அகிலத்திரட்டு அம்மானை 14461 - 14490 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

நன்று நன்றென்று நாரணர்பின் னேதுரைப்பார்
பெண்ணே யெனதுடைய பேரழகிப் பொன்மயிலே
கண்ணே யெனது கனியேயென் தெள்ளமுதே
அமுதவாய்ச் சொல்லழகி ஆசார வீச்சழகி
குமுதவாய்ப் கண்ணே குமரிப் பகவதியே
தேனே மயிலே திகட்டாத தெள்ளமுதே
மானே குயிலே மரகதப்பெண் ணோவியமே
கிஞ்சுகவாய்ப் பெண்ணே கிளிமொழியென் மாமயிலே
செஞ்சுடரே நல்ல திரவிய மாமணியே
பொன்னும் பகவதியே பிள்ளாய்நான் சொல்வதுகேள்
என்னுடைய பேரில் எள்ளவுங் குற்றமில்லை
கலியழிய வயது காலஞ்சரி யானதினால்
வலிய யுகமான வாய்த்ததர்ம நற்புவிதான்
பிறப்பதினா லிந்தப் பெரும்புவியில் நாம்பிறந்து
சிறப்பதுகள் செய்து செய்கரும முமுடித்து
நாடாள நமக்கு நல்லபல னானதினால்
தாடாண்மை யான சத்தி பகவதியே
உண்மைதான் சொல்லுகிறேன் ஓவியமே நீகேளு
தண்மையல்லால் வேறு தப்பிதங்கள் சொல்லேனான்
கயிலையங் கிரியில் கறைக்கண்ட ரீசுரரும்
மயிலனையா ளான மாது சரஸ்வதியும்
மாது உமையாள் வாய்த்தகுல பார்வதியாள்
சீதுபுகழ் லட்சுமியாள் சிறந்த பகவதியாள்
மண்டைக்காட் டாள்தெய்வ மடந்தையே யுபேர்கள்
குன்றிலுறை வள்ளி கோதைதெய் வானைவரை
பூமடந்தை நல்ல பொன்னரியத் தேவியர்கள்
பார்மடந்தை கங்கை பாணி மடந்தைமுதல்
எல்லோருங் கூடி இருக்க வொருதலத்தில்
வல்லாரு மீசர் வகுத்ததுவே நீகேளு
கலியன் வரம்பெற்றுக் கயிலைதனை விட்டவனும்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 14431 - 14460 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

அணையுண்டோ ஆண்மையுண்டோ அதுசாதிக்குணமே என்றார்

விருத்தம்


சாதிக்குச் சாதி நீயும் சமைந்துநல் வேடம் பூண்டு
தாதிக்குக் கணவன் போலும் சடமெடுத் துடல்கள் போட்டு
வாதிக்குப் பிறப்பாய்ப் பின்னும் வழியுன்றன் குலமே கந்தன்
சாதிக்குச் சரியே வுன்றன் தன்குல மறிவே ளானும்

விருத்தம்

அறிவே ளானென்ற பெண்ணே ஆதியு மெனதுள் கண்டாய்
தறமொழி சொல்ல வேண்டாம் தாணுமா லயனும் நானே
உறுமொழி யொருசொற் குள்ளே உகமதை யாள நானும்
மறுமொழி யில்லா வண்ணம் வரம்பெற்ற நாதன் நானே

நடை

அப்போ தரிவையரும் ஆதி முகம்நோக்கி
இப்போ துன்மருட்டு எல்லா மிகஅறிவேன்
சோலிமிகப் பண்ணாதே சுகமாயெங்களைவிடுநீ
கேலிமிகச் செய்யாதே கெஞ்சுகவாய்ப் பெண்ணாரைப்
பாதகங்க ளேராதே பாவையரை விட்டுவிடு
தோதகமாய் வித்தைத் தோகையரோ டேறாது
எங்கள் மயக்கம் எல்லா மிகத்தெளித்து
சங்கையெங்கள் பதிக்குத்தானேகவைத்துவிடு
கேட்டந்த நாரணரும் கிளிமொழியோ டேதுரைப்பார்
நாட்ட மடவாரே நானென்ன செய்தேன்காண்
உங்களைநான் கட்டி ஓடிமிகப் போகாமல்
எங்களுட பொற்பதியில் இட்டிருக்கோ பிள்ளாய்ச்சொல்
போகவே ணுமென்றால் பிடித்திழுப்பா ருண்டோசொல்
ஏகவே ணுமென்றால் எழுந்திருந்து ஏகலாமே
மாயத் திருமேனி மனதுள்ளொன் றேயடக்கிப்
வாய்த்திரு வாய்மலர்ந்து உரைத்திடவே பெண்ணாளும்
வாயுரைத்தாற் போலே மனதுமிகச் சொல்லாதே
நீயுரைத்தாய் நெஞ்சம் நினைப்புவே றாயிருக்கும்
மாய மறிவாரோ மாயாதி யுன்சூட்சம்
உபாய மறிய ஒருவரா லேலாது
என்று மாகுமரி இப்படியே சொன்னவுடன்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 14401 - 14430 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

