அகிலத்திரட்டு அம்மானை 13171 - 13200 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

அங்கமெல்லாஞ் சோருதையோ ஆவிமெத்த வாடுதையோ
தங்கமணி நாங்கள்பெற்ற தவமணியை எங்கள்கையில் (மதலை)

மங்காத தெய்வகுல மக்களேழு மேழ்வழியும்
சிங்கார மாகஇப்போ சீக்கிரம்நீர் தாருமையா (மதலை)

விருத்தம்

மதலையுந் தந்து எங்கள் மனச்சட வெல்லா மாற்றிக்
குதலைகள் தமக்கு இந்தக் குருமுடி சூட்டித் தர்மப்
பதியுக மதிலே யெங்கள் பார்முடி மன்ன ராக
நிதமிருந் தரசே யாள நின்மக்கள் தருவீ ரென்றார்

விருத்தம்


தருவீ ரெனவுரைக்கு மடமாதே நீங்கள்
சந்ததியைப் பெற்றிடத்தில் தயவாய்ப் பாரும்
பெருகியே வாழ்ந்திருப்பா ரங்கே சென்று
பெற்றிடத்தைப் பார்க்குகையி லுண்டு மங்கே
மருவி யென்னைக் கேளாதே காட்டினூடே வளர்ந்திருப்பார்
கண்டுகொள்வீர் திட்டஞ் சொன்னோம்
சருவியென்னை நெருங்காதே மடவீ ரெல்லாம்
சந்ததியைத் தேடிவனஞ் செல்லு வீரே

விருத்தம்

செல்லுவீ ரெனமொழிந்த தேனே கண்ணே
சீமானே நாமாது புரக்கு மாலே
பல்லுயிரு மிகப்படைத்தப் பாக்கிய வானே
பருவனத்தி லெங்களைநீர் பற்றி வந்து
தொல்லைவினை செய்துநாம் சுமந்து பெற்ற
சுத்தகுல மானதெய்வச் சான்றோர் தம்மை
இல்லிடத்தி லிப்போது தருகி லானால்
இழுத்து வும்மைச் சந்தியிலே ஏற்றுவோமே

விருத்தம்


சந்தியி லேற்றுவோ மென்ற மாதேகேளு
தருவதுண்டோ முன்கடன்கள் தந்த துண்டோ
பந்தியழித் துங்களுடப் பேச்சை நானும்
பகருவே னுங்களைப் பார்பழித்துப் பேச
முந்தியிதை யுரைத்திட்டே னோடிப் போங்கோ
உலகநருள் அறிந்தாக்கால் சிரிக்க லாகும்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 13141 - 13170 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சரணம்

பெற்றநா ளின்றுவரைப் பிள்ளைதனைக் காணாமலே
மெத்தம னதுநொந்து மெய்யந்த ளருதையோ (மதலை)

வாலைப்ப ருவத்திலே வனத்தில்ம யக்கமிட்டுக்
கோலம ழித்தவேத கோலகால மாமுனியே (மதலை)

பாலர்பெற்ற நாள்முதலாய்ப் பன்னிரண்டு ஆண்டுவரைக்
காலதி ழகாமலே காட்டில்த வசிருந்தோம் (மதலை)

ஊணுஉ றக்கமில்லை ஒருவரின் தஞ்சமில்லை
மூணுநாலு காலம்வரை மூண்டத்த வசிருந்தோம் (மதலை)

சிங்கங்க ரடிபுலி திரியும்வ னத்தினூடே
நங்கைமா ரேழ்பேரும் நாடித்த வசிருந்தோம் (மதலை)

இத்தனைநா ளுந்தவ மிருந்துபின் னாங்களெல்லாம்
பெற்றன மனுவயிற்றில் பிறந்துவு தித்துவந்தோம் (மதலை)

முன்னிருந்த செல்வமென்ன மூதூர்சி றப்புமென்ன
மன்னுகந்த மாதுமையை மறந்துக லியில்வந்தோம் (மதலை)

ஆண்டச்சி றப்புமென்ன அருஞ்சுனை யாடலென்ன
காண்டம்நிறை வேறுதற்கோ கலியிலு தித்துவந்தோம் (மதலை)

உண்டிருந்த செல்வமென்ன உடுத்ததுகில் ஞாயமென்ன
கொண்டிருந்த விதிப்பயனோ கூறுகலி மீதில்வந்தோம் (மதலை)

