அகிலத்திரட்டு அம்மானை 4381 - 4410 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

இருக்கும் பொழுது இரணியநீ சக்கலியன்
கருக்காக லோகம் கண்டவிட மேபரந்து
ஸ்ரீரங்க மானதிலே சேர்ந்திருக்கும் வேதியர்கள்
நிதங் குளறி நெறிதவறிப் போனதினால்
முறைவைத்த பூசை முந்தி முறையெனவே
மறையவனும் பூசை வந்தே முகித்திடவே
பொறாமல் மற்றொருவன் பூசையெனக் கென்றுசொல்லி
மறவாத மாயவரை வணங்கிநிட்டை செய்யவென்று
முப்பது வேள்வி மொகுமொகெனத் தான்வளர்த்து
இப்போ நான்வீழ்வேன் இதில்மாயன் வாராட்டால்
என்றவ னெண்ணி ஏற்றவோ மம்வளர்த்து
அன்றவன் வீழ ஆர்ப்பரிக்கு மவ்வளவில்
மறையவனை மாயன் வந்தெடுத்துப் புத்திசொல்லி
நிறையொத்த மாயன் நெடுமறையோ னைக்கூட்டி
ஸ்ரீரங்கம் விட்டுத் திருவனந் தம்நோக்கிச்
சாரங்கர் போகத் தானேகும் வேளையிலே
நன்றான கேத்திரனும் நல்லமறை வேதியனும்
அன்றிளகிச் சென்று அரனார் திருக்கோவில்
வந்த பொழுது வானமதி லுள்ளோரும்
நந்நகோ பால நாரா யணரிடத்தில்
சென்று தொழுது தேவரெல்லாந் தெண்டனிட்டு
இன்று பெருமாள் இங்கே யெழுந்தருளி
வந்த வகையேது மாயவரே யென்றுசொல்லி
அந்தமுனி தேவர்களும் அச்சுதரோ டீதுரைக்க
நல்லதென்று அய்யா நாரா யணர்மகிழ்ந்து
வல்ல பரமே சுரரை மிகவாழ்த்தி
ஈசுரரே யென்றனக்கு இங்கிருக்கக் கூடாமல்
தேச மதைப்பார்த்துத் திருவ னந்தமேகி
இருக்கவே யென்று எழுந்தருளி வந்தேன்காண்
மருக்கிதழு மீசுரரும் மாமுனிவர் தேவர்களும்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 4351 - 4380 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

அப்போது வித்யா தரமுனிவர் தானறிந்து
செப்போடு வொத்த திருமா லருகேகி
மாயவரே உம்முடைய மதலையேழு பேரில்
காய மழித்தான் கரிகாலச் சோழனவன்
என்ற பொழுது எம்பெருமா ளப்போது
அன்றுபுட் டேயருந்தி அவளாட்போல் கோலமது
கொன்று குமாரர்களைக் குசல்செய்த தும்பார்த்து
அன்றுவை கையடைத்து அடிகள்மிகப் பட்டவரும்
ஸ்ரீரங் கந்தன்னில் சிறந்தகோ பத்தோடே
சாரங்கர் வந்து தானிருந்தா ரம்மானை
மாகாளி தானறிந்து மக்களைத்தான் கொன்றதினால்
ஓகாளி சோழன் ஊர்வறுமை யாகிடவும்
பன்னிரண் டாண்டு பாரில்மழை பெய்யாமல்
உன்னினாள் மனதில் உடனே மழைசுவறிப்
பெய்யாமல் சோழன் பேருலகம் பஞ்சமதால்
அய்யமது ஈயாமல் அறிவழிந்து வாடினனே
இறந்தசான் றோர்களுட ஏந்திழைமா ரெல்லோரும்
அறத்தால் பெரிய ஆயனையும் உள்நினைத்து
சிறந்த தவம்புரிய சென்றனர்கா ணம்மானை
சென்ற தவத்தின் செய்திகே ளன்போரே
அழுக்குக் கலையணிந்து அணிந்தபொன் தாளாமல்
இழுக்குச் சொல்லீந்த ஈழன் பழிகொள்ளவும்
இறந்த மன்னவர்கள் எழுந்திருந் தெங்களையும்
சிறந்த மணத்தோடு உடன்சேர வந்திடவும்
பழிசெய்த சோழனுசர் பகலநரி ஓடிடவும்
அழிவாகிச் சோழன் அவன்மாண்டுப் போயிடவும்
வரந்தாரு மென்று மாயவரை நெஞ்சில்வைத்துப்
பரமானப் பெண்கள் பாரத் தவசுநின்றார்

