அகிலத்திரட்டு அம்மானை 2041 - 2070 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

அப்படியே யென்னை அனுப்புமென்றா ரம்மானை

விருத்தம்

முன்னே வியாசர் மொழிந்தபடி முறைநூல் தவறிப் போகாமல்
தன்னை மதலை யெனஎடுக்கத் தவமா யிருந்த தெய்வகிக்குச்
சொன்ன மொழியுந் தவறாமல் துயர மறவே தேவருக்கும்
என்னைப் பிறவி செய்தனுப்பும் இறவா திருக்கும் பெம்மானே

நடை

முன்னே வியாசர் மொழிந்தமொழி மாறாமல்
என்னையந்தப் பூமியிலே இப்போ பிறவிசெய்யும்
செந்தமிழ்சேர் மாயன் சிவனாரை யும்பணிந்து
எந்தனக்கு ஏற்ற ஈரஞ்சாயிர மடவை
கன்னியரா யென்றனக்கு கவரியிட நீர்படையும்
பன்னீர்க் குணம்போல் பைம்பொன் னிறத்தவராய்
முன்னுகத்திலே எனையணைய உகந்திருந்த பேரையெல்லாம்
இன்னுகத்திலென் தனக்கு இயல்பாய் படையுமென்றார்
மேருதனிலிருந்து மேகவர்ணர் செயலெனவே
தாருகாவனத்தில் தவசிருந்த ரிஷியை எல்லாம்
ஆயர் குலத்தில் அநேக மடவாரை
பாயமுற வாடிருக்கப் படைப்பீர்கா ணீசுரரே
உருப்பிணியாய் இலட்சுமியை உலகிற்பிறவி செய்யும்
கரும்பினிய தெய்வக் கயிலாச மாமணியே
சத்தபெல முள்ள தத்துவத்தார் தங்களையும்
மெத்தவரம் பெற்ற மிகுவசுரர் தங்களையும்
எல்லோரையு மிப்பிறவி இதிலே வதைத்திடவே
அல்லோரை யும்பிறவி ஆக்கிவைய்யு மென்றுரைத்தார்
என்றனக்கு நல்ல ஏற்ற கிளைபோலே
விந்து வழிக்குலம்போல் மிகுவாய்ப் படையுமென்றார்
இப்படியே மாயன் இசையஅந்த ஈசுரரும்
அப்படியே பிறவி அமைக்கத் துணிந்தனராம்
துணிந்தாரே மாயன் தொகுத்ததெல்லா மாராய்ந்து
வணிந்தார மார்பன் வகைப்படியே செய்யலுற்றார்
தெய்வகியாள் வயிற்றில் திருமால் பிறந்திடவே

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 2011 - 2040 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

சங்குவண்ண மாலோன் தானே விடைகொடுத்தார்

கண்ணன் அவதாரம்

விடைவேண்டித் தேவர் மேதினியில் தாம்போகப்
படைவீர ரான பச்சைமால் தானெழுந்து
ஆதி கயிலை அரனிடத்தில் வந்திருந்து
சோதி மணிநாதன் சொல்லுவா ரம்மானை
வாணநர பாலனென்ற மாபாவிக் கஞ்சனினால்
நாணமது கெட்டோமென நாடிமிகத் தேவரெல்லாம்
பூமா தேவிமுதல் பொறுக்கமிகக் கூடாமல்
ஆமா அரியே ஆதி முறையமென்றார்
முறையம் பொறுக்காமல் முடுகியிங்கே வந்தேனென்று
மறைவேத மாமணியும் மகிழ்ந்துரைத்தா ரம்மானை
அதுகேட்டு ஈசர் அச்சுதருக் கேதுரைப்பார்
இதுநானுங் கேட்டு இருக்குதுகா ணிம்முறையம்
ஆனதால் கஞ்சன் அவனைமுதல் கொல்வதற்கு
ஏனமது பாருமென்று எடுத்துரைத்தா ரீசுரரும்
பாருமென்று ஈசர் பச்சைமா லோடுரைக்க
ஆருமிக வொவ்வாத அச்சுதரு மேதுரைப்பார்
மேருதனில் முன்னாள் வியாசர் மொழிந்தபடி
பாருபா ரதமுதலாய்ப் பாரதப்போர் தான்வரையும்
நாரா யணராய் நாட்டில் மிகப்பிறந்து
வீரான பார்த்தன் மிகுதேரை ஓட்டுவித்துச்
சத்தபல முள்ள சராசந் தன்வரையும்
மற்றவ னோராறு வலியபலக் காரரையும்
கொல்லவகை கூறி குருநிலையைத் தான்பார்த்து
வெல்லப்பிறப் பாரெனவே வியாசர் மொழிந்தபடி
அல்லாமற் பின்னும் ஆனதெய்வ ரோகணியும்
நல்ல மகவான நாரா யணர்நமக்கு
மகவா யுதிப்பாரென மகாபரனார் சொன்னபடி
தவமா யிருந்து தவிக்கிறாள் தேவகியும்
இப்படியே யுள்ள எழுத்தின் படியாலே