பொன்னும்பந்தலாரமென்ன பூத்தொடுக்கும் சாரமென்ன
முன்னுரைத்து விட்டதுபோல் மூண்டகலி மிதில்வந்தோம் (மதலை)

பந்தடிக்கும்வீரமென்ன பைம்பொன்னிறமேடையென்ன
குந்தடிக்கமாவுலகில் குதித்துப் பிறந்துவந்தோம் (மதலை)

கன்னிய ழியுமன்னே காதல்தனைப் பெற்றதினால்
நின்னுபிள்ளைப் பாராமலே நெடுகந டந்துவிட்டோம் (மதலை)

கண்டுபிள்ளைத் தானெடுத்துக் கமலமுகத் தோடணைத்துப்
பெண்டேழும் பால்கொடாமல் பெருகவ னத்தில்சென்றோம் (மதலை)

பாலிளகி நல்லமிர்தம் பாலாய்ச்சொ ரியுதையோ
மாலழகா எங்களுட மனக்கவ லையைத்தீர்க்க (மதலை)

வர்ணநி றமதுவும் மக்களுட சாயலதும்
கண்ணதிலே கண்டறியோம் கையதிலே தாருமையா (மதலை)

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 13111 - 13140 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

குழைந்த வார்த்தை மிகக்கூறி குழந்தை யேழு மினவழியும்
நுழைந்தே யெடுத்து நொடிப்பொழுதில் நேரேகொண்டு தாறோ மென்றார்

தரு (பல்லவி)

பிள்ளையை நாம்தா றோம் - நீங்கள்பெற்ற
பிள்ளையை நாம்தா றோம்

அனுபல்லவி

பிள்ளையை நாம்தாறோம் கிள்ளை மடவாரே
கள்ள மொழியில்லை உள்ளதைச் சொல்லுகிறோம் (பிள்ளை)

சரணம்


காட்டு வனத்திலே கண்டுங்கள் தம்மையும்
லோட்டுகள் பார்த்துநீ ருடுகலை தோற்றதும்
மேட்டுக ளாயென்னை யெரிக்கத் துணிந்ததும்
பூட்டுகள் சொல்லாமல் பெண்ணேநீர் பெற்றிடும் (பிள்ளை)

அருவன மீதினி லமிர்தவாழ் கெங்கையில்
சொரூபமாய் நீங்கள் சுனையாடும் வேளையில்
வரும்வழி மீதுங்கள் வாய்மொழி மதங்கண்டு
கருவது கொண்டுநீர் காட்டினி லீன்றிடும் (பிள்ளை)

உறுவன மீதிலென் உபாயத்தை யறியாமல்
முறுவல்செய் தென்னைநீர் மொழிந்தது கண்டுநான்
இறுவான மேலோக எழுபுவி உயிரெனப்
பெறுகநான் செய்திடப் பேணியே நீர்பெற்றப் (பிள்ளை)

விருத்தம்


மடமயில் மாதே நீங்கள் வந்தென்னை நெருக்க வேண்டாம்
தொடவும்நீர் ஞாய மில்லை தூரவே யகல நின்று
அடவதில் பெற்ற பிள்ளைக்(கு) அடையாள மறியச் சொன்னால்
உடனிப்போ மதலை தந்து உலகமு மருள்வோ மென்றார்

விருத்தம்


அய்யனே குருவே யெங்கள் ஆதியே சோதி யான
மெய்யனே வொப்பில் லாத வேதநன் மணியே கேள்மோ
வெய்யநல் மதலை யீன்று வெட்கமு மிகவே யாகிக்
கையது தப்பி யோடக் கண்டமோ மதலை யென்றார்

சிந்து (பல்லவி)


மதலையைத் தாருமையா - நாங்கள் பெற்ற
மதலையைத் தாருமையா

அனுபல்லவி

மதலையைத் தாருமெங்கள் வயிறெல்லாங் கொதிக்குது
குதலைமொ ழிகள்கேட்டுக் கொஞ்சிக் குழைந்திருக்க (மதலை)

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 13081 - 13110 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