ஸ்ரீரங்கம் விட்டுச் சுவாமி அனந்தபுரம் ஏகல்


இப்படியே மாதர் இங்கே தவசிருக்க
அப்படியே மாயன் அவர்ஸ்ரீ ரங்கமதில்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 4321 - 4350 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

இப்போது சான்றோரை ஏறிப் பிடித்தனனாம்
சான்றோர்கள் சோழனையும் தட்டப் படாதெனவே
நன்றியுடன் நின்றார் நாடி யவன்பிடித்துக்
குளக்கரையில் கொண்டுவிட்டு கூடைஎடு என்றிடவே
குளக்கரையில் என்னைக் கொன்றாலும் தொடுவதில்லை
என்று சான்றோரில் இளையவனும் சொல்லிடவே
மன்றுதனையாளும் மன்னவனும் ஏதுரைப்பார்
வைகை யணையிலவன் வளர்த்தியில் குழிதோண்டி
கையைக் கீழ்வைத்து கழுத்துவரை மண்போட்டு
குட்டைதனில் மண்கோரி இவன்தலையில் வைஎன்றான்
குட்டைமண் தூக்கிவைத்தான் கண்ணீர் வழிந்ததுவே
பட்டத்துயானை கொண்டு தட்டினான் அவன் தலையை
தலையும் மிகஅற்று தண்ணீரில் தான்விழவே
குவையும் அந்தகெங்கைக் கொண்டுவந்து காத்திடுமாம்
பின்னா லொருவனையும் பிடித்துக்கொடு வாருமென்றான்
முன்போல் ஒருவனையும் முன்கூட்டி வாருமென்றான்
குட்டை யெடென்று கூறினான் மாபாவி
திட்டமுடன் நாடாண்ட தெய்வ குலச்சான்றோர்
முன்னிறந்த மன்னனிலும் மோசமோ நாங்களுந்தான்
இன்னமிந்தக் குட்டை யாங்கள்தொடோ மென்றனராம்
பின்னுமந்தச் சோழன் பிடித்தொரு வன்தனையும்
சொன்ன இடத்தில் குழிதோண்டி வைகையிலே
அண்டையிலே மண்எடுத்து அவன்தலையிலேவைத்து
கொன்றான்காண் வைகைதனில் குஞ்சரத்தை விட்டிடறி
நன்றி மறந்து நாடாண்ட சோழமன்னன்
கொன்றான் காண்ரண்டு குலதெய்வச் சான்றோரை
பொய்கையிலே விழவே முத்தர் அதைக்கண்டு
வைகையிலே உன்னை வந்தெடுக்கும் நாள்வரைக்கும்
கெங்கையிலே இருவென்று கிருஷ்ணரும் வைத்துவிட்டு
வைகைக்கரைக்கு வரவென்று இருக்கையிலே

