அகிலத்திரட்டு அம்மானை 11371 - 11400 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

பண்டுதாம் பிறந்த பாற்கட லைநோக்கி

சுவாமி பாற்கடல் நோக்கி ஒடுதல்


ஓடத் துணிந்தார் ஒருவேச மும்போட்டு
ஆடத் துணிந்தார் ஆகாசத் தேதேவர்
ஆடையணியாமல் அரைக்கயிறு மில்லாமல்
நாடைக் கெணியாமல் நடந்தார் கடல்நோக்கி
நல்ல மனுச்சாதி நாரா யணாவெனவே
செல்ல மக்களெல்லாம் சிவசிவா என்றுசொல்லிக்
கூடத் தொடர்ந்துக் குவித்துப் பதம்போற்றித்
தேடரிய நல்லோர் சேவித்துப் பின்வரவே
ஆகாத நீச அநியாயச் சாதியெல்லாம்
வாயாரப் பேசி வம்புரைத் தேநகைத்தார்
பதறி யிவன்போறான் படைவருகு தென்றுசொல்லிக்
கதறிமிக ஓடுகிறான் கள்ளச்சுவா மியிவனும்
சாமியென்றால் நருட்குத் தோற்றுமிக ஓடுவானோ
நாமிவனை நம்பி நடந்ததுவும் வீணாச்சே
பேயனுட பேச்சைப் பிரமாண மாய்க்கேட்டு
ஞாயமது கெட்டோம் நாமெல்லா மென்றுசொல்லி
நீசக் குலத்தோர் நெடுந்தூரம் வைத்தார்காண்
தேசமதை யாளும் செல்லவைந்தார் சூட்சமதை
அறியாமல் நீசரெல்லாம் அப்போநன்றி யுமறந்து
வெறிகொண்ட பேயனென மேதினியில் பேசினர்காண்
நல்ல மனுவோர் நாரணா தஞ்சமெனச்
செல்ல மனுவோர் திருப்பாத முந்தொழுது
கூடி நடந்தார் குருவே குருவேயென
நாடி நடந்தார் நல்லபதியேற் வரெனக்
கண்டுகொள்வோ மென்று காட்சை யுடன்நடந்தார்
பண்டு அருள்பெற்றோர் பச்சைமா லுடன்நடந்தார்
அப்போ வைகுண்ட ராசர் மனமகிழ்ந்து
எப்போதும் வாழ்வார் எனக்கான மக்களெல்லாம்
வம்புரைத்த நீச வழிமுழுதுஞ் செத்திறந்து

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 11341 - 11370 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

வனிப்புடன் போவா யென்று வரிசையுங் கொடுத்தா னீசன்

விருத்தம்

கொடுத்திடும் வரிசை தன்னைக் குவித்தவன் வேண்டிக் கொண்டு
கடுத்தமாய்க் கௌவுட சாஸ்திரி கடும்படைக் கோல மிட்டுத்
தடுத்திடும் வீரர் தம்மைத் தானிங்கே வாரு மென்று
நடுத்தர மதிலே நின்று நல்லணி வகுக்க லுற்றான்

விருத்தம்


பரிநடைக் காரர் தம்மைப் பக்கமு முன்னே விட்டான்
கரிநடைக் காரர் தம்மைக் காவலாய் முன்னே விட்டான்
சரிபரி யேறிக் கௌவுட சாஸ்திரி முன்னே நின்று
வரிபடைக் கவசம் போர்த்து வந்தனன் படைக்கு முன்னே

விருத்தம்


அம்பெடுத் தெய்வே னென்று அவனொரு அணிகள் சாட
கம்பெடுத் தடிப்பே னென்று காலசன் மிகவே சாட
கொம்பெடுத் துதைப்பே னென்று குஞ்சரத் தலைவ ரோட
பும்படக் கொல்வே னென்று போயினன் கௌவுடன் தானே