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 1981 - 2010 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

பாவமாய்க் கஞ்சன் பலநாளா யெங்களையும்
ஏவல்தான் கொண்ட இடுக்கமதை மாற்றுமையா
ஊழியங்கள் செய்து உடலெல்லாம் நோகுதையா
ஆழி யடைத்த அச்சுதரே யென்றுரைத்தார்
வாண னென்றகஞ்சன் மாபாவி யேதுவினால்
நாணமது கெட்டு நாடுவிட்டுப் போறோங்காண்
நரபால னென்ற நன்றிகெட்ட கஞ்சனினால்
வரம்பா னதுகுளறி மானிபங்கள் கெட்டோமே
இத்தனையுங் காத்து இரட்சிக்க வேணுமையா
முத்தியுள்ள தேவர் முறையம் அபயமிட
பூமா தேவி புலம்பி முறையமிட
நாமாது லட்சுமியும் நன்றா யபயமிட
நாரா யணர்பதத்தை நாயகியுந் தெண்டனிட்டுச்
சீரான லட்சுமியும் செப்பினள்கா ணம்மானை
என்னைப்போல் பெண்ணல்லவோ இவள்தா னிடுமுறையம்
வன்னமுள்ள மாலே மனதிரங்கிக் காருமையா
உடனேதா னாதி ஓலமிட்டுத் தேவருக்கும்
திடமான பூமா தேவிக்குஞ் சொல்லலுற்றார்
தேவர் வேண்டுதலுக்கு இரங்கல்
வந்து பிறப்போங்காண் மாபாரத முடிக்க
நந்தி குலம்வளர நாம்பிறப்போங் கண்டீரே
சாரமில்லாக் கஞ்சன் தனைவதைத்துப் பூமியுட
பாரமது தீர்ப்போம் பாரத முடித்துவைப்போம்
துவாபர யுகத்தில் துரியோ தனன்முதலாய்த்
தவறாத வம்பன் சராசந் தன்வரையும்
அவ்வுகத் திலுள்ள அநியாயமு மடக்கிச்
செவ்வுகத்த மன்னவர்க்குச் சிநேகமது செய்வதற்கும்
உங்களுக்கும் நல்ல உதவிமிகச் செய்வதற்கும்
அங்குவந்து தோன்றி ஆய ருடன்வளர்வோன்
போங்களென்று பூமா தேவியையுந் தேவரையும்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 1951 - 1980 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

