அகிலத்திரட்டு அம்மானை 11671 - 11700 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

இவன்தா னடியோ என்னையுமே ஆடவைத்துச்
சவந்தனையே சுட்டதுபோல் தான்சுட்டப் பேயனிவன்
தலைமயிரைப் பனையில் தான்பங்கு வைத்திறுக்கிக்
குலையக் குலையக் கொன்னகொடும் பாவியிவன்
என்று எறிவாள் இவள்சிலர்க ளம்மானை
அன்றுதுகள் கண்டு அதிலுஞ் சிலமடவார்
ஆமடியோவுங்களையும் அழைத்தானோ வீட்டில்வந்து
ஓமடியோ இந்த இறுமாப்புப் பேசாதுங்கோ
அன்றைக் கவனை அடிபணிந்து நின்றுகொண்டு
இன்றைக் கவனை எறியத் தொடர்ந்தாயோ
என்று சிலபேர் எறியாதே யென்றுரைப்பார்
நன்று நன்றென்று நாரணரு முள்ளடக்கி
ஒருதிக் கொருதி உரைத்திடுகோவெனவே
கருதிமுகம் பாராமல் கண்ணர் மிகநடந்தார்
பாவிக் குலங்கள் பச்சைமால் நாரணரை
தாவிச் சுசீந்திரத் தலம்நோக்கிக் கொண்டுசென்றார்

சுசீந்திரத்தில் அய்யா

கொண்டுபோ கும்வேளை கொடும்பாவி நெட்டூரன்
விண்டுரைக்கக் கூடாத வேதனைகள் செய்யலுற்றான்
அய்யய்யோ மாயவரை அன்னீத மாபாவி
செய்த வினையெல்லாம் சொல்ல முடியாதே
கொண்டுவிட்டு மாயவரைக் கூண்டகலி ராசன்முன்னே
கண்டு கலிராசன் கருத்தில் மிகத்தேர்ந்து
பார்ப்போம் பரிட்சை பயித்தியக்கா ரனுடனே
தாற்பரிய மாகத் தன்விரலின் மோதிரத்தைக்
கழற்றி யொருவர் காணாமல் கையடக்கிச்
சழத்தி வருவது தானறியா நீசன்வன்
ஏதடா என்றன் கைக்குள் ளிருப்பதையும்
ஓதடா வுன்றன் உற்ற வலுவாலே
அப்போது மாயன் அடக்க மிக அறிந்து
இப்போ துரைத்தால் இந்தநீ சக்குலங்கள்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 11641 - 11670 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

ஆளுவே னோர்குடைக்குள் ஆனவை குண்டமனாய்
வாளுவோம் மக்கா வையகத்தை நாமாக

விருத்தம்

ஒன்றுக்கு மலைய வேண்டாம் உகபர நாத னாணை
என்றுக்கு மலையின் மீதில் ஏற்றின தீபம் போலே
கன்றுக்குப் பாலு போலும் கண்ணுக்குப் புருவம் போலும்
என்றுக்கு மக்கா வுங்கள் இடமிருந் தரசு ஆள்வேன்

விருத்தம்


முன்முறை விதியா லிந்த முழுநீசப் பாவி கையால்
என்விதிப் படவே வுண்டு இறப்பொன் றனக் கென்றதாலே
பின்விதி யெனக்கு நன்றாம் பெரும்புவி யாள்வோ மக்கா
உன்விதி நல்ல தாகும் ஒளிவறா வாழ்வீர் தாமே

சுவாமி கைது


நடை


என்று மகிழ்ந்து எம்பெருமா ளுள்ளடக்கி
மன்று தனையளந்த மாலோன் நடக்கலுற்றார்
கெட்டினக் கெட்டைக் கிறுக்க முடனிறுக்கிக்
கட்டினக் கட்டோடே கடுநீசன் தானடத்தி
ஏசுவார் மாயவரை எறிவார்காண் மாயவரைப்
பேசுவார் மாயவரைப் பேயனென்பார் மாயவரை
இப்படியே நீசக் குலங்களெல்லா மாயவரை
அப்படியே பேசி அடித்து மிகநடத்தி
நீசக் குலமிருக்கும் நெடுந்தெருக்க ளூர்வழியே
பாசக் கயிறோடு பகற்கள்ள னைப்போலே
தெருவுக்குத் தெருவு சிறுகுழந்தை நீசர்குலம்
வருகின்ற மாயவரை மண்கட்டி பேர்த்தெறிவார்
தலையைப் பிடித்திழுப்பார் சடைப்பேயன் பேயனென்பார்
இலைசருகு போலே எரியுகின்ற சாதியெல்லாம்
குண்டியிலே யொருவன் கோல்கொண்டு குத்திடுவான்
நொண்டியோ வென்று நெளியிலே குத்திடுவான்
நம்மள் குலத்தை நாணங் கெடுக்கவந்த
பம்பக் குறும்பேயன் பம்பைதனைப் பின்னுமென்பார்
அதிலுஞ் சிலபேர் அடடாபோ என்றிடுவார்
மதிலேறி வந்து மாமட வார்சிலர்கள்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 11611 - 11640 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