நடை

இந்தநே ரந்தனிலே ஏகியந்தச் சாணானை
குந்தமது கொண்டிடித்துக் குண்டிக் கயிறிறுக்கி
இங்கேகொண்டு வாறேன் என்று கௌடனுமே
துங்க விருதுபெற்றுச் சூழப் படைவகுத்து
ஆயுத மம்பு அணியீட்டி தான்பிடித்து
வாயுதக் கணைகள் வகைவகை யாயெடுத்துப்
பரியை விதானமிட்டுப் பாய்ந்துக் கௌடனுமே
கரியைக்சூ ழநிறுத்தி கனபடைகள் பின்னிறுத்தி
நீசன் விடைவேண்டி நீணில முமறிய
பாசக் கயிறுடனே பாவியந் தக்கௌடன்
வாற விதமதையும் வைந்தப் பொருளறிந்து
காரணிக்க மொன்று கருத்தில் மிகநினைத்து
இப்போ பதறி எழுந்திருந்து வோடவென்று
அப்போது மாயன் அறிந்தேகும் வேளையிலே
நன்மையாய்ச் சொல்லி நாடுவது மெச்சாதி
தின்மையாய்ச் சொல்லிச் சிரிப்பதுவு மெச்சாதி
என்றுநாம் பார்ப்போம் என்று மனதிலுற்றுப்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 11311 - 11340 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சிராமனு மற்றோர் தன்னில் சேர்வது திடனோ இல்லை
வராகமா யுதித்த மாயன் மனுவெனப் பிறக்க மாட்டான்
இதாரடா இந்த வார்த்தை என்முன்னே சொல்லி நின்றாய்

விருத்தம்

காரண மான மாயன் கலியுகம் வருகென் றெண்ணி
நாரணன் பயந்து வோடி நல்மலை யேறி மானாய்
வாரண நாத னம்பால் வல்வேட னெய்து செத்தான்
தாரணி வாறே னென்று தவலோகஞ் சேர்ந்தான் மாயன்

விருத்தம்

அப்படிக் கொத்த மாயன் அவனியில் மனுப்போல் வாரான்
இப்படி யிவன்தான் சொன்ன இகழ்ச்சியை எங்கே கண்டோம்
கப்பிடிச் சாணான் கையில் கைக்கூலி வேண்டிக் கொண்டு
இப்படி மழுப்ப வந்தாய் ஏதடா செய்தி யென்றான்

விருத்தம்


மழுப்பில்லைக் கேளுங் கேளும் மாண்டுநான் போனா லென்ன
வழுப்பில்லை யுனக்குத் தூண்டல் வளருதே யவரி டத்தில்
கழுத்திலே யுனது கையால் கத்தியை வாங்கி வைப்பாய்
முழுத்தில்லை யானா லென்சொல் மேல்வீசை யரிந்து தாறேன்

விருத்தம்


ஆனையும் படையு முன்றன் அரண்மனைக் கோவில் காலும்
சேனையுங் குடையும் வியாழச் செல்வமுஞ் சிறப்போ டெல்லாம்
ஏனமு மிகவே தோற்று எரிந்துநீ கரிந்து சாவாய்
நானிதைச் சொல்ல வில்லை நாரண ருரைத்தா ரென்றான்

விருத்தம்

என்றிவன் சொன்ன போது ஏங்கியே வுளறிப் பின்னும்
பொன்னுற வகையி னாலே புத்தியி லறியா வண்ணம்
கொண்டிவன் தன்னைப் போடுங் கொடுவிலங் கதிலே சிங்கத்
தண்டிகை யெடுத்து வாரும் சாணெனச் சாமி பார்க்க

விருத்தம்

பார்க்கவே போவோ மென்று பார்முடி வேந்தன் சொல்லத்
தார்க்கெனப் பாவி நீசச் சறடனு மேதோ சொல்வான்
ஆர்க்கிது ஏற்குஞ் சாணான் அவனிடம் போவ தென்ன
கார்க்கதி கௌட சாஸ்திரி கடியனை யனுப்பு மென்றான்

