அகிலத்திரட்டு அம்மானை 11551 - 11580 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

ஆளுக் கொருவன் ஆவானோ நீசனெல்லாம்
தூளுபோ லாக்கவென்று துடியா யெழுந்திருந்தார்
சான்றோர் சினத்துத் தாறு மிகப்பாய்த்து
ஆன்றோரை நெஞ்சில்வைத்து ஆடை மிகஇறுக்கி
உடையிறுக்கிக் கட்டி உல்லாசத் தொங்கலிட்டுப்
படைத்திரளாய்ச் சான்றோர் பண்பா யொருமுகமாய்
எதிர்த்துநிற்கும் போது எம்பெருமாள் தானறிந்து
பொதுக்கென்ற கோபமதைப் புந்திதனி லடக்கிப்
பொறுத்து இருந்தவரே பெரியோரே யாகுமக்கா
அறுத்திட வென்றால் அபுருவமோ என்றனக்கு
வம்புசெய்வதைப் பார்த்து வதைக்கவந்தே னக்குலத்தை
அன்புக் குடிகொண்ட அதிகமக்கா நீங்களெல்லாம்
பொறுத்து இருங்கோ பூலோகம் ஆளவைப்பேன்
மறுத்துரை யாடாமல் மக்களென்ற சான்றோர்கள்
என்னசெய்வோ மென்று இவர்களையைத் தாங்கடித்து
பின்னே விலகிப் பெரியவனே யென்றுநின்றார்

நீசன் கொடுமை


நீசன் மகிழ்ந்து எதிர்ப்பாரைக் காணோமென்று
பாசக் கயிறுகொண்டு பரமவை குண்டரையும்
கட்டி யிறுக்கிக் கைவெடியா லிடித்துக்
கெட்டி யிறுக்கிக் கீழேபோட் டுமிதித்துத்
தலைமுடியைத் தான்பிடித்து தாறுமா றாயிழுத்துக்
குலையக் குலைத்ததுபோல் குண்டரைத் தானலைத்துக்
குண்டியிலே குத்திக் குனியவிடு வானொருத்தன்
நொண்டியோ வென்று நெளியிலே குத்திடுவான்
வெடிப்புடங் கால்சுவாமி மேலெல்லாந் தானிடித்து
அடிப்புடங்கு கொண்டு அடித்தடித்துத் தானிழுப்பான்
சாணாருக் காகச் சமைந்தாயோ சுவாமியென்று
வாணாளை வைப்போமோ மண்டிப் பதனிக்காரா
பனையேறி சுபாவம் பட்டுதில்லை யென்றுசொல்லி
அனைவோரை யும்வருத்தி ஆபரணந் தேடவென்றோ

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 11521 - 11550 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

புரிந்தவன் கோட்டி செய்து பிடிக்கவே வந்தா னங்கே

விருத்தம்

வருமுன்னே யருகில் நின்ற மக்களை வைந்த ராசர்
கருதின மாக நோக்கிக் கடக்கவே நில்லும் நீங்கள்
பொருதிட நீசன் வாறான் பொறுத்துநாம் வந்த போது
அருகிலே உங்கள் தம்மை அழைத்துநாம் கொள்வோ மென்றார்