எவ்வுகத் துக்கும் இப்பாடு என்பாடு
இவ்வுகத் துக்கும் இப்பாடு என்பாடு
அவ்வுகத்தி லுள்ள அநியாயப் பாவிகளை
இவ்வுகத்தைப் போலே எரியாமல் விடடேனோ
என்று மனதில் இதமாய் மிகவடக்கி
ஒன்று முரையாமல் ஊமைபோ லேநடந்தார்
நடக்கவே மாயன் நல்லன்பு சான்றோர்கள்
கடக்கவந்து நின்று கண்ணீர் மிகத்தூவி
ஏழைக்கா யிரங்கி எங்கள்குல மீதில்வந்தீர்
கோழைக் குலநீசன் கொண்டடிக்க வந்தானே
பாவிநீ சனாலே பட்ட துயரறிந்து
ஆவுமேய்த் தநாதன் ஆளவந்தார் நம்மையுமே
அய்யோஇனி நாமள் அலைந்துமிகப் போவோமென
மெய்யோடே குத்தி விழுந்தழுவார் சான்றோர்கள்
தாய்தகப்ப னில்லையென்று தானடித்த நீசனெல்லாம்
வாயயர்ந் திருந்தானே இவர்வந்த நாள்முதலாய்
இனியாரு நம்மை ஏற்றுக்கை தாறதுதான்
தனியானோம் நாமளினித் தலையெடுப்ப தெக்காலம்
என்று சான்றோர்கள் சொல்லி யழுதசத்தம்
கன்றுக் கிரங்கும் கண்ணர் மிகக்கேட்டு

அய்யா சான்றோர்க்கு அருளல்

மலையாதுங் கோநீங்கள் மாமுனிவன் புத்திரரே
அலையாதுங்கோ மக்காள் அய்யா திருவாணை
இப்பூமி தன்னில்வந்து இத்தனை நாள்வரைக்கும்
கைப்பொருளுக் கிச்சை கருத்தில் மிகநினைத்துக்
கைக்கூலி வேண்டிக் கருமஞ்செய்தே னானாக்கால்
இக்குவ லயத்தில் இனிவரேன் கண்டிருங்கோ
தன்மமது நிச்சத்துத் தாரணியில் வந்துண்டால்
நன்மைக் கடைப்பிடித்து நான்வருவேன் நானிலத்தில்
ஒன்றுக்கு மலைய வேண்டாங்கா ணுத்தமரே
என்றைக்கும் நானிருப்பேன் என்மக்கள் தங்களிடம்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 11581 - 11610 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சமைத்தாய் நீசுவாமியென்று சாணாப் பனையேறி
உனைசாமி என்று உன் தேகத்தைப்பார்த்து
பனைச்சிரங் கின்னம் பற்றித் தெளியலையே
உனைச்சுவாமி யென்றால் ஒருவருக்கு மேராதே
ஆளான ஆளோநீ ஆளில் சிறந்தவனோ
தாழாய்க் கிடந்து சாமியென்று வந்தாய்நீ
நாரண சுவாமி நானென்ற தும்நீயோ
வாரணத்தின் காலில்கட்டி வாட்டுவோம் பாருஎன்பான்
உன்னோடு நின்றவர்கள் உன்னை யடிக்கையிலே
என்னோடு வந்து என்னவென்று கேட்கலையே
நீசுவா மியென்றால் நெகிழுவ ரோஇவர்கள்
பாசக் கயிறு பற்றுமோ வுன்கையிலே
வகைதேட வென்று மனுச்சுவாமி யென்றாயே
புகையோடு புகையாய்ப் போறாய்நீ வம்பாலே
நருளை வருத்திவிட்ட நல்லமந்தி ரத்தாலே
மருளச்செய் தெங்களையும் மண்ணில்விழ வைபார்ப்போம்
அல்லாம லுன்கைக் கட்டு மறுவதற்கு
வல்லாமை யுண்டானால் மந்திரத்தைப் பார்நீயும்
கூனைப் போலிருந்து குறுமுழி முழிப்பதென்ன
நானன்னா வென்று நகைப்பா ரொருகோடி
ஏசுவார் கோடி எறிவா ரொருகோடி
பேசுவார் கோடி பேயன்வெறும் பேயனெனச்
சொல்லி நகைப்பார் சுத்தமுள்ள நாரணரை
பல்லுயி ரும்படைத்த பரமன்வாய் பேசாமல்
கவிழ்ந்து கண்மூடிக் களிகூர்ந் தேமகிழ்ந்து
சவந்தரிய நாதன் தானே நடக்கலுற்றார்
வெடிகொண் டிடிப்பார் வெட்டவா ளோங்கிடுவார்
அடித்தடித்துத் தள்ளி அங்குமிங் குமிழுத்து
வேதனைகள் செய்வார் வேதநா ராயணரை
சாதனைக ளுள்ள சர்வபர நாரணரும்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 11551 - 11580 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