மாயமாய் நீங்கள் மருட்டி விழியாதுங்கோ
பாயமா யுங்கள் பகட்டி லடங்கேனான்
பண்டாரத் தோடே பழிமொழிகள் பேசாதே
அண்டாது உங்கள்மொழி அகலநின்று போய்விடுங்கோ
என்று அடாத்தியமாய் இவர்தான் மிகமொழிந்தார்
நின்று நினைத்து நேரிழைமா ரெல்லோரும்
அடந்து மடவார் ஆகத்திரண் டேகூடித்
தொடர்ந்து நெருங்கித் தொட்டுப் பிடிக்கவென்று
தார்குழலில் மூத்த சாத்திரத்தா ளேதுரைப்பாள்
வாரணியுங் கூந்தல் மடவா ரென்தங்கையரே
கள்ளக் கவுலாய்க் கண்மாயஞ் செய்துஅன்று
மெள்ள நெகிழ்ந்த மெக்குவாய்த் தாதனையம்
சென்று பிடித்துச் செய்தியென்ன கேளுமென்று
மன்றுபுகழ் சாத்திரத்தாள் தங்கையரைக் கண்காட்ட
மடவார்க் ளெல்லாம் மாகோப மாய்வெகுண்டு
அடவாக மாயவரை அடர்ந்து பிடிக்கலுற்றார்

விருத்தம்


தேன்மொழி மாரே யென்றன் சித்திரத் தங்கை மாரே
கான்வன மதிலே நம்மைக் கைகலந் திழிவு செய்த
மான்முனி தன்னைக் கண்டோம் வார்த்தையில் குழைக்கார் சோற்றை
வான்முனி தன்னை நீங்கள் வளையுங்கோ சிணமே யென்றாள்

விருத்தம்


செப்பிட மூத்த கன்னி தேவிய ராறு பேரும்
அப்படி ஒன்று போலே அவர்வளைந் தாதி தன்னை
முப்படி யெங்கள் தம்மை மொய்வன மதிலே வந்து
கற்பினை இகழச் செய்தக் கள்வரே யென்று சூழ்ந்தார்

விருத்தம்

சூழ்ந்தே நமது துகிலைமுன்னம் சுழியஞ் செய்த மாமுனியைப்
பூந்தே நெருங்கித் துகிலுரியப் பிடித்தே யிழுத்து நாமீன்ற
சாந்தோர் மக்க ளேழ்வரையும் தரவே யென்ன செய்தியென்று
ஓர்ந்தே கேட்போ மென்றுசொல்லி ஒன்றுபோலே வளைய லுற்றார்

விருத்தம்

வளைந்த போது மாயவரும் மனது ளுபாய மொன்றெடுத்து
இளந்த மொழிகள் சொன்னாக்கால் இளப்ப மிதுவே யாகுமென்று

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 13051 - 13080 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

எங்களுட பிள்ளை ஏழு மினவழியும்
அங்கங் குறையாமல் அவ்வழிகள் தாமுழுதும்
கொத்தோ டேசேர்த்துக் குடும்பத்தோ டேயடக்கிப்
பெற்றோர்க்கு எல்லாம் பெருவாழ்வு தான்வகுத்து
எங்களையுஞ் சேர்த்து இரட்சிய முமருளி
மங்களமாய் வாழ்வோமென்ற மாதவரே வந்தீரோ
இனியிப்போ தேழ்வரையும் ஏற்ற மணம்புரிந்து
வனிதவழு மாயவரே வைத்தாளு மென்றுசொல்லிப்
பாடியே மாமடவார் பாதம் பணிந்துநிற்க
நாடியே யெம்பெருமாள் நல்லதா கட்டெனவே
அருகில் மிகநிற்கும் அன்பான சான்றோரை
வருக அழைத்து வார்த்தைமிகக் கூறலுற்றார்
எந்தனக்கு முன்னமைத்த இளங்குழலா ரேழ்பேரும்
வந்தன ரேயிவர்கள் வளப்பமென்ன சொல்லுமென்றார்
கன்னிதானோ யிவர்கள் கள்ளிகளோ பாருமென்று
உன்னி மனதுள் உபாயமாய்த் தானுரைத்தார்
நடையுடைகள் பேச்சு நாரியர்கள் தங்குணங்கள்
மடமயிலின் சாடை மாதிரியைப் பாருமென்றார்
அப்போது சான்றோர் எல்லோரு மேமகிழ்ந்து
இப்போது எங்களுக்கு ஏதுந் தெரியாது
படைத்தவர்க் கேதெரியும் பாவையரின் தங்குணங்கள்
செடத்தமெல்லா மெங்களுக்குத் தெரியா தெனவுரைத்தார்
மாயவர் தான்பார்த்து மாதுகளைத் தாநோக்கித்
தூயவர் தான்வார்த்தைச் சொல்லுவார் பெண்களுடன்
நானெப்போ துங்களையும் நடுவனத்தில் கண்டதுதான்
தானெப்போ வந்தேன் தார்குழலே நானறியேன்
காட்டிலே வந்ததெப்போ கற்பை யழித்ததெப்போ
பேட்டிசெய்து பிள்ளை பெற்றதெப்போ நானறியேன்
ஒன்றுந் தெரியாது உங்களைநான் கண்டதில்லை
பெண்டுகளே யிப்பேச்சுப் பேசாதே போய்விடுங்கோ

