாற்பத்தாறாஞ் சன்னாசி நல்ல விபரம்கேளு
பேய்க்குமட்டிக் காயைப் பிசைந்து விரைதானெடுத்து
நாய்க்குணம்போல் தின்பான் நாற்பத்தி ஆறானும்
எருமை யுடமோரும் எள்ளெண்ணெ யுங்குடித்து
நருநரெனப் பேசிடுவான் நாற்பத்தி யேழானும்
மருளான பெண்ணை மனதில்வை யோமெனவே
இருளான போது இந்தநினை வாயிருப்பான்
காமத்தைத் தன்னால் கழியவிட் டேவாடி
நாமத்தைப் பேசான் நாற்பத்தி யெட்டானும்
புகையிலையைத் தீயில்வைத்துப் புகையு மிகக்குடித்து
நகம்வளர்த் தேயிருப்பான் நாற்பத்தொன் பான்தானும்
அன்பதாஞ் சன்னாசி அரசியிலை மேலிருப்பான்
மண்புரளத் தான்கிடந்து மாஜலங் குடித்திருப்பான்
அன்பத் தொன்றானும் அலைவாய்க் கரைதோறும்
புண்ணியத் தீர்த்தமெனப் போயாடி யேதிரிவான்
நீல மவரி நித்தஞ்சா றேகுடித்து
ஆலம் பலகையிலே ஐம்பத்திரண் டானிருப்பான்
சுக்குப் பொடியைத் தினந் தினமெயருந்தி
அக்குமறு கணிவான் ஐம்பத்தி மூன்றானும்
ஐம்பத்தி நாலான் அசுரக்கா வடிவைத்துக்
கெம்பித் திரிவான் கீரித்தோல் காலிலிட்டு
விளியிட் டேயாடி வெற்றிகொண் டேதிரிவான்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 6151 - 6180 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

நாணமில்லா தேதிரிவான் நல்லிருபத் தெட்டானும்
சூலம் பிடித்துச் சுழியெழுத்தை மேலூன்றி
கோலமிட் டேதிரிவான் கூறிருபத் தொன்பானும்
முப்பதாஞ் சன்னாசி முச்சந்தி தான்பார்த்து
அப்புச் சிரங்குபற்றி அவன்கிடப்பான் சந்தியிலே
ஓர்முப்பத் தொன்றான் ஊமையென வேதிரிந்து
கூர்மையுள்ள காது கொஞ்சமுங்கேளாத் திரிவான்
முப்பத்தி ரண்டான் உயர்ந்ததிடில் தான்பார்த்து
சர்ப்பத்தின் நஞ்சு தானுண்டோ மென்றிருப்பான்
நன்றா யறிந்திடுநீ நல்லமுப்பான் மூன்றானையும்
கண்டா லறிந்திடலாம் கண்ணில் வெளுப்புமுண்டு
தொண்டையில் சடம்புகட்டித் தொல்புவியி லேதிரிவான்
மண்டை வகுப்புமுண்டு வாய்த்தமுப்பத் தினாலான்
முப்பத் தைந்தானும் முயலகன்போ லுண்டாகி
எய்ப்பிளைப்பார் போலே இவன்திரிவான் கண்டாயே
செப்பமுள்ள முப்பத்(து) ஆறான் செய்தியைக்கேள்
புஸ்பமீதிற் படுத்து பூவையர்கள் தாலாட்ட
அற்பமுட னாடை அணியாமல் தானிருப்பான்
முப்பத்தி யேழாஞ் சன்னாசி யானவனும்
அகத்தி யிலையருந்தி ஆனைத்தோல் மேலிருந்து
மகத்துவமாய்ப் பேசி மாள்வான் முப்பத்தேழான்
கொல்ல மிளகு குறுணியொரு நாளருந்தி
பல்லைமினுக் காதிருப்பான் பார்முப்பத் தெட்டானும்
சோறு குழையவைத்துச் செவ்வலரிப் பூவிலிட்டு
ஆறுமுன் பூவோடு அருந்துவான் முப்பத்தொன்பான்
நாக்கிலோ ராணிதனை நல்லவிந்தை யாய்க்கொருத்து
மூக்கிலே கட்டி முனங்குவான் நாற்பதானும்
சிறுபயறை மாவாக்கித் தேங்கா யதனிலிட்டு
முறுக்கா யதையருந்தி முழுங்குவான் நாற்பத்தொன்றான்
அறைக்கீரை வித்தை அருந்தித் தினந்தோறும்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 6121 - 6150 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