ஆளுக் கொருவன் ஆவானோ நீசனெல்லாம்
தூளுபோ லாக்கவென்று துடியா யெழுந்திருந்தார்
சான்றோர் சினத்துத் தாறு மிகப்பாய்த்து
ஆன்றோரை நெஞ்சில்வைத்து ஆடை மிகஇறுக்கி
உடையிறுக்கிக் கட்டி உல்லாசத் தொங்கலிட்டுப்
படைத்திரளாய்ச் சான்றோர் பண்பா யொருமுகமாய்
எதிர்த்துநிற்கும் போது எம்பெருமாள் தானறிந்து
பொதுக்கென்ற கோபமதைப் புந்திதனி லடக்கிப்
பொறுத்து இருந்தவரே பெரியோரே யாகுமக்கா
அறுத்திட வென்றால் அபுருவமோ என்றனக்கு
வம்புசெய்வதைப் பார்த்து வதைக்கவந்தே னக்குலத்தை
அன்புக் குடிகொண்ட அதிகமக்கா நீங்களெல்லாம்
பொறுத்து இருங்கோ பூலோகம் ஆளவைப்பேன்
மறுத்துரை யாடாமல் மக்களென்ற சான்றோர்கள்
என்னசெய்வோ மென்று இவர்களையைத் தாங்கடித்து
பின்னே விலகிப் பெரியவனே யென்றுநின்றார்

நீசன் கொடுமை


நீசன் மகிழ்ந்து எதிர்ப்பாரைக் காணோமென்று
பாசக் கயிறுகொண்டு பரமவை குண்டரையும்
கட்டி யிறுக்கிக் கைவெடியா லிடித்துக்
கெட்டி யிறுக்கிக் கீழேபோட் டுமிதித்துத்
தலைமுடியைத் தான்பிடித்து தாறுமா றாயிழுத்துக்
குலையக் குலைத்ததுபோல் குண்டரைத் தானலைத்துக்
குண்டியிலே குத்திக் குனியவிடு வானொருத்தன்
நொண்டியோ வென்று நெளியிலே குத்திடுவான்
வெடிப்புடங் கால்சுவாமி மேலெல்லாந் தானிடித்து
அடிப்புடங்கு கொண்டு அடித்தடித்துத் தானிழுப்பான்
சாணாருக் காகச் சமைந்தாயோ சுவாமியென்று
வாணாளை வைப்போமோ மண்டிப் பதனிக்காரா
பனையேறி சுபாவம் பட்டுதில்லை யென்றுசொல்லி
அனைவோரை யும்வருத்தி ஆபரணந் தேடவென்றோ

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 11521 - 11550 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

புரிந்தவன் கோட்டி செய்து பிடிக்கவே வந்தா னங்கே

விருத்தம்

வருமுன்னே யருகில் நின்ற மக்களை வைந்த ராசர்
கருதின மாக நோக்கிக் கடக்கவே நில்லும் நீங்கள்
பொருதிட நீசன் வாறான் பொறுத்துநாம் வந்த போது
அருகிலே உங்கள் தம்மை அழைத்துநாம் கொள்வோ மென்றார்