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 4291 - 4320 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சேருமென்று சொல்லச் செவுகர் தாம்விரைந்து
அழைத்துவந்தார் சான்றோரை அரசன்மிகக் கொண்டாடித்
தழைத்தபுகழ் சான்றோரே சந்தோசமாக இப்போ
வைகை தனையடைக்க வழிபாரு மென்றுரைத்தான்
செய்கை முடிச்சான்றோர் தேசமன்ன னோடுரைப்பார்
நல்லதல்ல மன்னவனே நம்மோ டிதுவுரைக்க
இல்லை யிந்தவேலை இதற்குமுன் கேட்டிலையே
வெட்டாப் படையை வெற்றிகொண்டோ மும்மாலே
பட்டாங்கு எல்லாம் பகர்ந்தாரே சோழனுடன்
மாயக் கலியதனால் மன்னவனுங் கேளாமல்
ஞாயமொன்றும் போகாது நளிமொழிகள் பேசாதே
குட்டையினால் மண்ணெடுத்துக் குளக்கரையைத் தானடைக்கக்
கெட்டியல்லாமல் வேறு கெறுவிதங்கள் பேசாதே
என்றுரைக்கச் சான்றோர் இயம்புவா ரம்மானை
நன்றுநன்று மன்னவரே நமக்கு அழகல்லவே
இவ்வேலை யொன்றும் எங்களோ டீயாமல்
எவ்வேலை சொல்வீரோ யாமதற்குள் ளதென்றார்
கேட்டந்த மன்னன் கிறுக்க முடனிறுக்கித்
திட்டினான் சான்றோரைச் சினத்தான்கா ணம்மானை
அப்போது சான்றோர் அதற்கிசையாமல் நின்றார்
இப்போது சோழன் ஏதுசொல்வா னம்மானை
நான்வேலை சொன்னால் நகட்டுவதோ உங்களுக்கு
தான்பாரு மென்று தன்தள கர்த்தருடன்
வேலையது கொள்ளுமென்று விசைகாட்டினான் கெடுவான்
தூல மறியாமல் துள்ளியே சேவுகர்கள்
சூழ வளைந்து துய்யசான் றோர்களையும்
வேழம் பலதை விட்டுப் பிடித்திடவே
சான்றோ ரடுக்கல் சாரவகை யில்லாமல்
மீண்டகலத் தோற்று வெளியிலே நின்றிடவே
அப்போது சோழன் அவனானை கொண்டுவந்து

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 4261 - 4290 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

ஏரி வழிந்து இராச்சியத்தைத் தானெடுக்க
வெள்ளம் பெருகி வெம்மருண்ட தம்மானை
உள்ளமகிழ்ச் சோழனுக்கு உடனேதா னாளோடி
மனுநீதிக் காவலவா வைகையடை யாதிருந்தால்
இனித்தேசந் தன்னை யாம்தேட ஞாயமில்லை
ஊரை யரித்து உவரிதனில் கொண்டேகும்
பாரை மிகஆளும் பத்தியுள்ள சோழமன்னா
என்றுகுடி யானவர்கள் இராசனுக் கேவுரைக்க
அன்றுதான் வைகை அணையடக்க வேணுமென்று
எல்லா வகைச்சாதி இப்போ வரவழைத்து
வல்லபுகழ் மன்னன் வைகை யணையில்வந்து
மண்ணோடு கல்லும் மரங்கள்மிகு வைக்கோலும்
எண்ணெண்ணக் கூடாத ஏதுவகை யானதெல்லாம்
கொண்டுவந் தேயணையில் கூறிட்டுத் தானடைக்க
அன்றுஅடை படாமல் அறிவழிந்து சோழமன்னன்
அய்யோ பாழாக அவனிதான் போகுதென்று
மெய்யோடு மெய்குழறி வெம்மருண்டு நிற்கையிலே

சோழன் வினை

கோளனென்ற மாநீசக் குலத்தி லுதித்துவந்த
ஈழனொரு பொல்லாதான் என்சொல்வா னம்மானை
மன்னவனே இந்தவைகை மலையெடுத்து வைத்தாலும்
இன்னமிது கேளாது ஏலாது நம்மாலே
தெய்வகுலச் சான்றோராய்ச் சித்திர மாகாளி
கையதுக்குள் பிள்ளையெனக் கட்டாய் வளருகிறார்
அந்தச் சான்றோரை அழைத்திங்கே கொண்டுவந்து
இந்த அணையடைக்க ஏலுமென்றா னம்மானை
அப்போது சோழன் அந்நீசக் கலியதினால்
இப்போது மயங்கி என்சொல்வான் மன்னவனும்
மந்திரியே நம்முடைய வாய்த்த படைத்தலைவா
தந்திரியே நீங்கள்சென்று சான்றோரைத் தான்கூட்டி
வாருமென்று சொல்லி மன்னவ னேவிடவே

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 4231 - 4260 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