வலியோ ரெளியோர்க்கும் மண்ணூருஞ் செந்துகட்கும்
கலிதீர ஞாயம் கண்டுரைக்கும் பெம்மானே
சிவசெந்துக் கெல்லாம் சீவனுமாய் நின்றோனே
பாவமும் புண்ணியமாய்ப் பாராகி நின்றோனே
கண்ணாகி மூக்குக் கருணா கரராகி
மண்ணாகி வேத மறையாகி நின்றோனே
சாத்திரமும் நீயாய் சந்திரனும் நீயாகிச்
சூத்திரமும் நீயாய் சுழியாகி நின்றோனே
நட்சேத்தி ரமாகி நாட்கிரகம் நீயாகி
இச்சேத்தி ரமாய் இருக்குகின்ற பெம்மானே
மெய்யனுக்கு மெய்யாய் மேவி யிருப்போனே
பொய்யனுக்குப் பொய்யாய்ப் பொருந்தி யிருப்போனே
இமசூட் சமாகி ஏகம் நிறைந்தோனே
நமசூட் சமான நாரா யணப்பொருளே
கல்வித் தமிழாய் கனகப் பொருளாகிச்
செல்வித் திதுவாய்ச் செவ்வாகி நின்றோனே
அண்ட பிண்டமாகி அநேகமாய் நின்றோனே
கண்ட இடமும் கண்ணுக்குள் ளானோனே
ஈசர் கொடுத்த ஏதுவர மானாலும்
வேசமிட்டு வெல்ல மிகுபொருளாய் நின்றோனே
நடக்க இருக்க நடத்துவதும் நீயல்லவோ
திடக்க மயக்கம் செய்வதும் நீயல்லவோ
ஆரு மொருவர் அளவிடக் கூடாமல்
மேரு போலாகி விண்வளர்ந்து நிற்போனே
எண்ணத் தொலையாத ஏது சொரூபமதும்
கண்ணிமைக்கு முன்னே கனகோடி செய்வோனே
மூவரா லுன்சொரூபம் உள்ளறியக் கூடாது
தேவரா லுந்தெரியாத் திருவுருவங் கொள்வோனே
ஆயனே யெங்கள் ஆதிநா ராயணரே
மாயனே கஞ்சன் வலிமைதனை மாற்றுமையா

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 1921 - 1950 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

புத்தியற்று வித்தையற்றுப் பேருறுப்பு மில்லாமல்
முத்திகெட்ட புத்தி முழுக்கிரிகை தான்பிடித்துப்
பிள்ளையற்று வாழ்வுமற்றுப் பெண்சாதி தானுமற்றுத்
தள்ளையற்று வீடுமற்று சப்பாணி போலாகி
மாநிலத்தோ ரெல்லாம் மாபாவி யென்றுசொல்லி
வானிழுத்து மாண்டு மறலியுயிர் கொள்கையிலே
நாய்நரிகள் சென்று நாதியற்றான் தன்னுடலைத்
தேயமது காணத் திசைநாலும் பிச்செறிந்து
காக்கை விடக்கைக் கண்டவிடங் கொண்டுதின்னப்
போக்கடித்துப் பின்னும் பொல்லாதான் தன்னுயிரை
மறலி கொடுவரச்சே வலியதண் டாலடித்துக்
குறளி மிகக்காட்டிக் கொடும்பாவி தன்னுயிரை
நரகக் குழிதனிலே நல்மறலி தள்ளிடவே
இரைநமக் கென்று எட்டிப் புழுப்பிடித்து
அச்சுத ரைநினையான் அய்யாவைத் தானினையான்
கச்சி மனதுடைய காமாட்சியை நினையான்
வள்ளிக்குந் தேவ மாலவருக் காகாமல்
கொள்ளிக்குப் பிள்ளையில்லாக் கொடும்பாவி யென்றுசொல்லி
எவ்வியே அட்டை எழுவாய் முதலைகளும்
கவ்வியே சென்று கடித்துப் புழுப்பொசிக்கும்
என்றுநீ ரேழு இராச்சியமுந் தானறிய
அன்று பறைசாற்றி அருளிவைத்த அச்சுதரே
வானமது பூமியிலே மடமடென வீழாமல்
தானவனே உன்விரலால் தாங்கிவைத்த பெம்மானே
வாரி வரம்பைவிட்டு வையகத்திற் செல்லாமல்
காரியமாய்ப் பள்ளி கடலில் துயின்றோனே
மானம் வரம்பு மகிமைகெட்டுப் போகாமல்
ஊன மில்லாதே உறும்பொருளாய் நின்றோனே
சீவனுள்ள செந்துகட்குத் தினந்தோறு மேபொசிப்புத்
தாவமுட னீயுகின்ற தர்மத் திறவோனே

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 1891 - 1920 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