விருத்தம்

அனுப்புமென் றுரைத்த போது அரசனு மேதோ சொல்வான்
துனுப்புடன் சாணான் தன்னைச் சூழ்ந்துநூற் கயிற்றாற் கட்டிக்
கனிப்புட னமது முன்னே கட்டுடன் கொண்டு வாரும்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 11281 - 11310 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

செய்துரி யோதனனைக் கொன்றச் செய்தியுங் கேட்டி லீரோ

விருத்தம்

இப்படி மாயன் தானும் இருமூன்று யுகங்கள் தன்னில்
ஒப்புடன் மனுப்போல் தோன்றி உவமைகள் பலதுஞ் செய்து
அப்படி யுகங்கள் தன்னால் அழிந்திடா வரங்கள் பெற்ற
செப்பிடக் கூடா மாயன் செய்தியுங் கேட்டி லீரோ

விருத்தம்

சாணெனக் குலத்தில் மாயன் சார்வரோஎன் றெண்ண வேண்டாம்
பாணனாய்த் தோன்றி நிற்பார் பறையனாய்த் தோன்றி நிற்பார்
தூணெனத் தோன்றி நிற்பார் தோலனாய்த் தோன்றி நிற்பார்
ஆணெனத் தோன்றி நிற்பார் அவருரு கேட்டி லீரோ

விருத்தம்

குசவனின் குலத்தில் வந்தார் குறவனின் குலத்தில் வந்தார்
மசவெனக் குலத்தில் வந்தார் மாடெனக் குலத்தில் வந்தார்
விசுவெனக் குலத்தில் வந்தார் வேடனின் குலத்தில் வந்தார்
அசுவெனக் குலத்தில் வந்தார் அவருரு கேட்டி லீரோ

விருத்தம்

எவ்விடந் தானாய் மேவி இருப்பவர்க் கெந்தச் சாதி
அவ்விட மாகா தென்று அவர்தள்ள மாட்டா ரையா
செவ்விட மாபோன் சூட்சம் செப்பிடத் தொலையா தையா
இவ்விடம் விட்டு நாமள் ஏகுவோம் நம்மூ ரென்றான்

விருத்தம்

என்றவன் சொன்ன போ இராசனு மிகவே கேட்டுப்
பொன்றுற விதங்கள் சற்றும் புத்தியி லறியா வண்ணம்
மன்றலத் தோர்க்கு மேற்கா வார்த்தையை யுரைத்தா யென்று
கொன்றவன் தன்னைப் போடும் கோபமா யுரைத்தா னீசன்

விருத்தம்

வேதமாங் கலைகள் தேர்ந்த மேற்குல மதிலே மாயன்
சீதமாய்ப் பிறவா வண்ணம் சிறுகுலம் புக்கு வானோ
ஆதர வில்லா வார்த்தை ஆர்க்குமே யேற்கா போடா
பாதகா எனக்குப் புத்திப் பகரவே வந்தாய் மோடா

விருத்தம்

நித்தமும் முன்னால் லட்சம் நேடிய பொன்க ளிட்டுச்
சத்திரச் சாலை தோறும் தர்மமு மளித்து நாமள்
சித்திரத் திருநாள் நித்தம் செய்கிற குலத்தைத் தள்ளி
நித்தியம் வேலை செய்யும் இழிகுலம் புக்கு வானோ

விருத்தம்

பிரமனை யொப்பாஞ் சாதிப் பிராமணக் குலத்தைத் தள்ளிச்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 11251 - 11280 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

பம்மாத்தாய்க் காணுதுகாண் பிராக்கிரம மந்திரியே
இப்போ தொருநொடியில் இந்தச்சா ணான்தனையும்
மெய்ப்பாகக் கொண்டு விடவேணு மென்றன்முன்னே
என்றுமந் திரிமாரை ஏவுந் தறுவாயில்
அன்று அருகிருந்த ஆவிடையர் தம்வழியில்
ஒருவ னெழுந்து உற்றரசனை நோக்கிக்
கருதனம்போல் புத்தி கற்பித்தா னம்மானை