துதியா யொருமூலம் சொல்லித் தினஞ்சேவித்துக்
குதிகொண்டேதான் கட்டிக்கொண் டேயிருப்பான்
பதினைந்தாஞ் சன்னாசி பார்க்கெந்த மாலையிட்டு
மதியகத்தே வுண்டு மலர்ந்துதுயின் றேகிடப்பான்
பதினாறாஞ் சன்னாசி பண்ணு முறைகேளு
ஆடை யுடுக்க அறிவுசற்று மில்லாமல்
கோடை குடித்துக் குலைவான் பதினாறான்
கள்ளிதனைத் தின்று காய்க ளிலையருந்தி
கொள்ளித் தழல்காய்வான் கொடிய பதினேழான்
நல்லத்திக் காயருந்தி நாமமணி யும்பூண்டு
கொல்லத்தி போலே குலைந்துகுலைந் தேதிரிவான்
இவன்பதி னெட்டான் என்றே யினமறிநீ
எவனு மறிவான் ஈரெட்டு மூன்றானை
மான்தோலின் மேலிருப்பான் மற்றிருபான் மீசையுள்ளான்
தான்தெரியு மற்றிருபத் தொன்றா னினங்கேளு
நாகத்தின் முள்ளை நல்லதலை மேலணிந்து
கூகத்தைச் சுற்றிக் கும்பிட்டுத் தான்திரிவான்
இருபத்தி ரண்டான் இனங்கேளு நன்றான
மதுவைத்து நித்தம் வணங்குவான் மந்திரத்தை
இருபத்தி மூன்றான் இருப்பான் மயிர்வளர்த்துச்
சருவைத்துப் பால்பழத்தில் தந்திரத்தை யோதிடுவான்
இருபத்தி னாலான் எங்கு மிகத்திரிந்து
உருவேற்றி நித்தம் உடல்வாட லாயிருப்பான்
இருபத்தியைந் தாமிருஷி எருக்கலம் பாலருந்தி
பருவமாய் ஓவியஞ்செய் ததிலே படுத்திருப்பான்
கள்ளுக் குடித்துக் கறியுப்புக் கூட்டாமல்
புள்ளித்தோல் மேலிருப்பான் புகழிருபத் தாறானும்
நீரைத் தியானமிட்டு நித்திரைக்குத் தானோதி
பாதை வழியேகான் பத்துரண் டேழானும்
கோண முடிமுடித்து குறுத்தடியுங் கைப்பிடித்து

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 6091 - 6120 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

அப்படியே தானிருக்கும் ஆனசன் னாசிகட்கு
ஒண்ணொண் ணடையாளம் உரைக்கிறேன் சீக்கிரமாய்
துண்ணெனவே நீங்கள் துணிந்துமிகக் கேளுமென்று
நாலாஞ் சன்னாசி நயன மிமையாதிருப்பான்
காலைக் கைகொண்டு கட்டிறுக்கி யேயிருப்பான்
அஞ்சாஞ் சன்னாசி அன்னங் குடியாமல்
பிஞ்சிரு மிச்சியிலை பிசைந்துதின் றேயிருப்பான்
ஆறாஞ் சன்னாசி ஆனகஞ் சாகுடித்து
நீறாக்கித் தேகமதை நிஷ்டைபோல் தானிருப்பான்
ஏழாம் சன்னாசி இடுப்பிலொரு சீலைகட்டிப்
பாழாகப் பட்சி பறவைதின்றே யிருப்பான்
எட்டாஞ் சன்னாசி இருந்துமிகக் கண்மூடி
கட்டாய்ச் சுவாசமதைக் கவர்ந்துகவர்ந் தேயிருப்பான்
ஒன்பதாஞ் சன்னாசி உமிழ்நீ ரிறக்காமல்
இன்ப விறுவிறுத்து ஈரவம்போல் கண்வெளுத்துத்
தூங்கினாற் போலே சூழச்சூழ விழித்துப்
பாங்குகள் தேடிப் பதிந்திருப்பான் கண்டீரே
பத்தாஞ் சன்னாசி பதிவாக நாள்தோறும்
சிற்றா மணக்கிலையில் துயிலுவான் கண்டீரே
பதினொராஞ் சன்னாசி பவளமணிக் கோர்வையிட்டுத்
துதியா யொருமூலம் சொல்லித்தினம் சேவித்து 
உரிய உளுந்தும் ஓயாமல் கஞ்சாவும்
சதமென்று நம்பி தானிருப்பான் கண்டீரே
பன்னிரண்டாஞ் சன்னாசி பாரக்கல் கோர்வையிட்டு
உந்திக்(கு) இலுப்பையிலை உழக்குச்சா றுகுடித்து
இருப்பான் பதிமூன்றான் இவனினத்தைக் கேட்டிருநீ
பருப்பா னவலும் பழமுந் தினமருந்தி
கோவை யிலையும் கொடுப்பையிலை யும்புசித்துச்
சேவைபண்ணி நித்தம் செய்திருப்பான் கண்டாயே
பதினாலாஞ் சன்னாசி பண்ணு முறைகேளு