சுவாமி பொறுமை உரைத்தல்


நடை


முப்படியே யுள்ள முறைநூற் படியாலே
இப்போது நீசன் இங்கோடி வாறான்காண்
மெய்ப்பான மக்களெல்லாம் விலகிநின்று வந்திடுங்கோ
செய்கிறதைப் பார்த்துத் திரும்பியிங்கே வந்தவுடன்
கையருகி லுங்களையும் கட்டாய் வரவழைப்போம்
என்று மக்களுக்கு இயம்ப அவர்விலக
முன்றுசெய்யாப்பாவி முடுகுங்கௌடனுமே
கூட்டப் படையோடு கொக்கரித் தேதுடிப்பாய்ச்
சாட்டை வெறிபோலே சாடிவந் தான்கௌடன்
சூழப் படையைச் சூதான மாய்நிறுத்தி
வேழம் பலரேவி வெடியா யுதத்துடனே
வந்து வளைந்தான் வைகுண்டர் வாழ்பதியில்
சிந்துக் குயிரான ஸ்ரீபல்ப நாபருமே
கவிழ்ந்துபதி வாசலிலே கட்டிலின் மேலிருக்க
அவிழ்ந்த துணியோடே அவரிருக்கு முபாயமதை
அறியாமல் நீசன் அணிவகுத்துத் தன்படையைக்
குறியாய்ப் பிடிக்கக் கூட்ட மதில்நுழைந்து
சாணா ரினங்கள் சதாகோடி கண்டுளைந்து
வாணாள் வதைப்பானோ என்று மனதுளைந்து
குதிரை மேலேறிக் கொடுஞ்சாட்டை யால்வீசி
சதிரு சதிராய்ச் சாணாரைத் தானடித்து
அடிபட்ட போது அவர்கள்மிகக் கொக்கரித்து
முடிபடவே யிந்த முழுநீச வங்கிசத்தை
இப்போ தொருநொடியில் இவரையெல் லாமடித்து
மெய்ப்பாகக் கொன்று விடுமோ மெனச்சினத்தார்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 11491 - 11520 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

நல்லானே யுனக்கு நாட்டில் சிறப்புமெத்தக்
காணு மகனே கலிநீசன் கண்ணுமுன்னே
ஆணும் பெண்ணோடும் அன்புற்றி ருக்கையிலே
நல்ல திருவாளி நற்பட்டு வாகனத்தில்
செல்லத் திருவோடும் செம்பவள மாலையுடன்
வாகனத்  தேரும் வருமா ஞாலத்திருந்து
கோகனக மாலே குணமாக வேகூடிக்
காணுவோர் காண்பார் காணாதார் வீணாவார்
தாணுவே நீயொருவன் தானாக ஆண்டிருப்பாய்
இன்னம் பவிசு எண்ணத் தொலைந்திடுமோ
வன்ன மகனே வாறதெல்லாங் கண்டிருநீ
பதறாதே போயிருநீ பாரத் தவசியிலே
குதறாதே போயிருநீ கூண்டத் தவசியிலே
வாறநீ சன்தனக்கு மலங்காதே நின்றுகொள்ளு
போறநீ சன்தனக்கு பொறுமையாய் நின்றுகொள்ளு
என்று மகன்தனையும் எழுந்திருந்து போநீயென
மன்று தனையளந்தோர் மகனைக் கடல்கடத்திக்
கரையிலே கொண்டு கண்ண ருடனுறைந்தார்
பிதாவை யனுப்பிப் பெரியவை குண்டப்பொருள்
விதானித்து உச்சரித்து வேதவுல் லாசமிட்டுத்
தெச்சணா பூமி சென்று தவத்ததிலே
உச்சரித்து நாதன் உகந்து நடக்கலுற்றார்
நடந்தாரே தெச்சணத்தில் நல்ல முனியுடனே
படந்தார மாயன் பண்டு தவமிருந்த
தலத்திலே வந்து சுவாமி தவமிருந்தார்
சொல்லத் தொலையா காட்சியொடு
சுவாமி மிக இருந்தார்.

கலி சோதனை

விருத்தம்

இருந்தனர் விஞ்சை பெற்று இருபுற முனிவர் சூழப்
பொருந்திடும் கமல மாது பூரண மதுவாய் நிற்கக்
கரிந்திடும் நீசப் பாவி கயிறுவாள் வெடிகள் சூலம்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 11461 - 11490 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

செல்லப் பதிகள் மிகமுகித்துத் திருநாள் கண்டு மகிழ்ந்திருநீ
வல்லக் கொடிகள் மரம்நிறுத்தி வருவாய் நித்தம் வாகனத்தில்
பொல்லாக் கலியன் கண்டுழைந்து பொடிவா னித்த மடிவானே