கலியரசனுக்குப் பூவண்டர் உபதேசம்

விருத்தம்


கேட்டீரோ முன்னா ளுள்ளக் கெறுவித வளங்க ளெல்லாம்
தாட்டிமை யாகச் சொல்வேன் தமியனும் வணங்கி நின்று
பூட்டியே மனதில் வைத்துப் புத்தியென் றெண்ணி நீரும்
நாட்டினில் நன்மை செய்து நலமுட னரசு செய்யும்

விருத்தம்

மாயனோ உபாயத் தாலே மனுவது போலே யாகி
ஆயனக் குலமுந் தோன்றி அவனியி லிருப்பன் கண்டீர்
மாயத்தை யறியா நீரும் மாளவே போக வேண்டாம்
ஞாயமா யுரைத்தே னையா நம்முட அரசுக் கேகும்

விருத்தம்

எளிமையாங் குலங்க ளென்று எண்ணுற மனுவே யல்ல
பழியென ஆதி நாதன் பார்க்கவே மாட்டா ரையா
அழிவது யுகத்துக் காச்சு ஆனதால் வருவார் திட்டம்
வழியிது இல்லை யையா மாறியே போவோம் வாரும்

விருத்தம்

தசரதன் மகவாய் மாயோன் சீமையில் வந்து தோன்றி
புசமுடப் பிறப்போர் கூடப் பிறந்ததுங் கேட்டி லீரோ
வசையுடன் மனுத்தா னென்று வாதிட்ட அரக்கன் தன்னை
விசையுட னறுத்த செய்தி விளம்பியுங் கேட்டி லீரோ

விருத்தம்

தெய்வகி வயிற்றி லுற்று ஸ்ரீகிருஷ்ணன் எனவே தோன்றி
வைவசு தேவன் பெற்ற மனுவென வளங்கள் நாட்டி
நெய்யிடை வழியிற் சேர்ந்து நெருட்டிமா ஞாலஞ் செய்து
செய்வதுங் கஞ்சன் தன்னைச் செயித்ததுங் கேட்டி லீரோ

விருத்தம்


ஐவர்க்குத் தூத னாகி அங்குமிங் கோடிச் சென்று
மைக்குழல் சிலர்கள் தம்மை மணங்களு மிகவே செய்து
மெய்ப்புடன் கிளைக ளோடு மேவியே குழாங்கள் செய்து

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 11221 - 11250 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சாமிதர்மத் தாலே தோச மதையழித்து
நற்பூ மியாக்கி நாடெங்கு மோர்குடைக்குள்
சொல்லொன்றுக் குள்ளான சுவாமிமகா விட்டிணுவும்
மனுவாய்ப் பிறந்து வைகுண்ட மென்றுசொல்லித்
தனுவை யடக்கித் தவசு மிகஇருந்து
நல்லோரை யெல்லாம் நாடி மிகஎடுத்து
வல்லோராய்ச் சாகாமல் வரங்கள் மிகக்கொடுத்து
மாளாவரங்கள் மக்களுக்கே தான்கொடுத்து
ஆள வருவார் அவர்வருகும் நாளிதுதான்
என்றுமிகச் சோதிரியும் இந்தக் குறியுரைக்க
நன்று நன்றென்று இராசன் மிகமகிழ்ந்து
சொல்லக்கேள் சோதிரியே சொன்னதெல் லாஞ்சரிதான்
எல்லையுண்டோ அவர் வந்திருக்கு மினங்களென்ன
சொல்லி விரிநீ சுத்தமுள்ளச் சோதிரியே
நல்லியல்பு பெற்ற நற்குறியோ னுரைப்பான்
இன்னவகைச் சாதியிலே இவர்வரு வாரெனவே
சொன்னக் குறியே சூதாய்த் தியங்குதுகாண்
தருமங்கொண்டு சுவாமி தரணியில் வந்ததினால்
பொறுமைக்குல மாயிருக்கும் பெரியவழி யாயிருக்கும்
நம்மாலே சொல்லி நவிலக்கூ டாதிதுவே
சும்மாஎனை நீங்கள் சோலிபண்ண வேண்டாமே
என்றந்தச் சோதிரியும் இணங்கி வணங்கிநின்றான்
மன்று தனையாளும் மன்னன்மறுத் தேபுகல்வான்
அப்படித்தா னானால் ஆதிமகா விட்டிணுவும்
இப்படியே வந்து இவர்பிறக்க வேணுமென்றால்
போற்றி நம்பூரி பிராமணசூத் திரக்குலத்தில்
ஏற்றிப் பிறக்க இயல்வில்லா மலிந்தப்
பிறர்தீண்டாச் சாணார் குலத்தி லவதரித்துப்
பிறக்க வருவாரோ பெரியநா ராயணரும்
சும்மாயிருந் தச்சாணான் சுவாமி சமைந்ததெல்லாம்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 11191 - 11220 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