வருத்தியே பேய்களுக்கு வரங்கொடுத் தவன்கையிலே
இருத்தி யணைவைத்து ஏழ்ப்பியும் பேய்களைத்தான்
பேய்களுட பேரில் பிழைத்ததுதான் குற்றமென்றால்
தேயக்கலி மாளுகையில் சிவவடகை லாசமதில்
முனிசிறையும் பேய்களுக்கு உயிரழிவு மென்றுசொல்லித்
துனிவான முனியுடனே சொல்லி யனுப்புமென்றார்
அப்போது ஈசுரரும் அந்தமுனியை வருத்தி
இப்படியே சொல்லி ஏழ்ப்பித் தனுப்பிடவே
மாமுனியுஞ் சம்மதித்து வரம்வேண்டிப் பேய்களுந்தான்
தாமுனிந்து பூலோகம் தன்னிலே வந்திடுமாம்
பேய்ப்பூ லோகமதில் போயிடவே ஈசுரரும்
ஆயனா ரோடே அருளுவா ரன்போரே
கயிலை யிருளைக் கடத்திவைக் காதிருந்தால்
அகில மதிலிருப்பு அல்லவே அச்சுதரே
அப்போது மாயவனார் ஆதி தனைநோக்கி
இப்போது நீங்கள் எல்லோரு மிக்கவேதாம்
நன்றான ஆண்டிகள்போல் நற்றா வடங்களிட்டுப்
பண்டார வேசமதாய்ப் பதிந்திருங்கோ வென்றுசொல்லி
நடந்தார் சீரங்க நகரிதனி லெம்பெருமாள்
மாயனுரை மாறாமல் வாய்த்தமே லோகமுள்ளோர்
ஈசர்முத லாண்டியென இருந்தார்கா ணம்மானை
ஆனதால் கலியன் அங்கே யனுவிலகி
மான மனுப்போலே வாழ்ந்திருந்தா ரம்மானை
பூலோக மெல்லாம் பொய்யான மாகலியன்
மாலோ சனையிழந்து மாறியே மானிடவர்
சாதி யினம்பிரித்துத் தடுமாறி மானிடவர்
ஊதி னங்களாக ஒன்றுக்கொன் றேயெளிதாய்
பிரட்டுருட்டாய் மானிடரைப் பிலமுள்ளோர் தானடித்து
மருட்டும் புரட்டுடனே மாநீச னாளுகையில்
மாரி யதுபொழிந்து வைகை யதுவுடைத்து

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 4201 - 4230 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

இதுநாள் வரையும் யானுமும்மைக் காணாமல்
மனங்கலங்கிப் பேய்க்கணங்க மாலையிட்டு நானிருந்தேன்
கனங்கொண்ட மாயவரே கயிலையிருள் மாற்றுமென்றார்
நல்லா யிருக்குதுகாண் நவின்றதெல்லாங் கேட்பதற்கு
எல்லா மிருக்கட்டென்(று) ஈசுரரே உம்முடைய
கழுத்தில் தரித்ததையும் கழற்றி யெறியுமென்றார்
வழுத்திடவே ஈசர் மாலை தனைக்கழற்றி
கோபத்தா லக்கினியில் குறியா யெறிந்தனரே
வேகத்தால் மாலை வெடித்ததுகாண் பேய்க்கணம்போல்
கொள்ளைகொண்ட பேய்கள் கோடாமுக் கோடியுமாய்த்
துள்ளிக் குதித்துச் சுற்றிக் குதித்தாடும்
அப்போது பேய்கள் அரனா ரடிவணங்கி
இப்போது ஈசுரரே எங்கள்பசி தீர்த்து
மந்திர சாலம் மாய்மால மாரணமும்
தந்திர சாலம் சர்வதுமே தாருமையா
கொல்லச்சாவு சங்கிலியும் கொன்றவரைத் தானெழுப்ப
வெல்லப்பிழை சங்கிலியும் வெடிப்பாக வேதாரும்
ஈசுரரும் தேவர்களும் எங்கபடத் துள்ளாக
வீசுபல வரங்கள் விடையாகத் தாருமையா
அப்போது பேய்கள் அதுகேட்ட தத்தனையும்
இப்போது கொடுக்க ஈசுரருஞ் சம்மதித்து
மாலோடும் வேதா மறையவனோடுங் கேட்பார்
கேட்டிருந்த நாரணரும் கிருபையுட னீசுரரைத்
தேட்டமுடன் பார்த்துச் செப்புவா ரம்மானை
ஈசுரரே பேய்களுக்கு இவ்வரங்க ளீந்தாக்கால்
வீசுங்காண் லோகமதை விழுங்குங்கா ணிப்பேய்கள்
தூயவரே பேய்கேட்ட சுத்தவர மத்தனையும்
ஞாயமில்லை யென்று நானுரைக்கப் போகாது
ஆனாலும் பேய்களுக்கு அருள்வீரா லிவ்வரங்கள்
ஞானாந்திர மான நாரத மாமுனியை