மூவர்க்கு மாதி முழுமணியாய் நின்றோனே
தேவர்க்கும் நல்ல சிநேகமாய் நின்றோனே
கிட்டவரார்க் கெட்டாத கிருஷ்ணாவுன் நற்பதத்தைக்
கட்டவரு மட்டான கருணா கரக்கடலே
உச்சிச் சுழியே உம்மென் றெழுத்தோனே
அச்சிச் சுழியே அம்மென் றெழுத்தோனே
அஞ்செழுத்து மூன்றெழுத்தும் ஆதிஅ வென்றெழுத்தும்
நெஞ்செழுத்து மெட்டெழுத்தும் நீயாகி நின்றோனே
எண்ணொருபத் தெண்ணிரண்டும் இவ்வே நடுவாக
ஒண்ணெழுத்தாய் நின்ற உடைய பெருமாளே
தண்டரளத் தூணாகித் தருவைந்து பேராகி
மண்டலத்துள் ளூறலுமாய் மயமுமாய் நின்றோனே
போக்கு வரத்துப் புகுந்துரண்டு கால்வீட்டில்
நாக்குரண் டுபேசி நடுநின்ற நாரணரே
அல்லாய்ப் பகலாய் ஆணாகிப் பெண்ணாகி
எல்லார்க்குஞ் சீவன் ஈயுகின்ற பெம்மானே
பட்சிப் பறவை பலசீவ செந்துமுதல்
இச்சையுடன் செய்நடப்பு இயல்கணக்குச் சேர்ப்போனே
ஒருபிறப்பி லும்மை உட்கொள்ளாப் பேர்களையும்
கருவினமா யேழு பிறப்பிலுங் கைகேட்போனே
ஆறு பிறப்பில் அரியேவுன்னைப் போற்றாமல்
தூறு மிகப்பேசித் தொழாதபே ரானாலும்
ஏழாம் பிறப்பிலும்மை எள்ளளவுதா னினைத்தால்
வாழலா மென்றவர்க்கு வைகுண்ட மீந்தோனே
இப்படியே ஏழு பிறப்பதிலும் உம்மையுந்தான்
அப்படியே ஓரணுவும் அவர்நினையா தேயிருந்தால்
குட்டங் குறைநோய் கொடியகன்னப் புற்றுடனே
கட்டம் வந்து சாக கழுத்திற்கண்ட மாலையுடன்
தீராக் கருவங்கும் தீன்செல்லா வாய்வுகளும்
காதா னதுகேளார் கண்ணே குருடாகும்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 1861 - 1890 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

நன்று மொழியெனவே நவ்வியே கஞ்சனுந்தான்
எனக்குப் படிப்புரைத்த ஏற்றவசு தேவன்
தனக்கு இவர்களையும் தான்சூட்ட வேணுமென்று
வேணுமென்று சீட்டோ விரும்பிவசு தேவனுந்தான்
வாணுவங்க ளோடே வந்தான் மதுரையிலே
தேவகியை ரோகணியைச் சிறப்பா யலங்கரித்து
வைபோக முள்ளவசு தேவனையு மொப்பிவித்துச்
சங்கீதத் தோடே தையல்ரண்டு பெண்களையும்
மங்களத் தோடே வசுதேவன் தாலிவைத்துக்
கட்டிக் கைபிடித்துக் கனசீ தனத்தோடே
கொட்டித் திமிர்த்தூதும் குழலோடே வீற்றிருந்தான்
வாழ்ந்திருந்து பெண்கள் வயிறு வளருகையில்
ஆய்ந்தறிந்து கஞ்சன் அருவிலங்கில் வைத்தனனே
தெய்வகியாளு மழுது சிந்தைமுகம் வாடிருப்பாள்
மெய்யன் வசுதேவன் மிகக்கலங்கி தானிருப்பான்
மங்கைநல்லாள் ரோகணியும் வாடி யழுதிருப்பாள்
சங்கையுள்ள தேவர்களும் தையல்தெய்வக் கன்னியரும்
எல்லோருங் கஞ்சனுட இடுக்கமது தன்னாலே
அல்லோரு மெத்த அறமெலிந்தா ரம்மானை
இப்படியே செய்யும் இடுக்கமதுக் காற்றாமல்
அப்படியே மாயனுக்கு அபயம் அமரரிட