தான்தா னுரைபகர்ந்து சாதிபல தும்வருத்தி
ஒருதலத்தி லூட்டுவித்தான் உற்றநீ ரானதையும்
அருகிருக்குஞ் சாணார்க்கு அதிகவிதி தோணுதுகாண்
ஆகாத்தப் பொல்லாரை அழித்துப்போடு வேனென்றும்
சாகா வரங்கள் சாணாருக் கீவேனென்றும்
சொல்லி யிருக்கிறான் சுவாமிவை குண்டமென்று
தொல்லுலகி லிந்தச் சொற்கேட்டு ராசாவே
என்றவன் மந்திரிகள் இத்தனையுஞ் சொன்னவுடன்
ஒன்றுமுரை யாடாது உட்கார்ந் தயர்ந்துரைப்பான்
ஏதுகாண் மாயம் இதுஞாயம் வந்ததென்ன
வாதுக் கொருவர் வருவாரைக் காணோமென்று
நினைத்ததற்கோ இந்த நேருசொல் வந்ததுகாண்
மனதயர்ந்து பார்த்து மந்திரியைத் தானோக்கி
ஏதுகாண் மந்திரியே எல்லாரிலு மெளியச்
சாதியிலே வுள்ளவன்தான் சாற்றுவனோ இந்தமொழி
ஏதோவொரு சூட்சம் இருக்குதுகா ணிம்மொழியில்
வாதொன்றறியும் வம்பொன்று தான்பேசும்
ஆராய்ந்து பார்ப்போம் எல்லோருங் கூடிருந்து
பாராய்நீ மந்திரியே பாரிலொரு சாஸ்திரியை
என்றந்தப் பேர்கள் எல்லோரும் சம்மதித்து
அன்றந்த சாஸ்திரியை அவன்வருத்திக் கேட்கலுற்றான்
சாஸ்திரியே யிந்தத் தர்மராட்சி யந்தனிலே
வேற்றொருவ ரென்றனக்கு வீறிட்ட துண்டோகாண்
எதிரியுண்டோ பாரு என்னுடையச் சோதிரியே
கருதி மிகப்பார்த்து கடியச்சோ திரிபுகல்வான்
தர்ம முடிவேந்தே சாற்றக்கே ளுமரசே
கர்மக் கலிதோசம் கமண்டலங்க ளேழ்வரையும்
சுற்றிப் பரந்ததுகாண் தோசத்தால் பூமியெல்லாம்
கர்த்தனரி கிருஷ்ணர் கடியகோ பம்வெகுண்டு
பூமியிலே வந்து பிறந்திந்தத் தோசமதை

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 11161 - 11190 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

