அகிலத்திரட்டு அம்மானை 8461 - 8490 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

இருந்த பதியும்விட்டு ஏற்றவொரு காதம்விட்டு
வருந்த நருளோடே வழிகொண்டா ரன்போரே
கூடங் குளமும்விட்டுக் குளிர்ந்தசுக்குப் பாரும்விட்டுத்
தோடவழி யாறுங்கண்டு சூறாவழிக் காடும்விட்டு
நடந்து வொருவனத்தில் நல்லதண்ணீ ராவிகண்டு
கொடர்ந்த பலகாரம் கொண்டுதண்ணீர் தான்குடித்து
தகையாறிக் கொண்டு தானிருக்கும் வேளையிலே
வகையான நல்ல வாய்த்தமகா விட்டிணுவும்
பிறவி முதலில் பிறந்த சடமதுவும்
திறவி முதலோன் தெளிந்துமிகக் கொண்டாடி
எதிரே ஆள்விட்டு இங்கழைக்க வேணுமென்று
அருகே தானின்ற ஆதி முனியான
நல்ல முனிவரையும் நாரா யணரழைத்து
வல்லவர்தாம் நீங்கள் வாரு மென அழைத்து
வாருங்கோ பிள்ளாய் வாய்த்த முனிமாரே
நேருங்க ளோடு நிகழ்த்துகிறே னோர்வசனம்
நானே மித்த நல்லவுயி ரானதிங்கே
தானே வருகுதுகாண் எந்தன் தவத்தாலே
எதிரேபோய் நீங்கள் இங்கழைத்து வாருமென்று
பதியேறும் பெருமாள் பகர்ந்து முனியயச்சார்
அயச்ச முனிமார் அவ்வாயு போல்விரைவாய்ப்
பயபட்ச முடனே பகர்ந்த இருமுனியும்
எந்த வழியாய் இவர்கள்வரு வாரெனவே
அந்தந்த வழிக்கு ஆலோட்டம் பார்த்துவந்தார்
வந்து ஒருவழியில் வரவேகண் டம்முனிவர்
சந்துஷ்டி யாகித் தாழ்ந்துநமஸ் காரமிட்டு
கண்டு குவித்துக் கனக முனிமார்கள்
வண்டுசுற்று மார்பனுட வாய்த்தகரம் ரண்டதையும்
முனியிருபேர் தோளில் உயர்த்தி மிகவேந்தி
துணிவுடனே மாமுனிவர் தோளின்மே லேயிருத்திப்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 8431 - 8460 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சொற்பனம்போல் சுவாமிவந்து சொன்னாரே வுத்தரவு
உற்பனம்போல் கொண்டு உற்றஅவர் மாதாவும்
மகனே யின்றிரவில் மனஞ்சலித்து நான்வாடி
அகம்வைத்த எண்ணம் அறிந்துசிவ நாரணரும்
வந்துசொன்ன வுத்தரவை மகனேநீ கேளுவென்று
விந்து வழிக்கிளையோர் மிகுவாகக் கேட்டிருக்கச்
சொல்லுகிறா ளந்தச் சொற்பனத்தை யன்போரே
நல்லுறவாய்க் கேளுமென்று நவிலுவா ளன்போரே
ஆயிரத் தெட்டு ஆண்டிதுவா மிவ்வருசம்
மாசியென்ற மாதமிது வாய்த்ததேதி பத்தொன்பது
இம்மாத மித்தேதி ஏற்றதிருச் செந்தூரில்
நம்மாணை கொடியேறி நல்லதிரு நாள்நடக்கு
அங்குன் மகனை அழைத்துவ ருவாயானால்
எங்குள்ளோ ருமறிய இப்பிணி யுந்தீர்த்து
நல்லபே றுங்கொடுப்போம் நம்மாணை தப்பாதெனச்
சொல்லவே கண்டேன் சுவாமிகரு மேனிநிறம்
நான்கண்ட சொற்பனந்தான் நழுவிமிகப் போகாது
தேன்கண்டாற் போலே சிரித்து மனமகிழ்ந்து
இந்தக் கனாவதற்கு இங்கிருந் தங்கேபோய்
வந்தல்லா தேபிணியும் மாறவகை யில்லையல்லோ
என்றுரைக்க எல்லோரும் இன்பமுட னேமகிழ்ந்து
நன்றுநன்று போவதற்கு நடைக்கோப்பு கூட்டுமென்றார்
வேண்டும் பலகாரம் விதவிதமாய்ச் சேகரித்து
ஆண்ட கருப்புக்கட்டி ஆனதெல்லாஞ் சேகரித்துத்
தானதர்மஞ் செய்ய தனங்கள் மிகவெடுத்துத்
தீன மானவரைத் திடமாகக் கூட்டிவந்து
ஆளுமிகச் சேகரித்து அகலநல்ல தொட்டில்வைத்து
நாளு கடத்தாமல் நடக்கவழி கொண்டனராம்
மாதாவும் மகனும் வாய்த்த நருளுடனே
நிதாவின் பாதாரம் நெஞ்சில் மிகநிறுத்தி