அக்கறுகு சூடும் ஆதி வெறுத்தாரோ
மூவாதி மூவருக்கு முன்னுதித்து வந்தவனோ
தேவாதிதேவன் தேவருக்குமூத்தவனோ
இவனுடைய மாயம் என்னசொல்லப் போறோம்நாம்
சிவனுக்கு மென்னுடைய செய்தி தெரியுமல்லோ
ஆருக்கு மடங்காத அதிகாரம் பெற்றவனோ
பாருக்குள் வந்து பரிசு கெடுக்கிறானே
போகவழி சொல்வீர்களோ பொன்னுகன்னி யெம்பதிக்கு
ஏகவழி சற்றும் எனக்குத் தெரியல்லையே
என்று பகவதியாள் இரைஞ்சிமிகக் கூச்சலிட்டு
மன்றுதனில் வீழ்ந்து மாபுலப்ப மாயழுதாள்

விருத்தம்

புலம்பிடத் திருமால் மாதைப் பொறுபிள்ளாய்ப் பிள்ளாய்ப் பெண்ணே
சலம்பிநீ யுரைத்தா லோகம் தட்டுண்டு போமோ சொல்லு
பலம்பெற வுனக்கு இந்தப் பருவமா மணங்கள் செய்ய
நலம்பெற வரங்கள் பெற்ற நற்பரத் தீசன் நானே

விருத்தம்

நானென்ற ஈச னானால் நானிலம் பிறவார் கள்ளக்
கோனென்ற இடையன் சாமிக் கோபால னான தாலே
தானென்று உலகில் தோன்றி சடாட்சர ஆட்டு மாடி
நானென்று வேடம் பூணும் நாரணன் நீதா னென்றாள்

விருத்தம்

நாரணன்நீ நீதா னென்று நவின்றது சரிதான் பெண்ணே
காரண வுகத்துக் கெல்லாம் கருவுதித் தோங்கு மாதி
நாரண ஈச னல்லால் நடப்புவே றாரு சொல்லு
வாரணமயில்போல் வன்ன மயிலென வுரைத்தா ரையா

தெய்வ சக்திகளை அய்யா ஐக்கியப்படுத்தல்

விருத்தம்

உரைத்திட மொழியைக் கேட்டு உறுமியே கோப முற்று
வரைத்தடம் புலிபோல் சீறி மங்கையு மாறிச் சொல்வாள்
நரைத்துமே புலச்சை கெட்ட நாரண ஈச னென்று
துரைத்தன மாகச் சொல்லச் சுணையுண்டோ வுனக்கு என்றாள்

விருத்தம்

சுனையுண்டோ என்றுசொன்னச் சுந்தரபெண்ணேகேளு
கணையுண்டோ அம்புவுண்டோ கலியுகந்தன்னை அழிக்க
இணையுண்டோ நம்மைப்போல யாருமேயில்லை இல்லை

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 14371 - 14400 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