விருத்தம்


இப்படிச் சிறப்பு எல்லாம் உனக்கிது மகனே மேலும்
எப்படி மலங்கி யென்னோ(டு) இதுவுரைத் தேது பிள்ளாய்
சொற்படி யெல்லா மந்தத் தேதியில் தோன்றுங் கண்டாய்
அப்போநீ யறிந்து கொள்வாய் அப்பனும் நீதாய னானாய்

நடை

நல்ல மகனே நான்வைத்த விஞ்சையெல்லாம்
எல்லை தனில்வந்து இகனை நடத்துமப்பா
என்னென்ன பவிசு இன்னம் நடக்குமப்பா
உன்னையின்னங் காணார் உலகி லொருமணிக்குக்
கெடுத்தானே யென்று கெடுவார் வெகுகோடி
நடுத்தானம் நம்முடைய நம்மக்கள் குன்றாது
புழுத்துச் சொரிவாய்ப் பூமி தனில்நீயும்
கழுத்துவரை முன்னூன்றிக் கண்ணுந் தெரியாமல்
ஆவி யலுகாமல் ஆடையொன் றில்லாமல்
பாவிப் பயல்கள் பரிகாசஞ் செய்யவென்று
கிடப்பாய்த் தெருவில் கிழவன்வேச மெடுத்துத்
துடைப்பார்கள் நம்மினத்தோர் தூக்குவார் நம்மினத்தோர்
சாணாச் சுவாமி சாவாறு ஆகுதென்று
வீணாக நீசரெல்லாம் வெகுளியாய்த் தானகைப்பார்
பெண்சிலரைக் கட்டிப் பெரும்புவியோ ரறிய
மண்சீமை யோரறிய மங்கையொடு சண்டையிட்டுத்
தெருவிற் கரையேறித் தேவியரைத் தான்கூட்டி
கருவி லுருத்திரண்டு கண்ணாளர் தாம்பிறந்து
சீமை நருளறியத் தேசந் தனிலாண்டு
தாண்மை பொறுதியுடன் சாணார் விருந்தழைத்து
மனுக்கள் முறைபோல் வாழ்வாய்ப் புவிமீதில்
தனுக்க ளுனக்குள்ளே சர்வது மேயடங்கும்
எல்லா மடக்கி யானுன் னிடமிருந்து

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 11431 - 11460 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

எண்ணும் வளர்ந்து வாழவைப்பேன் என்னா ணையிது நீசமகனே

விருத்தம்

மண்ணி லுள்ளோர் தாமறிய மனுவோர் சீவ செந்தறிய
கண்ணே யிவர்கள் கண்காணக் கலியிற் காட்சி மிகநடத்தி
புண்ணிற் கதிரு பட்டாற்போல் பொல்லா நீசன் கண்டுழைந்து
எண்ணியறியா நீசனெல்லாம் ஏங்கி மாள வைப்பேனே

விருத்தம்

மகனே நீயும் தவமிருக்கும் வாய்த்தஇடத் திலிப்போ சென்றால்
உகமே யறியக் கலிநீசன் ஓடி வந்து உனைப்பிடித்துச்
செகமே ழறிய உன்கையைத் திருக்கிப் பினனே கட்டிறுக்கிப்
பகையே செய்து மிகஅடித்துப் பார விலங்கில் வைப்பானே

விருத்தம்

வைப்பான் மூன்றே முக்கால்மாதம் வாய்த்த விலங்கில் நீயிருந்து
செய்ப்பாய் கலியை யறுப்பதற்குத் தெய்தி இதுவே கைவாச்சு
போய்ப்பா ரென்பான் பின்னுமவன் பெரிய குற்ற மிகவேற்று
மெய்ப்பா யவனு முரைத்ததுபோல் மெள்ள வுரைத்து இருந்திடுநீ

விருத்தம்

மனுவை யடித்த துபோலே வசைகள் சொல்லி மிகஅடிப்பான்
தனுவை யடக்கிக் கொண்டிருநீ சற்றும் புதுமை காட்டாமல்
இனிமே லறிவா யென்றுசொல்லி எண்ணி மனதி லெனைநினைந்து
கனிபோல் மகிழ்ந்து நீயிருநீ கண்ணே யெனது கற்பகமே