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 8401 - 8430 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

வானுபர மேசுரனார் மாயவனா ராணையிட்டு
நானும்நீ யுமாக நலமாக வாழ்வோமென்று
ஆணையிட் டிருபேரும் அகமகிழ்ந் தன்றுமுதல்
நாண மில்லாமல் நாயகன்போ லெவாழ்ந்தார்
மங்கை காணாமல் மறுவூரு தங்கறியாள்
அங்கவளைக் காணாமல் அயலூரு தங்கறியார்
இந்தப் படியாய் இவர்வாழும் நாளையிலே
எந்தநருளுங்கண்டு இவர்க்கிவளை யமைத்ததென்பார்
முன்னாள் அமைத்த ஊழி விதியெனவே
சொன்னா ரெவரும் சுவாமி யருளாலே
அன்றைக் கமைத்ததுவே அவளையிவர்க் கல்லாது
அன்றைத்தோசம் அகலஅப்போதுதான்
என்று நருளெல்லாம் இயம்பி மிகவுரைத்தார்
மன்றீ ரேழுமறிய மங்கையொடு வாழ்கையிலே
உற்ற வயசு ஓரிருபான் ரண்டதிலே
சத்துராதி யோர்நீசன் தானே பிழையேற்க
ஏற்கவே நீசன் இடறுசெய்த ஏதுவினால்
ஆக்கம் அடக்கி அமர்ந்து பிணியெனவே
எல்லோரு மறிய இவரிருந்தா ரம்மானை
வெல்லாரு மில்லா விசையடக்கித் தானிருந்தார்
நொம்பலங்க ளென்று நொந்து மிகவுழைந்து
தம்பிலங்க ளடக்கித் தருணம் புலம்பலுற்றார்
கருவுற்ற தோசம் கழிந்து சிவஞானத்
திருவுள மாகி சிவமய மாய்ப் பெறவே
மனதில் மிகவுற்று மாயவரை நெஞ்சில்வைத்துத்
தினமும் வருந்தித் தீனமென வேயிருந்தார்
அப்படி யோர்வருசம் அங்கமதி லூறலெல்லாம்
முப்படி ஞாயமதால் உலகில் கழியவிட்டு
எகாபரா தஞ்சமென்று இருக்குமந்த நாளையிலே
மகாபர னார்செயலால் மாதாவின் கண்ணதிலே

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 8371 - 8400 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