உகந்தான் முடிய உரைக்கிறாள் காண்டமது
மனுவி னுடலதையும் மாகுலுக்கமாய்க் குலுக்கி
தனுவளைத்தாற் போலே சடலந் தனைவளைத்து
ஆளுக் கிடையதிலே ஆட்டிச் சடலமதைத்
தூளு மிகப்பறந்து தூசிவா னமடையச்
சடலந் தனையாட்டித் தான்கோப மாய்க்குலுக்கித்
தடதடெனச் சுவாமியுட தாளடி யில்வீழ்ந்து
பாவிநீ யிந்தப் பாரழிக்க வந்துஎங்கள்
ஆவி மறுக அவனிதனி லெங்களையும்
சீரழிக்க வென்றோ தெச்சணத்தில் வந்திருந்தாய்
போரழிவு இல்லாமல் பொன்று கலியதிலே
பொல்லாத நீசனுட பிதிரையெல் லாமழித்துச்
சொல்லொன்றுக் குள்ளே தெய்வகன்னி மக்களையும்
வைத்தாள நீயும் வந்தாக்கா லெங்களுட
மெய்த்தான மழிக்க மேன்மையோ வுன்றனக்குப்
பாவிநீ யென்னிடத்தில் பருங்கிழவ னாகவந்து
தேவியென்றன் மானமெல்லாம் சீரழித்துப் போட்டாயே
இவ்வளமை செய்வாய் என்றேநான் முன்னறிந்தால்
பொவ்வாயில் தீயெரியப் போடுவே னக்கினியை
என்கோவில் வந்து என்னைக்கண் மாயமதாய்
உன்கோவில் வாசலிலே விட்டாட்டுப் பார்க்கிறாயே
என்னமாய மாக இங்கேகொண்டு வந்தாய்நீ
பொன்னம்பலத் தீசன் பொடிப்படுவா னிங்கில்லையோ
பொல்லா தகத்தீசன் பொருப்பேறி மாண்டானோ
எல்லா ஆபத்தும் இத்தனைநாள் காத்துஇப்போ
மாண்டானோ அகத்தீசன் மாமுனியாய்ப் போனானோ
வேண்டு மென்றகாலம் வேம்புமினிப் பானதுபோல்
பார்வதி மாதுமையும் பரமே சொரியாளும்
சீர்பதியென் னக்காள் சிறந்தமண்டைக் காட்டாளும்
ஒக்கொன்றாய்ச் சேர்ந்தாரோ ஓவியம்நான் வேண்டாமென்று

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 14341 - 14370 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

முற்றுமிந்த நாடு முடிமாய்ந்து போவதற்கோ
நரைக்கிழவ னம்மை நடுச்சபையில் கொண்டுவிட்டான்
உரைத்திடுவா ரிந்த ஊரி லொருவசனம்
மாப்பிள்ளைக்கு வீங்கி வறட்டுக்கிழ வன்கூட
போய்ப்பிழைத்தா ளென்று புவனஞ்சொல் வாரிதுவே
நம்முடைய மட்டும் நாயன் விதித்தானோ
சும்மாயிந் தக்கிழவன் சோலிபண்ண வந்தானோ
படைத்த பரனே பாவியே யென்றலையில்
நடத்தை யெழுதி நவின்றதுவு மிப்படியோ
பரதவித்து மாது பலபலவா யெண்ணிமிக
விரதமுற்று மாது மெல்லி யிளமயில்போல்
ஆளுக் கிடையே அன்னம்போ லேதிரிந்து
கூழு குடித்தக் குறுங்கிழவ னைத்தேடி
திரியும் பொழுது செய்யதிரு மாலவரும்
பரியேறும் பெருமாள் பகவதியைக் கண்டவரும்
இனியிவளை யிந்த ராச்சியத்தில் நம்முடைய
மனிதப்பெண் கூட்டிலிட்டு மாலையிட வேணுமென்று
நினைத்துப் பெருமாள் நேரிழையைத் தான்மயக்கி
புனைத்தொரு பெண்ணுடைய பொற்கூட்டுக் குள்ளடைத்து
தாண்டவ மாடுஞ்சபையில் சனங்களெல்லோ ருமறிய
காண்ட மிகப்படித்துக் கன்னிப் பகவதியை
மனுவறிய அண்ட வானலோ கமறிய
இனிமணங்க ளிவளை யாம்புரிய வேணுமென்று
நிச்சித் தொருபெண் நிலையுங் குறிபார்த்து
எச்சரிக்கை யான இளமயிலாள் தன்கூட்டில்
அடைத்தார் பெருமாள் ஆயிழையும் வெகுவாய்ப்
படைத்தோ ரருளால் பாரீரேழு மயங்கப்
பாடினாள் காண்டம் பகவதித்தாய் நாயகியும்
நாடி யவள்படித்த நற்காண்ட மானதுதான்
புகன்றா லுலகம் பொடிப்போ லுதிர்ந்திடுமே