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 13021 - 13050 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

எங்க ளுடவிதியால் இப்போமணஞ் சூட்டுதற்கு
விதிவந் திருக்குதுகாண் வேளையி தானதினால்
பெரியவுங்கள் தாய்மாரைப் பேயழைத்து வாருமென்றார்
நால்திசையும் நீங்கள் நடந்துமிக சத்தமிட்டு
மாலதியப் பெண்ணை வரவழைத்து வாருமென்றார்
சீரான நூல்முறைக்கு தேனெயெங்கள் தாய்மாரே
நாரா யணர்க்கு நல்லமணஞ் சூட்டுதற்கு
நாளான நாளிதுவாம் நன்னுதலே தாய்மாரே
தாழாமல் வாருமென்று சத்தமிட் டழையுமென்றார்
இப்படியே சொல்லி ஏற்றபுகழ்ச் சான்றோர்கள்
அப்படியே சொல்லி அழைத்தாரே சத்தமிட்டுப்
பாலருட சத்தம் பாவையர்கள் கேட்டுமிகச்
சீல முடனெழுந்து தெய்வமட மாதர்வந்தார்
வந்துமிக நாரணரை வாழ்த்தி மிகவணங்கி
சந்துஷ்டி யாகத் தங்கள்தங்கள் வாக்கில்நின்று
முன்முறைகள் சொல்லி மொழிந்துமிகப் படித்தார்
தென்பதிக ளான தெச்சணா பூமியிலே
நான்வந் திருந்து நானிலத் துள்ளவர்க்குத்
தீனம் பலதீர்த்து ஸ்ரீபண்டா ரமெனவே
நாம மிகக்கூறி நாட்டிலிருப் போமெனவே
தாமதமில்லாமல் தாமேபிறவிசெய்து
சொல்லி யெங்கள்தம்மைத் தொல்புவியில் வாருமென்று
நல்லவராய்ச் சான்றோருள் நாடிப் பிறவிசெய்தீர்
பிறந்து வளர்ந்து என்பேரு கேட்டவுடன்
மறந்திடா வண்ணம் வாருங்கோ என்றுசொல்லிப்
இங்குபிறவிசெய்த நாயகரே பெரியவரே வந்தீரோ
கங்கை திரட்டி கறைகண்டர் தன்சிரசில்
பெண்க ளேழுபேரும் பிரியமுடன் வாழ்ந்திருந்து
எங்கள்கற் பெல்லாம் ஈடழிய வேதுணிந்து
சங்கை யழித்த தலைவனேநீர் வந்தீரோ

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 12991 - 13020 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

தினத்தினங்கள் பாடித் திருவேடம் போடலுற்றார்

விருத்தம்

முன்னே குருநா டைவருக்கு மீண்டு கொடுத்து மிகக்கலியால்
பொன்னோர் மானா யுருவெடுத்துப் பொருப்பே யேறி முனிகையினால்
சென்றோங் கூடு மிகப்போட்டு ஸ்ரீரங்க மேகச் செல்வழியில்
மின்னா ரிவர்க ளேழ்வரையும் மேவிப் புணர்ந்தோ மவ்வனத்தில்

விருத்தம்


வனத்தில் புணர்ந்து மாதர்களை மக்க ளேழும் பெறவருளிப்
புனத்தில் காளி தனைவருத்திப் பிள்ளை யேழு மிகஈந்து
இனத்தில் பிரிந்த மானதுபோல் இவர்க ளேழு மடவாரை
வனத்தில் தவசு மிகப்புரிய மனதைக் கொடுத்து மீண்டோமே

விருத்தம்

மீண்டோங் கயிலைக் கிருந்துபின்னும் மெல்லி யிவர்கள் தவம்பார்க்க
ஆண்டோர் சிவனா ருமையாளும் யாமுந் தவத்துக் கருள்புரிந்து
சான்றோரிடமே பிறவிசெய் தரணி தனிலே நாம்வருவோம்
என்றே விடைகள் கொடுத்தயைச்ச இளமா மாதர் வந்தனரே