எச்சா தியார்க்கும் இவர்நல்ல வரெனவே
அச்சாதி யெல்லாம் அகமகிழத் தான்வளர்ந்தார்
முன்னுதித் துடன்பிறந்தோர் ஒருவர்மூப் பாடாமல்
பின்னுதித்தும் பெரியோராய்ப் பெருமையுட னேவளர்ந்தார்
தாய்தகப் பன்மாமன் சந்தமிந்தத் தம்பியென்றும்
ஞாயவா னென்றும் நாடி மிகவளர்த்தார்
ஊருக்குந் தலைவன் உடையவழிக்குந் தலைவன்
ஆருக்குந் தலைவனென்று அன்னை பிதாவளர்த்தார்
ஞாய மிருப்பதனால் நாடாள்வா னென்றுசொல்லித்
தாய்தமர்க ளெல்லாம் தாங்கி மிகவளர்த்தார்
சொல்லுக்கும் வல்லவனாய் சூராதி சூரனிவன்
மல்லுக்கும் வல்லவனாய் உபாயத் திலும்பெரியோன்
மங்கையர்க்கு மேற்றவனாய் மாமோகக் காமீகன்
எங்கும்பேர் கேட்கவைப்பான் இவன்கீர்த்தி நல்வளமை
பல்லார்க்கும் ஏறிடுவான் பார்முழுதும் ஆண்டிடுவான்
எல்லார்க்கும் நல்லவனாய் இவன்சமைவா னென்றுசொல்லி
எவ்வோருங் கொண்டாட இன்பமுட னேவளர்ந்தார்
அவ்வோருங் கொண்டாட அவர்வளரும் நாளையிலே
பத்து வயது பண்போ டிருபதிலே
மற்று நிகரொவ்வா மன்னவர்போ லேவளர்ந்தார்
எல்லாத் தொழிலும் இதமிதமாய்க் கற்றுமிகப்
பொல்லா தாரோடு பெரும்பகைபோ லெசீறி
நல்லாரை யுள்ளில் நாளு மறவாமல்
கல்லாரை யெல்லாம் கண்டுகழித் தேயிருந்தார்
ஈவதற்குத் தர்மனென எளியோரைக் கண்பார்த்து
ஆய்வதற்கு நல்லான் என்றே மிகவளர்ந்தார்
பதினே ழுவயதில் பண்டமைத்த பெண்ணோடு
விதியா னபடியால் மெல்லியர்மே லிச்சைகொண்டு
கூடிக் குணமாய்க் கொண்டவனை யுமகற்றித்
தேடி யிவரோடு செய்யரச மாயிருந்தாள்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 8341 - 8370 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