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 14311 - 14340 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சோதி மகாபரனே துணைசெய்ய மாட்டீரோ
அன்னபட்சி மாமரங்காள் ஆவினங்கா ளூர்வனங்காள்
என்னைமிகக் கூட்டிவந்த இளங்கிழவனைக் காட்டித்
தாரீரோ என்றனுட சந்தபதி நான்போக
வாரீரோ என்மனது வாட்டந் தவிர்ப்பதற்கு
என்று புலம்பி இளங்குழலித் தேடுகையில்
குன்றுமேல் திங்கள் குதிக்குமந்த வேளையதாம்
வேளை யறிந்து மெல்லி பொன்வண்டதுபோல்
சூழநிற்கும் புன்னைப் பூவிலொரு சூட்மதாய்
இருந்தாள் பொன்வண்டாய் ஏற்றபக லேகும்வரைத்
தருந்தார மார்பன் சுவாமி மிகஅறிந்து
பகவதிக்கு மங்களங்கள் பாடி மகிழ்ச்சையுடன்
சுகம்பெரிய மாயன் சோபனங்கள் கொண்டாட
ஆடிக் களித்து அகமகிழ்ந்தா ரச்சுதரும்
கூடிநிற்கும் பேரோடு கூறிமிக ஆடிடுவார்
நாட்டை யழிக்க நமக்கு வொருமுகூர்த்தம்
பேட்டைதர்மந் தோணப் பொகுதின் றென்றனக்கு
என்று கும்மிபோட்டு இளங்குழலை யும்பார்த்து
இன்று இருவென்று எம்பெருமா ளுமாட
நல்ல பகவதியாள் நாடிப்பொன் வண்டதுபோல்
செல்லப் பதுங்கித் திசைமயக்க மாயிருந்தாள்
பகற்பொழுது மாறி பகவா னடைந்தபின்பு
உகப்படைப்பு மின்னாள் ஒருகுழந்தை போலாகி
பத்து வயசுப் பிராயம்போ லேசமைந்து
சித்துப் பலதுடையாள் சேர்ந்தவுயிர்க் கண்மணியாள்
இரண்டு பொழுதாச்சே நம்பதியை விட்டிளகி
பண்டு பதிக்கேகப் பாதைசற்றுங் காணலையே
நாலுதிசை யுண்டுமென்பார் நமக்குசற்றுந் தோணலையே
கோலூன்றுங் கிழவன் கூட்டிவந்த பாதையதும்
சற்றுந் தெரியலையே தலையிலெழு துஞ்சிவனே

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 14281 - 14310 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சுந்தரியு மொத்தச் சோர்ந்துமன தேகலங்கி
புலம்புவாள் தனியே பொன்னும் பகவதியும்
சிலம்பணியும் நாயகியும் தியங்கிப் புலம்பினளாம்
என்னைப் படைத்தவரே ஈசுரரே தஞ்சமென்று
பொன்னனைய மாதும் புலம்பித் தவிக்கலுற்றாள்
தலையி லெழுதுஞ் சங்கரரே தஞ்சமென
உலையில் மெழுகதுபோல் ஓவியமும் உள்ளுடைந்து
இனம்பிரிந்த மானதுபோல் ஈயமது போலிளகி
மனம்பிரிந்து மாது மதலை யழுதாப்போல்
பிறப்பித்தச் சீமானே பிஞ்ஞகனே தஞ்சமென்று
சிறப்பித்த மாது தியங்கி மயங்கலுற்றாள்
மாது பகவதியாள் வயசுபதி னாறுடையாள்
சீதுகந்தகாளியையும் சிவனையும்மிகநினைத்து
கண்ணினிய சொல்லாள் கரியமகா ஈசொரியாள்
எண்ணுஞ் சாகாமல் இருக்கும் பகவதியாள்
தாயில்லாப் பிள்ளை தயங்கினாற் போலேநின்று
வாய்குளறிக் கண்ணீர் வடிய மிகஅழுதாள்
சோடு பிரிந்த துய்யப்புறா வுமிரங்கிப்
போடுகின்ற சத்தம் போலே குரல்நிகழ்த்தி
உள்ளுக்குள் நோக்கும் ஓவியத்தின் தன்குரலும்
எள்ளுக்குள் ளெண்ணெயென இருந்து மிருக்கலைத்தான்
சங்குள் பிறந்த சமயத்திருமணியும்
எங்கும் புகழ்பெற்ற ஈசொரியாள் மாமயிலும்
தனியே யிருந்து தனதுள் ளகமடக்கி
மனிதர் காணாமல் மறைந்துநின்று மாதுநல்லாள்
கிழவன் தனைத்தேடி கிளிமொழி யாள்பார்த்துக்
களப நிறத்தாள் காணாமல் வாடலுற்றாள்
கூட்டிக்கொண்டு வந்த கூனுக் கிழவனையும்
காட்டித்தர மாட்டீரோ கன்னிகுல மாதர்களே
ஆதிமகா லட்சுமியே அண்ட மளந்தவளே