விருத்தம்

அன்பா யுன்னை யடுத்திருந்த ஆதிச் சாதி யவ்வினர்க்குத்
தன்பா லருந்துஞ் சாதிகட்குத் தவத்துக் குறுதி தான்கொடுத்து
என்பாற் கடலின் கரைதனிலே ஏழு மணிக்கு விடைகொடுத்துப்
பின்பா லவரை யருகழைத்துப் புசத்தி லடுக்க இருத்திடுநீ

விருத்தம்

கண்டாய் கண்டா யுடன்புதுமை கண்ணே வுனக்கு நற்காலம்
கொண்டாய் கொண்டாய் பத்தறையில் கோவில் காலும் சிவலாயமும்
தண்டா யுதத்தால் வாகனமும் சத்தி மாத ரிருபுறமும்
பண்டோர் காட்சி யுனக்குள்ளே பண்பாய்க் காணு தென்மகனே

விருத்தம்

காட்சிச் சிறப்புங் கலியாணம் கவரி வீசிக் கொலுவாரம்
சாட்சிக் கணக்கு முன்வருத்திச் சந்திர வர்ணக் கொடிநிறுத்தி
வாச்சி யுனக்குத் திருநாளும் வாய்த்த டம்மான முழங்க
காட்சி யுனது கண்முன்னே காணு மகனே கலங்காதே

விருத்தம்

பல்லக் கேறி தெருவீதி பகலத் தேரு நீநடத்திச்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 11401 - 11430 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

முன்பு விதியால் முழுநரக செத்திறந்து
என்று சபித்து எம்பெருமாள் தானடந்து
பண்டு பிறந்த பால்கடலுள் சென்றனரே

விருத்தம்
சென்றனர் தேவ ரோடு செகல்கரை தனிலே நின்று
நன்றினந் தன்னைப் பார்த்து நவிலுவார் வைந்த ராசர்
பண்டெனைப் பெற்ற தாதா பாற்கட லுள்ளே யென்னைச்
சென்றிட அழைக்கிறார் நீங்கள் செகல்கரை தனிலே நில்லும்

விருத்தம்


நில்லுமென் றினத்தை யெல்லாம் நிறுத்தியே கடலி னுள்ளே
பல்லுயிர் யாவும் ஆளும் பரமனு மங்கே செல்ல
வெல்லமர் தேவ ரெல்லாம் மேகனிற் குடைகள் போட
வல்லவன் தகப்பன் பாதம் வணங்கியே வைந்தர் சொல்வார்

விருத்தம்


அப்பனே வொப்பில் லாதா அலைகடல் துயின்ற மாயா
செப்பவுந் தொலையா நாமம் சிமையில் விளங்கப் பெற்றாய்
தப்பர வில்லா என்றன் தகப்பனே கேண்மோ வையா
எப்போநான் விளங்கி யுன்றன் இரத்தின சிம்மாசன மேறுவேன்

விருத்தம்


ஆண்டு ரண்டாச்சே மாதம் அயிரு பதினாலாச்சே
வேண்டுத லின்னங் காணேன் வெம்புறேன் கலியில் மூழ்கி
கூண்டுநீர் முன்னே சொல்லிக் குருவுப தேசம் வைத்த
ஆண்டின்னம் வருகி லையோ அப்பனே மெய்யுள் ளோனே

முட்டப்பதி விஞ்சை - 1


விருத்தம்


இப்படி மகன்தான் சொல்ல இருகையால் மகனை யாவி
முப்படித் தவத்தால் வந்த முதலெனத் தழுவிக் கூர்ந்து
எப்படி யென்றோ நீயும் ஏங்கவே வேண்டா மப்பா
ஒப்பில் லாச்சிங் காசனம் உனக்கென வளரு தப்பா