சுவாமி பொறுமை உரைத்தல்


நடை


முப்படியே யுள்ள முறைநூற் படியாலே
இப்போது நீசன் இங்கோடி வாறான்காண்
மெய்ப்பான மக்களெல்லாம் விலகிநின்று வந்திடுங்கோ
செய்கிறதைப் பார்த்துத் திரும்பியிங்கே வந்தவுடன்
கையருகி லுங்களையும் கட்டாய் வரவழைப்போம்
என்று மக்களுக்கு இயம்ப அவர்விலக
முன்றுசெய்யாப்பாவி முடுகுங்கௌடனுமே
கூட்டப் படையோடு கொக்கரித் தேதுடிப்பாய்ச்
சாட்டை வெறிபோலே சாடிவந் தான்கௌடன்
சூழப் படையைச் சூதான மாய்நிறுத்தி
வேழம் பலரேவி வெடியா யுதத்துடனே
வந்து வளைந்தான் வைகுண்டர் வாழ்பதியில்
சிந்துக் குயிரான ஸ்ரீபல்ப நாபருமே
கவிழ்ந்துபதி வாசலிலே கட்டிலின் மேலிருக்க
அவிழ்ந்த துணியோடே அவரிருக்கு முபாயமதை
அறியாமல் நீசன் அணிவகுத்துத் தன்படையைக்
குறியாய்ப் பிடிக்கக் கூட்ட மதில்நுழைந்து
சாணா ரினங்கள் சதாகோடி கண்டுளைந்து
வாணாள் வதைப்பானோ என்று மனதுளைந்து
குதிரை மேலேறிக் கொடுஞ்சாட்டை யால்வீசி
சதிரு சதிராய்ச் சாணாரைத் தானடித்து
அடிபட்ட போது அவர்கள்மிகக் கொக்கரித்து
முடிபடவே யிந்த முழுநீச வங்கிசத்தை
இப்போ தொருநொடியில் இவரையெல் லாமடித்து
மெய்ப்பாகக் கொன்று விடுமோ மெனச்சினத்தார்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 11491 - 11520 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

நல்லானே யுனக்கு நாட்டில் சிறப்புமெத்தக்
காணு மகனே கலிநீசன் கண்ணுமுன்னே
ஆணும் பெண்ணோடும் அன்புற்றி ருக்கையிலே
நல்ல திருவாளி நற்பட்டு வாகனத்தில்
செல்லத் திருவோடும் செம்பவள மாலையுடன்
வாகனத்  தேரும் வருமா ஞாலத்திருந்து
கோகனக மாலே குணமாக வேகூடிக்
காணுவோர் காண்பார் காணாதார் வீணாவார்
தாணுவே நீயொருவன் தானாக ஆண்டிருப்பாய்
இன்னம் பவிசு எண்ணத் தொலைந்திடுமோ
வன்ன மகனே வாறதெல்லாங் கண்டிருநீ
பதறாதே போயிருநீ பாரத் தவசியிலே
குதறாதே போயிருநீ கூண்டத் தவசியிலே
வாறநீ சன்தனக்கு மலங்காதே நின்றுகொள்ளு
போறநீ சன்தனக்கு பொறுமையாய் நின்றுகொள்ளு
என்று மகன்தனையும் எழுந்திருந்து போநீயென
மன்று தனையளந்தோர் மகனைக் கடல்கடத்திக்
கரையிலே கொண்டு கண்ண ருடனுறைந்தார்
பிதாவை யனுப்பிப் பெரியவை குண்டப்பொருள்
விதானித்து உச்சரித்து வேதவுல் லாசமிட்டுத்
தெச்சணா பூமி சென்று தவத்ததிலே
உச்சரித்து நாதன் உகந்து நடக்கலுற்றார்
நடந்தாரே தெச்சணத்தில் நல்ல முனியுடனே
படந்தார மாயன் பண்டு தவமிருந்த
தலத்திலே வந்து சுவாமி தவமிருந்தார்
சொல்லத் தொலையா காட்சியொடு
சுவாமி மிக இருந்தார்.