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 14251 - 14280 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

நச்சரவில் பள்ளிகொண்ட நல்லசொரூ பம்போலே
தண்டை யணிக்காலும் தாமரைக்கை பொன்முகமும்
தெண்டையக்கண் மாலும் கிரணவொளி ரத்தினம்போல்
செம்பவள வாயும் சிறந்தபீதாம் பரத்துடனே
அம்பலத்தே நின்று ஆனந்த மேபுரிய
ஆனந்த மான அழகு பகவதியும்
தானந்த மான சச்சிதானந் தவடிவைக்
கண்டந்த மாது கண்மூடா வண்ணமங்கே
நின்று அவள்பார்த்து நெஞ்சந்தடு மாறினதை
கிழவ ரறிந்து கிளிமொழியை விட்டகல
பழவ ரொருசொரூபம் பாச மிகஎடுத்துக்
கைநெகிழ்ந்து மாயன் கனகபதி மீதில்வந்தார்
மைவளைய மாது மாறிமன தேதிரும்பிப்
பார்த்தா ளருகில் பண்பாக நின்றதொரு
கூத்தாடித் தாதனையும் கோதைமிகக் காணாமல்
பாவிக் கிழவன் பாதங்கள் செய்தானே
லாவிலாவிக் கொஞ்சம் லாவிமிகத் தேடலுற்றாள்
அய்யோ கெடுத்தானே ஆதிக் கிழவனம்மை
மெய்யோ னென்றிருந்தோம் வெளியேற்றி விட்டானே
எங்கே யினிக்கண்டு என்பதியில் போவேனான்
திங்க ளுதிக்குதல்லோ சேவல்குர லாகுதல்லோ
நிலவெளிச்ச மாகுதல்லோ நிற்கிழவனையுங் காண்கிலையே
குலமுழிவ தாச்சே குவலயங்கே டாகுதல்லோ
மான மழிந்தாச்சே வையகமும் பேசாச்சே
தான மழிந்தாச்சே சங்கையினி கெட்டாச்சே
இக்கிழவ னம்மை இளக்கியிங்கே கொண்டுவந்து
மொக்கை மிகக்கெடுத்து மோசஞ்செய்ய வந்தானோ
என்னபோ லாச்சு என்தலையி கூறிதுவோ
அன்னம்போல் வார்த்தை ஆசார மாயுரைத்துச்
சந்தியில்பந் தாக்கினானே சளக்கிழவன் நம்மையின்று

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 14221 - 14250 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

பகவதிக்கு சச்சிதானந்த வடிவைக்கான அருளல்

விருத்தம்

வந்தனள் பதியின் சீரும் வளர்மணி மேடைக் காலும்
சந்தன வாடை வீசும் தலமது நருட்கள் சீரும்
செந்தமிழ் தர்மச் சீரும் சிவாலயத் தெருக்கள் நேரும்
புந்தியில் மகிழ்ச்சை கூர்ந்து போத்தியை மெச்சு வாளே

விருத்தம்

போற்றிநீ ருரைத்த தெல்லாம் பொய்யில்லை மெய்ய தாகும்
சாற்றினீர் பின்னுந் தெய்வத் தார்குழ  லுண்டு மென்று
பார்த்துநீர் நமக்குக் காட்டும் பைங்கிளி மாரை யெல்லாம்
சீத்துவ மாக எந்தன் சிந்தையி லறிய என்றாள்

விருத்தம்

உடனந்தக் கிழவன் தானும் உள்ளது தானே யென்று
மடமயில் குமரி தன்னை வாவென அழைத்துக் கூட்டி
குடதன முடையா ரானக் கோதையர் கோவில் புக்கி
நடைதனில் நின்று கொண்டு நாரிய ரிவர்தா மென்றார்