நின்று தவமுடித்து நெடியரனை மாதுவையும்
கண்டு பதம்வாங்கிக் கைகண்ட திவ்வூரு
அதியரசன் முன்னாள் அதிகத் தவமிருந்து
பதியரசி யானப் பார்வதியை ஈன்றதுதான்
இவ்வூரு தெச்சணந்தான் ஏற்றதா மரையூரு
செவ்வூரு நல்ல சிறந்தமண வைப்பதிதான்
வானலோ கம்வாழும் வாய்த்ததெய் வேந்திரனும்
தானவரைக் காணத் தவசிருந்த திவ்வூரு
பஞ்சவர்க்கு முன்னம் பசுவா னுதவிசெய்ய
அஞ்சல்செய்து நாதன் அமர்ந்திருந்த திவ்வூரு
சாம்பு சிவசான்றோர் தழைத்திருந்த திவ்வூரு
தாம்பிரவர்ணி யாவி தழைத்திருந்த திவ்வூரு
பரராச முனிவன் பாரத் தவசுபண்ணி
விரமான வியாகரரை மிகஈன்ற திவ்வூரு
தவம்புரிய வென்று தானினைத்த பேர்களெல்லாம்
பவமற்ற தாமரையூர் பதியாகு மென்றுரைப்பார்
தவசுக் குகந்த சந்தமுற்ற பேரூரு
பவிசுக் குகந்த பாலதியத் தாமரையூர்
அவ்வூரு தன்னில் ஆதி யருளாலே
செவ்வுமகா விஷ்ணுவும் செய்தசட மேபிறந்து
பிறந்து வளர்ந்து பெருமைப் புகழ்காட்டி
மறந்திடா முன்னமைந்த மாதை யுறவாடிப்
பூலோக மனுக்கள் பிள்ளைபோ லேவளர்ந்து
மாலேற்கப் பூசை மனையில் மறவாமல்
விட்டிணுவைப் போற்றி விளங்கவொரு பீடமிட்டுக்
கட்டுத்தீர்க் காகக் கண்வளர்ந் தார்கலியில்
ஒருவர்க்கோர் பொல்லாங்கு உலகில்மிகச் செய்யாமல்
குருவைக் குருகண்டு கொக்கரித் தேவளர்ந்தார்
எதிர்த் தோரையடக்கி எல்லோர்க்கும் நல்லவராய்
உருத்துக் கரியவராய் உலகில் மிகவளர்ந்தார்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 8311 - 8340 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சூரியப் பிரகாச சுத்தவை குண்டராசர்
இக்கட லில்பிறந்து எங்கள் தமைக்கூட்டிப்
பக்கமதில் வைத்துப் பதவிதர வேணுமென்று
நில்லுங்கோ தவசு நினைவாக வென்றுசொல்லி
பல்லுயி ரும்வளர்த்த பாக்கியவா னேநீரும்
உரைத்தமொழி அய்யாவுன் உள்ள மறியாதோ
கறைக்கண்டர் மைத்துனரே கண்ணா எனத்தொழுதார்
அப்போது அய்யா நாரா யணர்மகிழ்ந்து
செப்போடு வொத்தாற்போல் சிரித்து மனமகிழ்ந்து
நல்லதுகாண் பிள்ளாய் நாடுந் தவம்புரிந்தீர்
வல்லவர்தாம் நீங்கள் வாருங்கோ வென்றழைத்து
அருகிலே நில்லுமென்று அகமழிந் தாரன்போரே
குருவான ஈசரொடு கூறுவார் பின்னாலே
நம்முடைய ஈசுரரே நாம்வந்த காரியங்கள்
எம்முதலே யின்னதென்று இயம்புவீ ரீசுரரே
கட்டான ஈசுரரும் காரியத்தைப் பாருமென்று
மட்டான வாரிக் கரையிலே வந்திருந்து
எல்லோருஞ் செந்தூர் இடமெல்லாங் கண்பார்த்து
வல்லோர்க ளெல்லாம் வந்திருந்தார் செந்தூரில்
சம்பூர்ணத் தேவனுக்கு நற்பேறு அருளல்
அங்கு சிலநாள் அமர்ந்திருக்கும் வேளைதனில்
சங்குவண்ணர் நேமித்த சடல மதின்பெருமை
உரைக்கிறார் அன்பர் உள்ள மகிழ்வதற்கு
தரையீரேழு மளந்த சுவாமி யுரைக்கலுற்றார்
சீரான நல்ல தெட்சணா புமியிலே
பாரான நல்ல பதிதா மரையூரில்
தவசிக் குகந்த தாமரையூர் நற்பதியில்
சிவசிவா வளரும் தெட்சணா புரிநாடு
பாண்டவரில் விசையன் பாசுபதம் வேண்டுதற்கு
ஆண்டபர மேசுரரை அகம்வைத்துப் போர்விசையன்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 8281 - 8310 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

செந்தூ ரலைக்கரையில் சேர்ந்தனர்கா ணம்மானை

விருத்தம்

கடற்கரை தனிலே வந்து கரியமா லீச ரோடும்
மடக்கொடி உமையா ளோடும் மறைமுனி தேவ ரோடும்
குடக்கலை பொருந்தும் வேதக் கூர்முனி ரிஷிக ளோடும்
கடற்கரை தனிலே வந்து கண்டனர் கடலைத் தானே

விருத்தம்

வந்தவ ரெல்லாப் பேரும் வட்டமிட் டதிலே நிற்கச்
சந்தன வாரி யோரம் தன்னிலே  நின்று ரண்டு
சுந்தர முனிவர் வந்து சுவாமிதன் பதமே பூண்டு
எந்தனின் பிரானே யென்று இருவரும் வணங்கிச் சொல்வார்