கலி சோதனை

விருத்தம்

இருந்தனர் விஞ்சை பெற்று இருபுற முனிவர் சூழப்
பொருந்திடும் கமல மாது பூரண மதுவாய் நிற்கக்
கரிந்திடும் நீசப் பாவி கயிறுவாள் வெடிகள் சூலம்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 11461 - 11490 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

செல்லப் பதிகள் மிகமுகித்துத் திருநாள் கண்டு மகிழ்ந்திருநீ
வல்லக் கொடிகள் மரம்நிறுத்தி வருவாய் நித்தம் வாகனத்தில்
பொல்லாக் கலியன் கண்டுழைந்து பொடிவா னித்த மடிவானே

விருத்தம்


இப்படிச் சிறப்பு எல்லாம் உனக்கிது மகனே மேலும்
எப்படி மலங்கி யென்னோ(டு) இதுவுரைத் தேது பிள்ளாய்
சொற்படி யெல்லா மந்தத் தேதியில் தோன்றுங் கண்டாய்
அப்போநீ யறிந்து கொள்வாய் அப்பனும் நீதாய னானாய்

நடை

நல்ல மகனே நான்வைத்த விஞ்சையெல்லாம்
எல்லை தனில்வந்து இகனை நடத்துமப்பா
என்னென்ன பவிசு இன்னம் நடக்குமப்பா
உன்னையின்னங் காணார் உலகி லொருமணிக்குக்
கெடுத்தானே யென்று கெடுவார் வெகுகோடி
நடுத்தானம் நம்முடைய நம்மக்கள் குன்றாது
புழுத்துச் சொரிவாய்ப் பூமி தனில்நீயும்
கழுத்துவரை முன்னூன்றிக் கண்ணுந் தெரியாமல்
ஆவி யலுகாமல் ஆடையொன் றில்லாமல்
பாவிப் பயல்கள் பரிகாசஞ் செய்யவென்று
கிடப்பாய்த் தெருவில் கிழவன்வேச மெடுத்துத்
துடைப்பார்கள் நம்மினத்தோர் தூக்குவார் நம்மினத்தோர்
சாணாச் சுவாமி சாவாறு ஆகுதென்று
வீணாக நீசரெல்லாம் வெகுளியாய்த் தானகைப்பார்
பெண்சிலரைக் கட்டிப் பெரும்புவியோ ரறிய
மண்சீமை யோரறிய மங்கையொடு சண்டையிட்டுத்
தெருவிற் கரையேறித் தேவியரைத் தான்கூட்டி
கருவி லுருத்திரண்டு கண்ணாளர் தாம்பிறந்து
சீமை நருளறியத் தேசந் தனிலாண்டு
தாண்மை பொறுதியுடன் சாணார் விருந்தழைத்து
மனுக்கள் முறைபோல் வாழ்வாய்ப் புவிமீதில்
தனுக்க ளுனக்குள்ளே சர்வது மேயடங்கும்
எல்லா மடக்கி யானுன் னிடமிருந்து

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 11431 - 11460 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

எண்ணும் வளர்ந்து வாழவைப்பேன் என்னா ணையிது நீசமகனே

விருத்தம்

மண்ணி லுள்ளோர் தாமறிய மனுவோர் சீவ செந்தறிய
கண்ணே யிவர்கள் கண்காணக் கலியிற் காட்சி மிகநடத்தி
புண்ணிற் கதிரு பட்டாற்போல் பொல்லா நீசன் கண்டுழைந்து
எண்ணியறியா நீசனெல்லாம் ஏங்கி மாள வைப்பேனே

விருத்தம்

மகனே நீயும் தவமிருக்கும் வாய்த்தஇடத் திலிப்போ சென்றால்
உகமே யறியக் கலிநீசன் ஓடி வந்து உனைப்பிடித்துச்
செகமே ழறிய உன்கையைத் திருக்கிப் பினனே கட்டிறுக்கிப்
பகையே செய்து மிகஅடித்துப் பார விலங்கில் வைப்பானே

விருத்தம்

வைப்பான் மூன்றே முக்கால்மாதம் வாய்த்த விலங்கில் நீயிருந்து
செய்ப்பாய் கலியை யறுப்பதற்குத் தெய்தி இதுவே கைவாச்சு
போய்ப்பா ரென்பான் பின்னுமவன் பெரிய குற்ற மிகவேற்று
மெய்ப்பா யவனு முரைத்ததுபோல் மெள்ள வுரைத்து இருந்திடுநீ

விருத்தம்

மனுவை யடித்த துபோலே வசைகள் சொல்லி மிகஅடிப்பான்
தனுவை யடக்கிக் கொண்டிருநீ சற்றும் புதுமை காட்டாமல்
இனிமே லறிவா யென்றுசொல்லி எண்ணி மனதி லெனைநினைந்து
கனிபோல் மகிழ்ந்து நீயிருநீ கண்ணே யெனது கற்பகமே