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 6061 - 6090 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

நடையொற்றைக் காலால் நடப்பார் சிலபேர்கள்
இப்படியே நன்றாய் இவரிவர்க் கோர்விதமாய்
அப்படியே தேசமைம்பத் தாறதி லுந்திரிவார்
சோழக் குருநாடு தேசமது நன்னாடு
ஆளவை குண்டர் அவர்வளரும் நன்னாடு
இந்நாட்டில் வாழும் இராச ருடவளமை
சொன்னால் தொலையாது சொல்ல எளிதல்லவே
இப்புவியில் வாழும் என்றன்வை குண்டரிடம்
எப்புவியில் வாழும் இருஷிகன் னாசியெல்லாம்
வரம்வைக்கச் சொல்லி வதைக்கவந்த வைகுண்டர்காண்
பரம்பெரிய வைகுண்டப் பதியாள வந்தவர்காண்
இப்புவியை ஆளஇராச வைகுண்ட ராசா
எப்போ வருவாரென்று இருக்கும் சன்னாசி யெல்லாம்
சன்னாசி யெல்லாம் தலைவீதம் வாழுகின்ற
மின்னான சீமை விரிக்கக்கேள் நீங்களெல்லாம்
பாண்டிய னான பரிகொங்கை நன்னாட்டில்
ஆண்டிருப்பான் சன்னாசி அவனொருவன் கேட்டிருநீ
வருஷ மொருநேரம் மாறிப் பிறந்தேனென்று
புருஷனென வந்தெடுத்தால் பிள்ளையுண் டென்றுசொல்லி
இருப்பான் சிலநாள் இவனொரு சன்னாசி
இருந்தந்த நாட்டைவிட்டு எழுந்திருந்து அவன்தானும்
சிங்கள நன்னாட்டில் சீகண்டன் ராச்சியத்தில்
புங்கம்பா லுண்டு பூவையரைப் பாரோமென்று
ஆடை யுடுக்காமல் அவனிருப் பானொருவன்
கோரக்க நாடு குருக்கேத்திரன் ராச்சியத்தில்
சூரக்கோல் கைப்பிடித்துச் சூலா யுதமேந்தி
வீரத்தனம் போலிருப்பான் இவனொரு சன்னாசி
தன்மதத்தால் பேசித் தானிருப்பா னேசிலநாள்
கன்மத்தால் சாவான் கடியமூன் றாம்பேர்தான்
இப்படியே யைம்பத் தாறூ ரிவைகளுக்கும்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 6031 - 6060 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