கலைமுனி ஞானமுனி வரவு

நடை


ஆதியே யெங்கள் அய்யாநா ராயணரே
சோதியே யெங்கள்தவம் சுறுக்கிட் டுருவளர்ந்து
கண்டுகொண் டோமையா கமலப் பொருளேநீர்
பண்டு மொழிந்தபடிப் பார்த்துவரந் தாருமையா
என்று முனியிருபேர் இறைஞ்சித் தொழுதிடவே
மன்று தனையளந்தோர் மறுத்துரைப்பா ரன்போரே
ஏதுகாண் மாமுனியே இங்குநின்ற வாறேது
தாது கரமணிந்த சன்னாசி சொல்லுமென்றார்
அப்போது மாமுனிவர் அவரேது சொல்லலுற்றார்
முப்போது நாங்கள் மும்முதற்சொல் மாறாமல்
மேலோகம் விட்டு மேகவண்ணா வுன்செயலால்
பூலோக மீதிறங்கிப் பொங்குகடல் கண்டணுகிச்
சோதி யுரைத்த சொல்லுரைத்து வாரியிடம்
நீதியாய் நில்லுமென்று நினைவாகச் சட்டமிட்டுக்
கயிலை யதேக கண்ணோக்கும் வேளையிலே
அகில மதிற்கலியன் அனைமிகக் கண்டேதான்
மேலோக மேற மேல்வழிகள் காணாமல்
பூலோக மானதிலே போயிருந்தோங் கண்கவிழ்ந்து
அப்போது ஆயனேநீர் அங்குவந்து எங்களிடம்
இப்போது போய்நீங்கள் என்னுடைய செந்தூரில்
வாரிக் கரையதிலே வாய்த்ததவ மாயிருந்து

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 8251 - 8280 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

தாங்கள் கிரிபோலே தங்கமலை யிங்குமுண்டு
பாடப் படிக்கப் பாவாண ரிங்குமுண்டு
ஆடக் கைகாட்ட அரம்பையர்க் ளிங்குமுண்டு
பாலேக்க நல்ல பாலு பழங்களுண்டு
மாலேக்க நல்ல மாதுகன்னி மார்களுண்டு
கண்டு களித்திருக்கக் கனக நிதிகளுண்டு
உண்டு சுகித்திருக்க உற்றவகை தானுமுண்டு
பல்லாக்கு முண்டு பதிபோகி மாருமுண்டு
குல்லாக்க ளுண்டு குளிக்கத்தாம்பி ராழியுண்டு
சதுரங்க மேடையுண்டு சண்முக விலாசமுண்டு
பதிரங்க மானப் பாலாழி யுண்டுமையா
மாதமொன்று தன்னில் வருங்கோடி பொன்னதிகம்
போத வருங்காண் பொற்சவடி யாபரணம்
வருசமொன் றானதிலே மாலைவட மாயிரந்தான்
கருவலங்க ளின்னதென்று காணாத் தொகையதுதான்
காவடி கோடி காணிக்கை முக்கோடி
பார்க்கோடி கூடி பலசாதி யெண்கோடி
இப்படியே யென்றனக்கு இருக்குதுகாண் பாக்கியங்கள்
எப்படியும் நீங்கள் இங்கிருக்க வேணுமென்றான்
கேட்டுநா ராயணரும் கீழ்ச்சுண் டசையாமல்
நாட்டமுட னுள்ளத்(து) அடக்கிமறுத் தேதுரைப்பார்
நல்லதுவே மருகன் நலமா யிருப்பதுதான்
பொல்லாது செய்யாமல் புரிந்தாள் வதேபோதும்
என்றுரைத்து அய்யா ஈசரோ டேதுரைப்பார்
பண்டுவிட்ட வாசகச்சொல் பற்றிச்சோ பூமியிலே
வல்லாண்மைக் காரருக்கு மதமிப்ப டியிருக்கும்
இல்லாதெளி மைகட்கு இருக்குமது மேல்தயவு
என்று இருபேரும் இயம்பி மனதடக்கி
நன்றெனவே கந்தனொடு நல்வார்த்தை யும்பேசி
அந்த முடனே எல்லோருந் தானடந்து

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 8221 - 8250 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