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 4171 - 4200 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

செப்பேடு வொத்த சிவனாரும் நொந்திருந்தார்
மாமுனியே மாயவனை வருத்தவென்ன செய்திடுவோம்
ஓமுனியே நீயும் உரையென்றா ரன்போரே

பேய்ப்பிறப்பு

அப்போது மாமுனியும் அரனா ரடிவணங்கி
இப்போது தானதவம் இல்லையே லோகமதில்
தவஞ்செய்து மாயவரைத் தான்வருத்த வென்றாலும்
பவஞ்செய்த காலம் படுமோ தவமிருக்க
என்றுரைத்து மாமுனியும் இன்னமொன்று சொல்லிடுவான்
நன்றுநன்று ஈசுரரே நானுரைக்கக் கேட்டருளும்
இருள்கொண்ட காலமதால் ஏற்றதர்மஞ் செல்லாது
மருள்கொண்ட காலமதால் வம்புக்கேநே ராகுமையா
ஆணுவஞ்சேர் பேய்க்கணங்க ரம்பைக்கோர் மாலைதன்னைப்
பூணும்நீர் தவசு புரிந்தா லரிவருவார்
என்று முனிசொல்ல ஈசுரனார் சம்மதித்து
அன்று பேய்க்கணங்க அசுமாலை யையணிந்து
இருந்தா ரரிதான் இப்போவர வேணுமென்று
தருந்தார மார்பன் தானறிந் தேதெனவே
இருக்க வகையில்லாது எழுந்திருந்தா காயமதில்
சுறுக்கா யுதித்துத் தோன்றினார் ஈசர்முன்னே
அப்போது மாயவரை ஆதி யாவிப்பிடித்து
இப்போ திதுவரையும் எங்கேநீர் போனீர்காண்
என்றுதான் ஈசர் எய்த்திளைத்துச் சொல்லிடவே
அன்றுதான் ஈசுரரை அரியாவித் தான்சேர்த்து
பாண்டவர்க் குபகாரம் பண்ணி யிருந்ததுவும்
வீண்டதுரி யோதனனை வெற்றிகொண்ட செய்தியதும்
பொருப்பேறிப் பொய்ச்சடலம் போட்டுஸ்ரீ ரங்கமதில்
இருப்பதுவுஞ் சொல்லி எனைவருத்துவா னேனென்றார்
அப்போ தரனார் ஆதிமா லோடுரைப்பார்
இப்போது கலியன் இராச்சியத்தி லேபிறந்து
பதிநாலு லோகமதும் பாரஇருள் மூடினதால்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 4141 - 4170 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