அடர்த்தியா யைம்பத்து ஐந்து இருஷிகளும்
ஆளுக் கொருவிதமாய் அருந்துவ துமிருப்பும்
நாளு முறையாய் நடத்துவதும் நீகேளு
ஒக்க விபரமதாய் உரைக்கநே ரம்பெருகும்
மிக்கத் திரட்டாய் விடுகிறேன் நீகேளு
நல்ல மிளகுதின்று நவகண்டி தான்பூண்டு
கொல்ல மிளகுதின்று குப்பைமே லேபுனைந்து
வெள்ளித் தடுக்கில் வீற்றிருப்பா ரேசிலர்கள்
கள்ளிப் பாலெடுத்து காலெல்லாம் பூசிக்கொண்டு
ஆனைத்தோ லிட்டு அருந்தாமல் நாடோறும்
கானகத்தில் வாழ்ந்து கண்மூ டாரேசிலர்கள்
மரத்தைமிகக் காலிலிட்டு வார்சிலந்திக் கோர்வையிட்டுச்
சரத்தையுள்ளே கொண்டு தானிருப்பா ரேசிலர்கள்
மீட்டைக் கொடியும் மிளகுவெற்றி லைக்கொடியும்
இட்டமுடன் நிஷ்டை இருப்பார் சிலபேர்கள்
உப்பில்லா தன்னம் ஒருபோது தான்குடித்து
அப்பிலிட்டுத் தின்று அக்கினியி லேகாய்ந்து
இருப்பார் சிலபேர் இன்னமும்நன் றாய்க்கேளு
பொருப்பி லிருப்பார் பூமியில் வரோமென்பார்
கள்ளிப்பா லுண்டு கவிழ்ந்திருப்பா ரேசிலபேர்
கொள்ளித் தழலும் கொள்ளைகொண்டக் கஞ்சாவும்
உண்டோங்காண் லோகமதை விழுங்குவோ மென்பார்சிலர்
கண்டா லறிந்திடலாம் கானகத்திலே சிலரை
புல்லை யருந்திப் புலித்தோலின் மேலிருந்து
தில்லைப்பா லுண்டு திரிவோமென் பார்சிலபேர்
புகையிலைச் சாறு புகட்டுவோ மென்பார்சிலர்
தகையில்லாக் கற்பம் தானுண்டோ மென்பார்சிலர்
பூவில் படுப்போம் புகட்டுவோ மாவின்பால்
காவி லுறைந்து கலைதரி யாதிருப்பார்
உடையுடா தேகழுத்தில் உத்திராட்ச மேபுனைந்து

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 6001 - 6030 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

ஏதுங்கள் ஞாயம் என்னோ டுரையுமென்றார்
அப்போது நல்ல அந்தரிஷி யேதுரைப்பார்
இப்போது அய்யாவே எங்களைப்பூ லோகமதில்
படைக்கவே ணுமெனவே பகர்ந்தமொழி மாறாமல்
நடக்கக் கருமமிது நாரணரே பொய்யாது
முன்னமே யெங்கள் முறைவழியி லோருயிரை
வன்னமுள்ளச் சாணாராய் வகுத்தீரே யும்மகவாய்
அல்லாம லெங்கள்வழி ஆனரிஷி தங்களிலே
பொல்லாத குற்றம் பிரமனுக்குச் செய்ததினால்
அன்பத்தினா லொன்றிரிஷி அவனிதனில் போகவென்று
இன்புற்ற நாரணரே ஈந்தீரவர் கேட்டவரம்
ஆனதா லவர்கள் அவனிதனி லேதிரிய
ஏனையா எங்களைநீர் இப்போ பிறவிசெய்தால்
இனம்பிரிந்து நாங்கள் இருப்போமே பூமிதனில்
கனம்பொருந்தும் நாரணரே கட்டுரைக்க வேணுமென்றார்
நல்லதுதா னென்று நாரா யணருரைப்பார்
வல்ல ரிஷிமாரே வகையாகக் கேட்டீரே
அதற்கு விபரம் அருளுவேன் கேளுமென்று
மதுக்குகந்த மன்னன் வழுத்துவா ரன்போரே
சென்ற ரிஷியெல்லாம் செடமெடுத்துப் பூமிதனில்
மண்டலங்கள் தோறும் வாழுவார் கண்டீரே
என்ன விதமாய் இருப்பாரென் றேயினமாய்
துன்னயமாய் நீங்கள் துணிந்துநன்றாய்க் கேட்டிங்கோ
மான்தோ லிலேயிருப்பான் வானமதைத் தான்பார்த்துத்
தீன்சோ றருந்தாமல் செலங்குடித்து நாடோறும்
கற்பமுண்டோ மென்று கலியில்மிகப் பட்டுழன்று
அற்பமுடன் கொஞ்சி அவன்சிலநாள் தானிருந்து
பிரம்ம வைகுண்டம் பிறப்பெடுத்து நான்தானும்
வரம்வைத் தவனை வதைத்துப்பின் னுன்னினத்தில்
படைத்துத் தருவேன் பார்த்துக்கோ லெக்கெனவே