விருத்தம்

ஏங்கியே பதற வேண்டாம் எனது மகனே நீகேளு
மூங்கிக் கலியை விட்டகன்று முழித்துக் குதித்து வுதித்தஅன்று
தாங்கி யுனைநான் வந்தெடுத்துத் தனது தாயை யிடம்நிறத்திப்
பாங்கி லுதித்த மகனுனக்குப் பட்டந் தரிப்பேன் பதறாதே

விருத்தம்

வண்ணம் பதியி னலங்காரம் வகைகளின்ன தென்று சொல்லி
எண்ணத் தொலையா தென்மகனே இரத்தின சிங்கா சனப்பவிசு
கண்ணைப் பறித்து நீசனுட கருவை யறுத்துக் கலியழித்து

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 11371 - 11400 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

பண்டுதாம் பிறந்த பாற்கட லைநோக்கி

சுவாமி பாற்கடல் நோக்கி ஒடுதல்


ஓடத் துணிந்தார் ஒருவேச மும்போட்டு
ஆடத் துணிந்தார் ஆகாசத் தேதேவர்
ஆடையணியாமல் அரைக்கயிறு மில்லாமல்
நாடைக் கெணியாமல் நடந்தார் கடல்நோக்கி
நல்ல மனுச்சாதி நாரா யணாவெனவே
செல்ல மக்களெல்லாம் சிவசிவா என்றுசொல்லிக்
கூடத் தொடர்ந்துக் குவித்துப் பதம்போற்றித்
தேடரிய நல்லோர் சேவித்துப் பின்வரவே
ஆகாத நீச அநியாயச் சாதியெல்லாம்
வாயாரப் பேசி வம்புரைத் தேநகைத்தார்
பதறி யிவன்போறான் படைவருகு தென்றுசொல்லிக்
கதறிமிக ஓடுகிறான் கள்ளச்சுவா மியிவனும்
சாமியென்றால் நருட்குத் தோற்றுமிக ஓடுவானோ
நாமிவனை நம்பி நடந்ததுவும் வீணாச்சே
பேயனுட பேச்சைப் பிரமாண மாய்க்கேட்டு
ஞாயமது கெட்டோம் நாமெல்லா மென்றுசொல்லி
நீசக் குலத்தோர் நெடுந்தூரம் வைத்தார்காண்
தேசமதை யாளும் செல்லவைந்தார் சூட்சமதை
அறியாமல் நீசரெல்லாம் அப்போநன்றி யுமறந்து
வெறிகொண்ட பேயனென மேதினியில் பேசினர்காண்
நல்ல மனுவோர் நாரணா தஞ்சமெனச்
செல்ல மனுவோர் திருப்பாத முந்தொழுது
கூடி நடந்தார் குருவே குருவேயென
நாடி நடந்தார் நல்லபதியேற் வரெனக்
கண்டுகொள்வோ மென்று காட்சை யுடன்நடந்தார்
பண்டு அருள்பெற்றோர் பச்சைமா லுடன்நடந்தார்
அப்போ வைகுண்ட ராசர் மனமகிழ்ந்து
எப்போதும் வாழ்வார் எனக்கான மக்களெல்லாம்
வம்புரைத்த நீச வழிமுழுதுஞ் செத்திறந்து

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 11341 - 11370 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

வனிப்புடன் போவா யென்று வரிசையுங் கொடுத்தா னீசன்

விருத்தம்

கொடுத்திடும் வரிசை தன்னைக் குவித்தவன் வேண்டிக் கொண்டு
கடுத்தமாய்க் கௌவுட சாஸ்திரி கடும்படைக் கோல மிட்டுத்
தடுத்திடும் வீரர் தம்மைத் தானிங்கே வாரு மென்று
நடுத்தர மதிலே நின்று நல்லணி வகுக்க லுற்றான்

விருத்தம்


பரிநடைக் காரர் தம்மைப் பக்கமு முன்னே விட்டான்
கரிநடைக் காரர் தம்மைக் காவலாய் முன்னே விட்டான்
சரிபரி யேறிக் கௌவுட சாஸ்திரி முன்னே நின்று
வரிபடைக் கவசம் போர்த்து வந்தனன் படைக்கு முன்னே