தேவர் முறையம்


நிலந்தேவி ஆகாய நீர்தேவி யார்கூடி
தலந்தேவி மன்னன் தனக்கே யபயமிட
தேவாதி தேவர் தேவிமுறை யாற்றாமல்
மூவாதி முத்தன் முழித்தார்காண் பள்ளியது
கண்டுதே வாதிகளும் கன்னி புவிமகளும்
விண்டுரைக்கக் கூடாத விமல னடிபோற்றி
ஆதியே நாதி அய்யாநா ராயணரே
சோதியே வேதச் சுடரே சுடரொளியே
பத்தர்க்கு நித்தா பரனேற்றார்க் கேற்றோனே

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 1831 - 1860 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

சோதிரியங் கேட்கத் தொடர்ந்தான்கா ணம்மானை
அப்போது சோதிரிஷி அந்தமுனி சாபமதால்
எப்போது ஆகிடினும் இடுக்கம்வரு மென்றுரைத்தான்
சோதிரியங் கேட்டுத் துக்கமுற்றுக் கஞ்சனுந்தான்
வேதி யனையனுப்பி மிகுத்தகே டுள்ளகஞ்சன்
கலியாணஞ் செய்யக் கருத்தல்ல வென்றுசொல்லி
வலியான கஞ்சன் வைத்திருந்தா னம்மானை
அந்தநல்ல செய்தி அறிந்தந்த நாரதரும்
வந்துகஞ் சன்தனக்கு வளப்பமெல்லாஞ் சொல்லலுற்றார்
கேளாய் நீகஞ்சா கீர்த்தியுள்ள சாஸ்திரங்கள்
வாழாத மங்கையரை வைத்திருந்தால் ராச்சியத்தில்
தர்மந் தலைகெடுங்காண் சாஸ்திரத்துக் கேராது
வற்மம் வந்துசிக்கும் மாரியது பெய்யாது
கோத்திரத்துக் கேராது குடும்பந் தழையாது
சூத்திர நோய்கள் சுற்றுமடா அக்குடும்பம்
மானம் வரம்புகெட்டு மனுநீதி தானழிந்து
ஊனமடா அக்குடும்பம் உலகத்துக் கேராது
கோட்டை யழியும் குளங்கரைகள் தானிடியும்
நாட்டை முடிக்குமடா நல்லகன்னி காவல்வைத்தால்
பொன்னான சீதை பிலத்தகற் பானதிலே
கண்ணான இலங்கை கரிந்ததுவுங் கண்டிலையோ
இப்படியே வேதம் இயம்பி யிருப்பதினால்
அப்படியே பெண்ணார் அவர்கள்ரண்டு பேரையுந்தான்
காவலிட்டு வைத்தால் கற்பதினா லுன்றனக்குப்
பாவம்வந்து சுற்றும் பலிக்குமடா வேதமது
ஆனதால் பெண்கள் அவர்கள்ரண்டு பேரையுந்தாம்
மானமுள்ள மன்னனுக்கு மணஞ்செய்து தான்கொடுத்துக்
கெற்பமது உண்டாகிக் கீழே பிறக்கையிலே
அப்போநீ கொன்றாலும் ஆனாலும் பாரமில்லை
என்றுஅந்த நாரதரும் இத்தனையும் தான்கூற

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 1801 - 1830 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