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 5971 - 6000 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

எங்களுட மோட்சமதில் ஏகி இருப்பதினால்
ஆனதா லவர்கள் அனுக்கிரகந் தன்னாலே
மானமுட னேமனுட வையகத்தில் வாழ்ந்திருந்தீர்
இன்ன முன்வழிகள் என்மகவா யங்கிருக்க
வன்னமுட னவ்வழிதான் வாய்த்தசா ணாரினத்தில்
போய்ப்பிறந்து நன்றாய்ப் புவிமீதி லேவளர்ந்து
மேற்பிறவி வந்திடினும் மேவுவ தவ்வழியில்
இப்படியே பிறந்து என்று மிடறுசெய்து
எப்படியு மென்குடும்பத் தாலே யிருளகன்று
உன்பிறப்போர் தம்மால் உதவிபெற்று வாழுமென்று
எம்பெருமாள் சொல்லி இனத்தில் பிறவிசெய்தார்

சொர்க்க லோகத்தார் மனுப்பிறப்பு

சொர்க்கலோ கத்தாரைச் சுறுக்காய் வரவழைத்து
மிக்கவுங்கள் செய்தியென்ன விடுத்துரையு மேவலரே
நான்பிறவிக் கெல்லாம் நம்பிகூ டப்பிறந்து
என்பிறகே வந்து எனக்கேவல் செய்ததினால்
இன்னம் பிறவி இனத்திலுயி ரென்மகவாய்
வன்னமுள்ள சான்றோர் வழியி லிருப்பதினால்
காலக் கலிதான் கட்டழித் தென்மகவு
மேலுக மாள விடைநிச்சித் திருப்பதினால்
நீங்களும்போ யங்கே நிங்ஙளுட தன்வழியில்
மங்களமாய்த் தோன்றி வாழுங்கோ என்மகவாய்
வாழுகின்ற நாளையிலே வருவே னானுங்களிடம்
நாளும்பல ஊழியங்கள் நமக்குமிகச் செய்திருங்கோ
ஏவல்கண் டுங்களைநாம் இரட்சித்து ஆண்டுகொள்வோம்
பாவலரே நீங்கள் பண்பாய் போயிருங்கோ
போவெனவே சொல்லிப் புகன்றா ரவர்களுக்கு

பிரமலோகத்தார் மனுப்பிறப்பு

கோவேங்கிரி ஆயன் கூறிவிடை கொடுத்தார்
பிரமலோ கத்திலுள்ள பிலத்த இருஷிகளை
வரவழைத்து அய்யா நாராயணர் வகிர்வார்
வாருங்கோ பிள்ளாய் வாய்த்த ரிஷிமாரே

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 5941 - 5970 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