விருத்தம்

பார்த்தந்த மடவா ளானப் பகவதி மாது சொல்வாள்
சேர்த்திந்த மடவார் தம்மைத் திருமணஞ் செய்த மன்னர்
ஏற்றெந்த இடத்தே வாழ்வார் இதுநமக் கறியக் காட்டிக்
சாற்றிந்தத் தலமுங் காட்டித் தன்பதி போவோ மென்றாள்

பகவதிக்கு சச்சிதானந்த வடிவைக்கான அருளல்
நடை

ஆதிக் கிழவா அரிவைகன்னி மார்களையும்
நீதி யுடன்கண்டேன் நேரிழைமார் தம்மைமணம்
செய்த கணவரையும் சென்றுபார்த்த தேநாமும்
நெய்தரிய நம்பதியில் நாம்போவோம் வாருமையா
என்றுரைக்க மாது இளங்கிழவ னேதுரைப்பார்
நன்றுநன்று பேத்தி நாயகிமார் மன்னனையும்
இன்றுநீ காண இப்போது காட்டுகிறேன்
பார்த்துக்கோ வென்று பையவா வென்றுசொல்லிக்
கோற்றுக் குருவம்பலத்தில் கும்மிமிகக் கொண்டாடி
நாட்டுத்தீர்வைக் கணக்கு நவின்றிருக்கும் வேளையிலே
காட்டிக் கொடுத்தார் கரியமால் நாரணரை
பகவதியாள் வந்து பார்க்கின்ற அப்பொழுது
சுகபதியாள் கண்ணதுக்குத் துய்யத் திருமாலும்
பச்சை நிறமும் பவளவாய்க் கனியிதழும்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 14191 - 14220 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

தண்டையணி மடவாள் சடைத்து முகம்வாடி
கெண்டையக்கண் மடவாள் கிள்ளைபோ லேயுரைத்தாள்
குன்னிமெள்ளக் கிழவன் கோலூன்றிக் கோலூன்றி
மின்னிடையே பையவென்று மெல்லவடக் கேறினராம்
வடக்கேறி மாதை வலம்விட்டுத் தான்கூட்டி
நடக்கையிலே ஆளிரச்சல் நாடி மிக்ககேட்டு
அன்ன நடையழகி அமிர்தவாய்ச் சொல்லழகி
சின்ன இடையழகி திசைமயங்கி யேதுரைப்பாள்
கண்ணினிய போத்தி காரணத்து நற்போத்தி
நண்ணினிய போத்தி நானுரைக்குஞ் செய்தியைக்கேள்
சனக்கூட்டம் ரெம்பத் தான்காணு மானதினால்
எனைக்கூட்டிக் கொண்டு இதில்விட் டகலாதேயும்
திக்குத் திசையெனக்குத் தெரியாது கண்டீரே
பக்குவங்கள் சொன்னேன் பாத மடைக்கலமே
கைக்குள் விட்டுக்கொண்டு கன்னியரைத் தான்காட்டிப்
பைக்குள் வைத்துக்கொண்டு பகலோ னுதிக்குமுன்னே
என்பதியில் கொண்டு இருத்தியெனை வைத்தீரால்
பொன்பதி னாயிரத்தால் புனைந்தவொரு தாவடந்தான்
உம்முடைய மார்பில் உடனணிவேன் கண்டீரே
எம்முடைய மானம் இருக்குதுகா ணும்மிடத்தில்
ஒருவ ரறியாமல் உபாயமாய்க் கொண்டுவென்னை
திருவனப் பதிக்குள் சேர்த்துவையும் போத்தியென்றாள்
பேத்தி பதறாதே பெரியபதி சேர்த்துவைப்பேன்
காற்று அசுங்காத கண்ணர்பதி சேர்த்துவைப்பேன்
மலங்கா தேபேத்தி வான்பதியில் வாழ்ந்திருக்க
கலங்கா தேசேர்த்துக் கண்ணாணை வைத்திடுவேன்
என்றுரைக்கப் போத்தி இளவரசி யுமகிழ்ந்து
அன்றந்தக் கிழவன் அருகிலொண்டித் தானடந்து
ஆளுக் கிடைநடுவே ஆயிழையும் பேத்தியுமாய்த்
தோளுப் பிடித்தாற்போல் தோகையரும் வந்தனராம்

விளக்கவுரை :   
Powered by Blogger.