நடை

முற்பிறவி செய்த மொய்குழலார் வந்தாரென
நற்பிறவி கொண்ட நாரா யணர்மகிழ்ந்து
ஆடரம்பை மாரை அருமைமணஞ் சூட்டவென்று
வேடம திட்டார் வீரநா ராயணராய்
நாரா யணராய் நல்லதிரு வேடமிட்டுச்
சீரான காவிச் சீலை மிகப்புரிந்து
ஒருதோளில் பொக்கணமும் உத்திராட்ச மாலைகளும்
துரித முடன்சிரசில் துளசிமா லைபுனைந்து
கையிற் பிரம்பும் கனத்தசுரைக் கூடுடனே
மெய்யில் வெண்பதமும் உத்திராட்ச மாயணிந்து
வேலுமிகப்பிடித்து வேடமிகதரித்து
மாலு நிறமாய் வாய்த்ததொட்டில் மீதிருந்து
ஆகமத்தி லுள்ள அறிவுஞா னம்பேசிப்
பாகமதில் நிற்கும் பாலதியச் சான்றோரைப்
பார்த்து அருகழைத்துப் பச்சைமா லேதுரைப்பார்
நாற்றிசை யுமறிய நல்லகுலச் சான்றோரே
உங்களுட தாய்மார் உற்றகன்னி மார்களைநான்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 12961 - 12990 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

பண்டு முறைபோல் பிரப்பிரம மாயிருக்கும்
எண்ணித் திருமால் இருதயத்தி லேயடக்கி
மண்ணி லுள்ளோர்கள் வந்துமிகக் கூடிநிற்க
மேலோகத் தார்கள் இறைஞ்சிமிகப் பார்த்துநிற்கப்
பூலோக மெல்லாம் புதுமையெனப் பார்த்துநிற்க
அப்போது மாயாதி ஆகமத் தின்படியே
செப்போடு வொத்த தேசத் திருப்பதியில்
வாழுகின்ற தேவரையும் வாகாய் வரவழைத்து
நாளுக்கு நான்சொன்ன ஞாய முறைப்படியே
நடத்தாம லிப்போ ஞாயமீறி நீங்கள்
அடத்தமாய்ச் செய்வதென்ன எல்லோருஞ் சொல்லுமென்றார்
உடனே யெல்லோரும் உள்ள மிகத்தளர்ந்து
திடமே குளறிச் சொல்லவா யில்லாமல்
புத்தி மயங்கிப் பொறியழிந்து தேவரெல்லாம்
சத்திகெட்டார் போலே தானே விறுவிறுத்து
நின்ற நிலையை நெடியதிரு மாலறிந்து
குன்றுதனில் கொண்டு கொழுவிலங்கில் தான்சேர்த்து
மன்று ஒருகுடைக்குள் வைகுண்டம் ஆளவரும்
இன்றுமுதல் லக்குவரை இருங்கோ பாராவதிலே
வைத்தாரே நல்ல வடவா முகமதிலே
செய்த்தான் விதியெனவே தேவரெல்லா மிருந்தார்
அந்த அவதாரம் அதிக முடனடத்திச்
சந்தான மான சப்தகன்னி மாரையினி
மாமணங்கள் செய்து மாதரேழு பேர்களுக்கும்
தாமதங்க ளின்றி சந்ததிகள் தாங்கொடுத்து
இராச்சிய முங்கொடுத்து ஏற்றபவி சுங்கொடுத்(து)
இராச்சிய மாளச் செய்யவே ணுமெனவே
நினைத்துத் திருமால் நின்றிதயத் தேயடக்கித்
சினத்துதிருமால் திருவேசம் அமைப்பதற்கு
தனத்தனங்கள் பாடித் தந்தனங்கள் போடலுற்றார்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 12931 - 12960 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