ஆவலது கொண்டஇடம் அச்சுதரே சம்மதங்காண்
எந்தவித மாகிடினும் எனக்கந்தப் பெண்கொடியைத்
தொந்தமா யென்றனக்குத் தொலையாத ஆசையதும்
தந்தருளி வைத்தால் தர்மமுண் டுங்களுக்கு
என்றன் பிரானே இனிமாற்றிச் சொல்லவேண்டாம்
என்றுரைக்கத் தேவன் எடுத்துரைப்பா ரெம்பெருமாள்
ஒன்றுநீ கேட்டிலையே உன்மனது ஒத்திலையே
கீழுள்ள பெண்ணை மேலாக்க வேணுமென்றால்
வேழமொத்த தேவா மிகுத்ததவஞ் செய்திடுநீ
மேலாக வேணுமென்று மெல்லியரும் நற்றவசு
காலால் கனலெழுப்பிக் கடுந்தவசு செய்திடச்சொல்
தவசு இருபேரும் தாற்பரிய மாகநின்று
சிவசுவா சம்பெருக்கிச் சிறந்ததவஞ் செய்திடச்சொல்
நின்ற தவத்தில் நிலையாய் நினைத்ததெல்லாம்
அன்றுங் களுக்கு அருளுவே னானுமென்று
சொல்லிடவே தேவன் சிரித்து மனமகிழ்ந்து
நல்லதுதா னென்று நாட்டமுற்றுத் தேவனுந்தான்
பரதே வதையான பைங்கிளியைத் தான்கூட்டி
விரைவா கத்தேவன் விறுமா பதஞ்சேவித்து
நின்றான் தவசு நெடியோ னுறுதியென்று
நன்றான நன்னுதலும் நல்லசம் பூரணனும்
மனைவியும் புருசனென மாறாபடையுமென்று
நினைத்துத் தவசு நிற்கநிலை தேடிநின்றார்
அனைத்துயி ருங்காக்கும் அய்யாநா ராயணரும்
கனத்துடனே பின்னும் கட்டாக ஏதுசெய்தார்

எமலோகத்தார் மனுப்பிறப்பு

ஏம னுலகமதில் இருக்குந் தபோதனரைத்
தாமனந்தப் பேர்கள் சர்வது மேயழைத்து
வாருங்கோ பிள்ளாய் வாய்த்த தபோதனரே
ஏதுங்கள் ஞாயம் என்னோடே சொல்லுமென்றார்
உங்கள் குடும்பம் உடையோன் பதம்வணங்கி

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 5911 - 5940 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

மூவருரை மாறாமல் மோகமுள்ள தேவரெல்லாம்

சம்பூர்ணத்தேவன் - பரதேவதை தவசு


போகும் பொழுதில் பொன்னுலகத் தேவர்தன்னில்
தாவும்பெரிய வொரு சம்பூரணத் தேவன்
பரதே வதையான பார்மறலி தன்னுகத்தில்
உரமான தேவியவள் உடையமன்ன னைநீக்கித்
தெய்வச்சம் பூரணனும் சேர்ந்தவளோ டேநடப்பாய்
மாயவளை மாய்கையினால் மாறியவன் பேசினனே
நான்பிறக்கப் போணுமென்றால் நன்னுதலை யென்னோடு
தான்பிறக்கச் சொல்லித் தாரம்போ லாக்குவீரால்
நான்பிறக்கப் போவேன் நாரணரே யல்லாது
தான்பிறக்கப் போவதற்குச் சங்கடங்க ளுண்டுமையா
என்றுரைக்கத் தேவன் எடுத்துரைப்பா ரெம்பெருமாள்
நன்றுநன்று தேவாநீ நாணமென்ன பேசுகிறாய்
உன்பிறப்பு உயர்பிறப்பு ஓவியத்தின் தன்பிறப்பு
பின்பிறப்பு ஏமன் பூமிப் பிறப்பல்லவோ
அப்பிறவிக் கிப்பிறவி அடுக்குமோ தேவாநீ
இப்பிறவி ஞாயம் ஏனுரைத்தாய் மாதேவா
ஆனையொடு பூனை அணைந்துநலஞ் செய்திடுமோ
பூனையொடு ஆனை புல்குமோ மாதேவா
ஆனை மதமா யடர்ந்து மிகத்தேவா
பூனை யொடுவந்து புல்குமோ - பூனை
நாயோடு புல்குமோ நல்லறிவில் லாத்தேவா
ஈயோடு சேர்மோ இசல்
ஏனடா தேவாநீ இந்தமுறை சொன்னதென்ன
வீணடா இவ்வாசை விட்டுவிடு நீதேவா
கீரிக்குப் பாம்பு கிளைவருமோ வையகத்தில்
ஓரிக்குச் சிங்கம் ஒக்குமோ மாதேவா
இப்படியே மாயன் எடுத்துரைக்கத் தேவாதி
எப்படியும் புத்தி இசையாம லேயுரைப்பான்
காவலரே மாமோகம் கண்டஇட மன்றல்லவோ

விளக்கவுரை :
Powered by Blogger.