விருத்தம்


அம்பெடுத் தெய்வே னென்று அவனொரு அணிகள் சாட
கம்பெடுத் தடிப்பே னென்று காலசன் மிகவே சாட
கொம்பெடுத் துதைப்பே னென்று குஞ்சரத் தலைவ ரோட
பும்படக் கொல்வே னென்று போயினன் கௌவுடன் தானே

நடை

இந்தநே ரந்தனிலே ஏகியந்தச் சாணானை
குந்தமது கொண்டிடித்துக் குண்டிக் கயிறிறுக்கி
இங்கேகொண்டு வாறேன் என்று கௌடனுமே
துங்க விருதுபெற்றுச் சூழப் படைவகுத்து
ஆயுத மம்பு அணியீட்டி தான்பிடித்து
வாயுதக் கணைகள் வகைவகை யாயெடுத்துப்
பரியை விதானமிட்டுப் பாய்ந்துக் கௌடனுமே
கரியைக்சூ ழநிறுத்தி கனபடைகள் பின்னிறுத்தி
நீசன் விடைவேண்டி நீணில முமறிய
பாசக் கயிறுடனே பாவியந் தக்கௌடன்
வாற விதமதையும் வைந்தப் பொருளறிந்து
காரணிக்க மொன்று கருத்தில் மிகநினைத்து
இப்போ பதறி எழுந்திருந்து வோடவென்று
அப்போது மாயன் அறிந்தேகும் வேளையிலே
நன்மையாய்ச் சொல்லி நாடுவது மெச்சாதி
தின்மையாய்ச் சொல்லிச் சிரிப்பதுவு மெச்சாதி
என்றுநாம் பார்ப்போம் என்று மனதிலுற்றுப்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 11311 - 11340 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சிராமனு மற்றோர் தன்னில் சேர்வது திடனோ இல்லை
வராகமா யுதித்த மாயன் மனுவெனப் பிறக்க மாட்டான்
இதாரடா இந்த வார்த்தை என்முன்னே சொல்லி நின்றாய்

விருத்தம்

காரண மான மாயன் கலியுகம் வருகென் றெண்ணி
நாரணன் பயந்து வோடி நல்மலை யேறி மானாய்
வாரண நாத னம்பால் வல்வேட னெய்து செத்தான்
தாரணி வாறே னென்று தவலோகஞ் சேர்ந்தான் மாயன்

விருத்தம்

அப்படிக் கொத்த மாயன் அவனியில் மனுப்போல் வாரான்
இப்படி யிவன்தான் சொன்ன இகழ்ச்சியை எங்கே கண்டோம்
கப்பிடிச் சாணான் கையில் கைக்கூலி வேண்டிக் கொண்டு
இப்படி மழுப்ப வந்தாய் ஏதடா செய்தி யென்றான்

விருத்தம்


மழுப்பில்லைக் கேளுங் கேளும் மாண்டுநான் போனா லென்ன
வழுப்பில்லை யுனக்குத் தூண்டல் வளருதே யவரி டத்தில்
கழுத்திலே யுனது கையால் கத்தியை வாங்கி வைப்பாய்
முழுத்தில்லை யானா லென்சொல் மேல்வீசை யரிந்து தாறேன்

விருத்தம்


ஆனையும் படையு முன்றன் அரண்மனைக் கோவில் காலும்
சேனையுங் குடையும் வியாழச் செல்வமுஞ் சிறப்போ டெல்லாம்
ஏனமு மிகவே தோற்று எரிந்துநீ கரிந்து சாவாய்
நானிதைச் சொல்ல வில்லை நாரண ருரைத்தா ரென்றான்

விருத்தம்

என்றிவன் சொன்ன போது ஏங்கியே வுளறிப் பின்னும்
பொன்னுற வகையி னாலே புத்தியி லறியா வண்ணம்
கொண்டிவன் தன்னைப் போடுங் கொடுவிலங் கதிலே சிங்கத்
தண்டிகை யெடுத்து வாரும் சாணெனச் சாமி பார்க்க