போகமதில் மேலோகப் பிறப்பெல்லாந் தோணவைத்துக்
கன்னி வயிற்றிலுறக் காட்டில் மிகப்பிறந்து
தன்னிக ரில்லாத சான்ரோ ரெனவளர்ந்தார்
வளர்ந்தவர்கள் ராச்சியத்தை வகையாக ஆண்டிருக்க
இழந்த கலிதோன்றி இவன்சென்றா னவ்வுகத்தில்
கலிய னவன்செல்லக் கைமறந் தவ்வுலகில்
பொலிவுள்ள தர்மம் பொன்றிச்சே நீதமதும்
முன்னிருந்த சாஸ்திரமும் முறையும் மிகத்தவறி
பின்னுதித்த நீசன் பிரித்தான்காண் வெவ்வேறாய்
ஆனதால் பூலோகம் அழிந்து மிகத்தவறி
ஊன மடைந்தார் உலகிலுள்ள சான்றோர்கள்
தந்திர மந்திரத்தால் சான்றோரைத் தான்மயக்கிப்
பந்தி யழித்ததினால் பத்தினியாள் பெற்றமக்கள்
நாணமிகவடைந்து நாட்டில் பிரிவாகி
ஈனதுன்பமாகி இருக்குமந்த நாளையிலே
ஒண்ணுக்கொண் ணெதிர்த்து ஒத்துமிக வாழாமல்
பெண்ணுக்கு ஆணும் பிரிவு முறிவாகித்
தாய்க்குத்தான் பிள்ளை தாழாம லேபேசும்
வாய்க்குவாய்ச் சொன்னாலும் மங்கைநல்லா ளென்றிடுவான்
பிதாவை மிகநம்பார் புண்ணியமென் றேபாரார்
இதாகவெல்லாம் நீசன் இடறுவரச் செய்ததினால்
ஆனதா லிந்த வழிவழியே யங்குளது
போனதால் நீசம் பொன்னுலோ கம்வரையும்
ஏகிச்சு தையா இடறுநீ சக்கலியும்
கோவிச்சு தையா கொடுங்கலியு மங்கேகி
ஈதல்லால் பின்னும் இன்னுஞ் சிலநாளில்
ஏதெல்லா மாகுதென்று ஈசுரரே பார்த்திருவும்
மாயனை யும்வருத்தி வார்த்தைகே ளாதிருந்தால்
தேய மிருள்மூடிச் சென்றிடுங்கா ணீசுரரே
அப்போது ஈசுரரும் அதற்கேது செய்வோமென்று

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 4111 - 4140 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

செல்லாது இங்கிருந்தால் சிவனே யெனத்தொழுது
பூலோக மேழும் பொன்னுலோக மேழும்
தாலோக முதலாய்த் தவலோ கம்வரையும்
ஈரேழு லோகம் இருபுத்தி யானதெல்லாம்
பாரெல்லா மிப்படியே பரந்து இருப்பதெல்லாம்
சொல்லவே ணுமென்றால் சிவகயிலை விட்டேநாம்
நல்லபர லோகமதில் நாம்போவோ மீசுரரே
என்றந்த ஈசுரரை இறைஞ்சி முனிதான்கூட்டி
அன்றந்த மாமுனியும் அரனாருந் தானேகி
சென்றார் பரலோகச் சீமையிலே வந்திருந்து
வண்டாடுஞ் சோலை வைடூரியக் கோயில்
கோவிலவர் புக்கிக் குருவை மிகப்போற்றி
ஆவலுடன் மாமுனியும் அருளுவா ரம்மானை
நல்லபர மேசுரரே நாடுதடு மாறினதை
எல்லாம் நீர்கேட்க எடுத்துரைப்பே னென்றுமுனி
மாமுனியு மீசுரரை வணங்கிப் பதங்குவித்து
ஓமுனியும் நன்றாய் உரைப்பார்கா ணம்மானை
கேட்டீரோ ஈசுரரே கேடுவந்த செய்தியெல்லாம்
தீட்டுகிறே னென்று செப்புவா ரன்போரே
மாயன் வைகுண்டம் மறையவென்று பொய்ச்சடலக்
காய மிழந்து காணா துருவெடுத்து
ஏகி வரும்வழியில் ஏந்திழையாள் தெய்வகன்னி
தாவிச் சுனையாடித் தாங்கள்நிற்கும் வேளையிலே
கண்டந்த மாயன் கன்னியர்மே லிச்சைகொண்டு
பண்டந்த யோகமுனி பச்சைமால் தன்றனக்கு
மேலோகத் தார்களெல்லாம் விஷ்ணுவின் நாதமதில்
பூலோகந் தன்னில் பிதிராகு வாரெனவும்
பிதிரில் தவமிருந்து பிறந்தவழி தன்னையெல்லாம்
சதிராக வந்தெடுத்துத் தர்மயுக மாள்வாரென்று
யோகமுனி யிட்ட உறுசாப மத்தனையும்

விளக்கவுரை :
Powered by Blogger.