விருத்தம்

அன்பா யுன்னை யடுத்திருந்த ஆதிச் சாதி யவ்வினர்க்குத்
தன்பா லருந்துஞ் சாதிகட்குத் தவத்துக் குறுதி தான்கொடுத்து
என்பாற் கடலின் கரைதனிலே ஏழு மணிக்கு விடைகொடுத்துப்
பின்பா லவரை யருகழைத்துப் புசத்தி லடுக்க இருத்திடுநீ

விருத்தம்

கண்டாய் கண்டா யுடன்புதுமை கண்ணே வுனக்கு நற்காலம்
கொண்டாய் கொண்டாய் பத்தறையில் கோவில் காலும் சிவலாயமும்
தண்டா யுதத்தால் வாகனமும் சத்தி மாத ரிருபுறமும்
பண்டோர் காட்சி யுனக்குள்ளே பண்பாய்க் காணு தென்மகனே

விருத்தம்

காட்சிச் சிறப்புங் கலியாணம் கவரி வீசிக் கொலுவாரம்
சாட்சிக் கணக்கு முன்வருத்திச் சந்திர வர்ணக் கொடிநிறுத்தி
வாச்சி யுனக்குத் திருநாளும் வாய்த்த டம்மான முழங்க
காட்சி யுனது கண்முன்னே காணு மகனே கலங்காதே

விருத்தம்

பல்லக் கேறி தெருவீதி பகலத் தேரு நீநடத்திச்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 11401 - 11430 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

முன்பு விதியால் முழுநரக செத்திறந்து
என்று சபித்து எம்பெருமாள் தானடந்து
பண்டு பிறந்த பால்கடலுள் சென்றனரே

விருத்தம்
சென்றனர் தேவ ரோடு செகல்கரை தனிலே நின்று
நன்றினந் தன்னைப் பார்த்து நவிலுவார் வைந்த ராசர்
பண்டெனைப் பெற்ற தாதா பாற்கட லுள்ளே யென்னைச்
சென்றிட அழைக்கிறார் நீங்கள் செகல்கரை தனிலே நில்லும்

விருத்தம்


நில்லுமென் றினத்தை யெல்லாம் நிறுத்தியே கடலி னுள்ளே
பல்லுயிர் யாவும் ஆளும் பரமனு மங்கே செல்ல
வெல்லமர் தேவ ரெல்லாம் மேகனிற் குடைகள் போட
வல்லவன் தகப்பன் பாதம் வணங்கியே வைந்தர் சொல்வார்

விருத்தம்


அப்பனே வொப்பில் லாதா அலைகடல் துயின்ற மாயா
செப்பவுந் தொலையா நாமம் சிமையில் விளங்கப் பெற்றாய்
தப்பர வில்லா என்றன் தகப்பனே கேண்மோ வையா
எப்போநான் விளங்கி யுன்றன் இரத்தின சிம்மாசன மேறுவேன்

விருத்தம்


ஆண்டு ரண்டாச்சே மாதம் அயிரு பதினாலாச்சே
வேண்டுத லின்னங் காணேன் வெம்புறேன் கலியில் மூழ்கி
கூண்டுநீர் முன்னே சொல்லிக் குருவுப தேசம் வைத்த
ஆண்டின்னம் வருகி லையோ அப்பனே மெய்யுள் ளோனே

முட்டப்பதி விஞ்சை - 1


விருத்தம்


இப்படி மகன்தான் சொல்ல இருகையால் மகனை யாவி
முப்படித் தவத்தால் வந்த முதலெனத் தழுவிக் கூர்ந்து
எப்படி யென்றோ நீயும் ஏங்கவே வேண்டா மப்பா
ஒப்பில் லாச்சிங் காசனம் உனக்கென வளரு தப்பா

விருத்தம்

ஏங்கியே பதற வேண்டாம் எனது மகனே நீகேளு
மூங்கிக் கலியை விட்டகன்று முழித்துக் குதித்து வுதித்தஅன்று
தாங்கி யுனைநான் வந்தெடுத்துத் தனது தாயை யிடம்நிறத்திப்
பாங்கி லுதித்த மகனுனக்குப் பட்டந் தரிப்பேன் பதறாதே

விருத்தம்

வண்ணம் பதியி னலங்காரம் வகைகளின்ன தென்று சொல்லி
எண்ணத் தொலையா தென்மகனே இரத்தின சிங்கா சனப்பவிசு
கண்ணைப் பறித்து நீசனுட கருவை யறுத்துக் கலியழித்து

விளக்கவுரை :   
Powered by Blogger.