வல்லப் பொருளும் மனது ளறிந்திருப்பார்
அறிந்து சிலநாள் அகமகிழ்ந்து தான்பார்த்துச்
செறிந்த குணநாதன் தேதி கணக்கதிலே
இகனை நடத்த எண்ணமுற்றி ருக்கையிலே
உவமை பலசொல்லி உற்றதெய்வக் கன்னியர்கள்
அனைவோ ரும்புகழும் அரன்கயிலை வாழ்ந்ததுவும்
சுனையாடப் போனதுவும் தூயோ னடத்தினதும்
பிள்ளைதனைப் பெற்றதுவும் பெருவனத்தில் சென்றதுவும்
வள்ளல் சிவனை வருந்தித் தவம்புரிந்து
உலகில்மிகத் தோன்றும் உள்ளவர்த்த மானமெல்லாம்
சிலைநுதலிக் கன்னி சொல்லி மிகப்படிப்பார்
வனதேவதைகள் வந்துமாறி அடித்ததுவும்
இனமினமாய்ச் சொல்லி ஏழுகன்னியும் படிப்பார்
அப்போ திருமால் அடக்கி மிகமனதில்
செப்புவ தெல்லாம் சிந்தைதனில் கொண்டிருந்தார்
உமைமண்டைக் காட்டாள் உற்ற பகவதியாள்
இமையோர் புகழும் ஏற்றகுல பார்பதியாள்
சீதை மடந்தை சேயிழைமா ரெல்லோரும்
மாதவனை நோக்கி வளங்கூறி யேபடிப்பார்
பாவிக் கலியன் பழிநீசன் தோன்றினதால்
மேவிக் கலியில் மிகமூழ்கி மாயமதால்
பாயக்கலியை பரிந்தளைக்கும் நாளையிலே
மாயக் கலியை வதைக்குமந்த நாளையிலே
நீசக்கலியன் நிர்ணயத்தையும் கெடுத்து
தேசமதி லெங்களையும் திருக்கல்யாண முகித்து
எங்களுட நாயகனார் இங்குவரு வோமெனவும்
எங்களையு மிங்கே இக்கோல மாய்வரவே
சொல்லி யயைச்ச சுவாமிநீர் வந்தீரோ
பல்லுயிரும் பணியும் பரமனேநீர் வந்தீரோ
என்று மடவார் இப்படி யேயிசையப்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 12901 - 12930 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

ஊருக்கூ ரேயிருந்து உற்ற நருட்களெல்லாம்
பாருகங் காணப் பண்பாகக் கொண்டாடி
உமைபார் வதியெனவும் உற்றமுத் தாரெனவும்
இமையோர் புகழும் இலட்சுமி நானெனவும்
சத்திகன்னி மாதரென்றும் தார்குழலார் தோழியென்றும்
பத்தியுள்ள நல்ல பரமே சொரியெனவும்
மண்டைக்காட் டாளெனவும் மாதுநல்லாள் தோழியென்றும்
பண்டையுள்ள ஈசொரியாள் பாக்கிய வாட்டியென்றும்
வள்ளிதெய் வானை வாய்த்தபக வதியெனவும்
பூம டந்தையென்றும் பெரிய பிராட்டியென்றும்
பார்ம டந்தையென்றும் பத்திரமா காளியென்றும்
நாகக் கன்னியென்றும் நல்லதெய்வக் கன்னியென்றும்
பாகைக் கைகாட்டும் பைங்கிளிமார் நாங்களென்றும்
இப்படியே நல்ல ஏந்திழைமா ரெல்லோரும்
அப்படியே நல்ல அவனிப்பெண் ணார்பேரில்
ஆரா தனையாய் அங்கங்கு தான்கூடி
சீராகக் கூடிச் சேர்ந்துவரு வார்தினமே
ஆண்பிள்ளை கள்பேரில் ஆனசிவன் மாலெனவும்
நான்பிரமா வென்றும் நல்ல அனுமனென்றும்

சத்தகன்னிமார் வருகை

காலனென்றும் ஏமனென்றும் கடியபெலக் கந்தனென்றும்
மாலவனின் மக்களென்றும் மாமுனிமார் நாங்களென்றும்
தேவ ரிஷியெனவும் சிமிள்கருட சேவனென்றும்
தாவமுள்ள நல்ல சன்னாசி மார்களென்றும்
ஆரா தனையாய் அவர்கள் மிகஆடிச்
சீராகக் காண்டம் செப்பிமிகப் படிப்பார்
வருவார் தினமே மாயோனிட மதிலே
கருவா யுதித்த காண்டம் மிகப்படிப்பார்
இப்படியே பெண்ணாணும் யாம முறைப்படியே
அப்படியே வந்து ஆடி மிகப்படிக்க
நல்லநா ராயணரும் நாட்ட மிகஅறிந்து

விளக்கவுரை :   
Powered by Blogger.