குதலை மொழியாரே கொம்பே றிடையாரே
விலங்குச் சிறையும் மிகுசிறையு முங்களுக்கு
மலங்குவது மெத்த மாய்ச்சலுண் டாகியபின்
ஸ்ரீகிருஷ்ண னாகத் திருமா லுதித்தபின்பு
குறுக்கிட்ட தோசம் கொடுமை மிகத்தீர்ந்து
பின்னே பதவிப் பேறுண்டு முங்களுக்கு
மின்னே ரொளியை விமலன் பிறவிசெய்தார்
பிறவியரன் செய்யப் பிறந்தார்கள் பூமியிலே
திறவியது விட்டுத் தேவகியும் ரோகணியும்
மதுரைதனில் வந்து மாபாவிக் கஞ்சனுக்கு
இருதையல் மாமயிலார் ஏற்ற பிறப்பெனவே
கூடப் பிறந்தால் கொடியதோ சமெனவே
தேட வொருராசன் சிறுவி யெனப்பிறந்தார்
பிறந்தே தான்கஞ்சனுக்குப் பிறப்பெனவே பேசும்வளம்
சிறந்தே யிவர்கள் திருத்தமாய் வாழுகையில்
இப்படியே கஞ்சன் இவர்களிரு தங்கையையும்
அப்படியே கூட்டி அவன்வேட்டை யாடிவர
அம்மரமானதுதான் ஆறாண்டு கழித்தபின்பு
செம்மையுள்ள ஓர்பழம்தான் சிவனருளால்பழுக்கும்
அதைஎடுத்து புசிப்பார் அரனார் சாபப்படியே
இதைப் பறிக்கவென்று இயல்பாய் வருகையிலே
மாமுனிவன் தனக்கு வாய்த்திருந்த மாம்பழத்தைத்
தாமுனிந்து கஞ்சன் தானக்கனி பறித்துத்
தங்கையர்க்குத் தானீந்தான் சயோகமுனி யறிந்து
மங்கையர்க்கு வந்த மகனா லழிவையென்று
மாயனுட ஏவலினால் மாமுனியு மப்போது
பாயமுள்ள கஞ்சனுக்குப் படுசாப மிட்டனனே
சாபமது கஞ்சன் தானறியா வண்ணமுந்தான்
பாவமேநாடோறும் பண்ணிவரும் நாளையலே
வேதியனைத் தான்வருத்தி மிகுத்த கேடுள்ளகஞ்சன்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 1771 - 1800 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

பின்னேநீ ரெங்களையும் பிறவிசெய்ய வேண்டாங்காண்
எந்நேரங் கயிலை இப்பூமி யானதிலே
தெய்வப் பசுப்போல் தேவரீ ரெங்களையும்
மெய்யறிவு கூடி மிகப்புடையு மேலோனே
அல்லாதே போனால் அடியார்க ளெங்களையும்
இல்லாதே செய்யும் இனிப்பிறவி வேண்டாங்காண்
அம்மை உமையாள் அருகே மிகஇருந்து
உம்மையும் போற்றி உம்மூழி யங்கள்செய்து
பூவுலகில் நாங்கள் பெண்ணாய்ப் பிறந்ததுண்டால்
பாவிகட்கு வேலைப் பண்ணி முடியாதே
பூவு முடித்துப் பூமேடை யும்பெருக்கி
நாவுலகு மெய்க்க நல்லகவி தான்பாடி
தம்புரு வீணை சப்தக் குழலுடனே
இன்புருக ராகம் இசைந்தமுறை தானிகழ்த்தி
நரசென்மம் வாழும் நசுரக் குலங்களிலே
அரசேநீ ரெங்களையும் அழுந்தப் படையாதேயும்
இப்படியே கன்னி இரங்கி யழுதிடவே
அப்படியே கன்னி அவர்களுக் காதியுந்தான்
சொல்லுவார் வேதச் சுடரோ னதிசயித்து
நல்லதுகாண் பெண்ணே நம்மைரண்டுஞ் சொல்லாதே
மாயன் துவாபர வையகத்தில் போய்ப்பிறக்க
வாயமிட்டா ருங்களையும் மாதா வெனவாக்க
நாமென்ன செய்வோம் நவ்விமால் செய்ததற்குப்
போமென் னஈசர் பிறவிசெய்தா ரம்மானை
வாயு மகாதேவன் வடிவென்ற இச்சையினால்
பாசமுறவாட பைங்கிளியே உங்களுக்கு
ஆசையா லுங்களுக்கு அவனே புருஷனென்றார்
சங்கு சரங்கொண்ட தம்பியென்ற இச்சையினால்
அங்குப் பகவதியும் அச்சுதரு முங்களுக்கு
மதலையென வந்துதிப்பார் வையமது கொண்டாட

விளக்கவுரை :
Powered by Blogger.