விருத்தம்

பார்க்கவே போவோ மென்று பார்முடி வேந்தன் சொல்லத்
தார்க்கெனப் பாவி நீசச் சறடனு மேதோ சொல்வான்
ஆர்க்கிது ஏற்குஞ் சாணான் அவனிடம் போவ தென்ன
கார்க்கதி கௌட சாஸ்திரி கடியனை யனுப்பு மென்றான்

விருத்தம்

அனுப்புமென் றுரைத்த போது அரசனு மேதோ சொல்வான்
துனுப்புடன் சாணான் தன்னைச் சூழ்ந்துநூற் கயிற்றாற் கட்டிக்
கனிப்புட னமது முன்னே கட்டுடன் கொண்டு வாரும்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 11281 - 11310 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

செய்துரி யோதனனைக் கொன்றச் செய்தியுங் கேட்டி லீரோ

விருத்தம்

இப்படி மாயன் தானும் இருமூன்று யுகங்கள் தன்னில்
ஒப்புடன் மனுப்போல் தோன்றி உவமைகள் பலதுஞ் செய்து
அப்படி யுகங்கள் தன்னால் அழிந்திடா வரங்கள் பெற்ற
செப்பிடக் கூடா மாயன் செய்தியுங் கேட்டி லீரோ

விருத்தம்

சாணெனக் குலத்தில் மாயன் சார்வரோஎன் றெண்ண வேண்டாம்
பாணனாய்த் தோன்றி நிற்பார் பறையனாய்த் தோன்றி நிற்பார்
தூணெனத் தோன்றி நிற்பார் தோலனாய்த் தோன்றி நிற்பார்
ஆணெனத் தோன்றி நிற்பார் அவருரு கேட்டி லீரோ

விருத்தம்

குசவனின் குலத்தில் வந்தார் குறவனின் குலத்தில் வந்தார்
மசவெனக் குலத்தில் வந்தார் மாடெனக் குலத்தில் வந்தார்
விசுவெனக் குலத்தில் வந்தார் வேடனின் குலத்தில் வந்தார்
அசுவெனக் குலத்தில் வந்தார் அவருரு கேட்டி லீரோ

விருத்தம்

எவ்விடந் தானாய் மேவி இருப்பவர்க் கெந்தச் சாதி
அவ்விட மாகா தென்று அவர்தள்ள மாட்டா ரையா
செவ்விட மாபோன் சூட்சம் செப்பிடத் தொலையா தையா
இவ்விடம் விட்டு நாமள் ஏகுவோம் நம்மூ ரென்றான்

விருத்தம்

என்றவன் சொன்ன போ இராசனு மிகவே கேட்டுப்
பொன்றுற விதங்கள் சற்றும் புத்தியி லறியா வண்ணம்
மன்றலத் தோர்க்கு மேற்கா வார்த்தையை யுரைத்தா யென்று
கொன்றவன் தன்னைப் போடும் கோபமா யுரைத்தா னீசன்

விருத்தம்

வேதமாங் கலைகள் தேர்ந்த மேற்குல மதிலே மாயன்
சீதமாய்ப் பிறவா வண்ணம் சிறுகுலம் புக்கு வானோ
ஆதர வில்லா வார்த்தை ஆர்க்குமே யேற்கா போடா
பாதகா எனக்குப் புத்திப் பகரவே வந்தாய் மோடா

விருத்தம்

நித்தமும் முன்னால் லட்சம் நேடிய பொன்க ளிட்டுச்
சத்திரச் சாலை தோறும் தர்மமு மளித்து நாமள்
சித்திரத் திருநாள் நித்தம் செய்கிற குலத்தைத் தள்ளி
நித்தியம் வேலை செய்யும் இழிகுலம் புக்கு வானோ

விருத்தம்

பிரமனை யொப்பாஞ் சாதிப் பிராமணக் குலத்தைத் தள்ளிச்

விளக்கவுரை :   
Powered by Blogger.