பேறானோர் காண்பார் பெரியதர் மப்புவியை
என்றுசில வாத்தியங்கள் இசைந்திசைந் தூதிவர
கன்றுதிரை மேய்த்தோரும் கயிலையங் கிரிகடந்தார்
கடந்து திருச்செந்தூர் கடல்காண வேணுமென்று
நடந்தாதி நாதன் நல்லீசர் சத்தியோடு
கூடிக் குணமாய்க் கொலுவார பாரமுடன்
தேடித் திருவைச் சிணமாய் வழிநடந்தார்
நடக்க மறையோர் நாற்றிசையும் போற்றிநிற்க
கடற்கரையை நோக்கிக் கண்ணோன் வழிநடந்தார்
வழிநடந்து மாயவரும் வல்லபர மேசுரரும்
களிகூர்ந்து மாதுமையும் கந்தன்செந் தூர்கடலின்
அருகேயொரு காதம் அவர்வரக்கண் டாறுமுகன்
கருவி குழறி கடற்கரையோன் தான்கலங்கி
ஆறு முகனும் அங்குள்ள தேவர்களும்
வீறுமயில் வாகனனும் வெற்றிரத மேறாமல்
என்னவித மாமோ என்று மனம்பதறி
மன்ன னறுமுகனும் மனமயங்கித் தான்பதறி
வந்துமா மன்தனையும் மாதா பிதாவையும்
சந்துஷ்டி யாகித் தாழ்ந்துநமஸ் காரமிட்டு
இம்மூ வரையும் யானெப்போ காண்பேனென்று
எம்முதலே நாயடியேன் எத்தனைநாள் காத்திருந்தேன்
காத்திருந்த நாளும் கரையெண்ணக் கூடாது
பார்த்திருந்த கண்ணின் பாவந் தொலைந்ததின்று
என்று வேல்முருகன் ஈசுரரை யுந்தழுவி
கன்றுதிரை மேய்த்த கண்ணரை யுந்தழுவி
மாதாவை யுந்தழுவி மனமகிழ்ந்து கொண்டாடிச்
சீரான தேவரையும் சிறப்பித்துக் கொண்டாடிச்
வாருங்கோ அய்யாஎன் மண்டபச்சிங் காசனத்தில்
பாருங்கோ அய்யாஎன் பதியி னலங்காரம்
நீங்க ளிருக்க நிறைந்ததங்க மேடையுண்டு

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 8191 - 8220 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

தேசபர சோதனைக்கு தெச்சணத் திலேயனுப்பி
வாசமுட னிங்கே வருவோ மெனவுரைத்தார்
அப்போது ஈசர் முதலானசங்கத் தோரர்களெல்லாம்
இப்போது நாங்கள் ஏகுவோ மும்மோடே
என்றுரைக்கச் சங்கம் எடுத்துரைப்பா ரெம்பெருமாள்
ஒன்றுமறி யாகாதே உற்றவுப தேசமதைத்
தேவன் திருமுதலாய்த் தெய்வகன்னி மார்முதலாய்
மூவர் முதலாய் உள்ளறியா விஞ்சையது
உவரியில் நடக்கிறது உங்களுக்கு தெரியாதே
நடந்தா லறிவார் நடக்குமுன் னேயொருவர்
அடக்க மறியாத அருவிஞ்சை யீதல்லவோ
அந்தவகை யானதினால் எல்லோரு மென்கூட
வந்தால் சரியல்லவே வரவேண்டாமென்றால் நோவீர்களே
என்றுரைக்க நாதன் எல்லோரு மேதுரைப்பார்
ஒன்றுமறி யாதிடினும் உம்முடனே வாறொமென்றார்
உடனே திருமால் உற்றலட்சு மிநினைவால்
நடைமேல் நடையெனவே நல்லசெந்தூர் தானோக்கி
உன்னி சிவமும் உற்றசத்தி நல்மாதும்
வன்னத் தேவர்முதலாய் மாமுனிவர் கின்னரரும்
சங்கமு மெங்குளோரும் சகலகலை வாணர்களும்
மங்களக் காரர்களும் மாதுசத்தி யைச்சூழ்ந்து
மரைவீசும் மாதர்களும் மாதுசக்தியைசூழ்ந்து
திரைதிரையாய்க் கன்னியர்கள் சேவித்து ஏத்திவர
ஏழு வாச்சியமும் இமலோக ரேற்றிவர
தொழுவார் சிலபேர் தொம்தொ மெனஆடிவர
நாராயணர் வைகுண்டராய் நல்வாரியில் பிறந்து
காரணமாய் தெச்சணத்தில் கலிசோதனைப் பார்த்து
கலியை யறுத்துக் கனாப்பயங்கள் தானறுத்துச்
சலிவில்லாத் தர்மபதி சத்திமக்க ளையாள
வாறாரைய்யா நாதன் வைகுண்ட மும்மூர்த்தி

விளக்கவுரை :   
Powered by Blogger.