தோள்கா ரர்கோடி சுரண்டிக்கா ரர்கோடி
அம்புக்கா ரர்கோடி ஆயுதக்கா ரர்கோடி
வம்புக்கா ரர்கோடி வந்தா ரவன்கூட
வெடிக்கா ரர்கோடி வேல்கா ரர்கோடி
அடிக்கா ரர்கோடி வந்தா ரவன்கோடி
இத்தனை யார பாரத் துடன்நீசன்
தத்தியுடன் நடந்து தமுக்கு மிகஅடித்து
வந்து கூடாரம் இட்டான் சுசீந்திரத்தில்
தந்துதந் தாகத் தங்கள் மிகக்கூடி
கொந்துகொந் தாகக் கொடும்படைகள் கூடிவர
மந்திரி மாரோடு வந்திருந் தேதுசொல்வான்
கேளாய்நீ மந்திரியே கிருபையுட னோர்வசனம்
வாளாற் பெரிய மன்னர்களந் நாள்முதலாய்
நமக்கா யிருந்ததுகாண் நம்முடைய நாளையிலே
துடுக்கான வெள்ளை நசுறாணி யவன்தனக்காய்
ஆச்சுதே நாடு அவனுக்கே யாகிடினும்
பேச்சுநா மல்லால் பின்னொருவர் காணாதே
ஆனதாற் பூமியிலே ஆரொருவ ரானாலும்
மானமற வேநமக்கு மாற்றானாய்க் கண்டதுண்டால்
ஆய்ந்து விசாரித்து அறிவித்துச் சொல்லுமென்றான்
தேர்ந்துநின்று மந்திரியும் தீநீசக் குலமதினால்
பொல்லாத சூத்திரப் பிசாசுக் குலமதினால்
கல்லாதான் கூடிக் கண்டுதேர்ந் தேதுரைப்பான்
வேறொரு வரையும் மேதினியில் நாம்காணோம்
வாறோர் ஞாயமாற்றம் வையகத்தில் காணுதிப்போ
நமக்கு இறையிறுத்து நாடூழியங் கள்செய்யும்
குமுக்கா யினம்பெருத்த கூண்டசா ணாரினத்தில்
வைகுண்ட மாக வந்து பிறந்தோமென்று
மெய்கொண்ட பூமியெல்லாம் வேறொருவ ராளாமல்
நான்தான் முடிசூடி நாடுகெட்டி ஆள்வேனெனத்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 11131 - 11160 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

மையில்லை உலகத் தோரே வாழுமோர் நினைவா யென்றார்

விருத்தம்

இத்தனை யெல்லா மில்லை என்றரி நாதன் சொல்லப்
புத்தியி லறிந்து மண்ணோர் புதுமையென் றன்பாய் கண்டு
முத்தியி லிவரைக் கண்டு முயன்றவர் பேறு பெற்றார்
பத்தியில் லாதா ரெல்லாம் பாழெனச் சொல்லி நின்றார்

விருத்தம்

இப்படி மனுட ரெல்லாம் இவர்மொழி தர்மங் கண்டு
ஒப்புடன் கூடி வந்து ஒருவனே தஞ்ச மென்று
செப்பிடத் தொலையா தையா சீர்பதம் பதமே யென்று
நற்புடன் மனுட ரெல்லாம் நாடியே மகிழ்ந் திருந்தார்

கலியரசன் வைகுண்டரைப் பிடிக்க வருதல்

விருத்தம்

நாடியே யுலகி லுள்ள நருடகளோர் தலத்தில் வந்து
கூடியே நிற்கும் போது குறோணிதன் கொடியால் வந்த
சாடிக ளதினால் நீசன் சாகிற தறியா மீறி
பாடிய வைந்தர் தன்னைப் படையேவிப் பிடிக்க வந்தான்

விருத்தம்

வந்தவன் சுசீந்திரந் தன்னில் வளைந்து கூடார மிட்டு
மந்திரி மாரை நோக்கி வகையெனப் புகல்வா னீசன்
இந்தமா நிலத்தி லென்னோ(டு) எதிரிதா னாரோ சொல்வீர்
விந்தையா யவரைச் சென்று விருதிட்டு வருக என்றான்

நடை

நாடுங் குறோணி நாதவழி யாய்பிறந்து
மூட மடைந்த முழுநீச மாபாவி
இருந்த நகர்விட்டு எழுந்திருந்து தானேகி
வருந்தப் படையோடு வந்தான் சுசீந்திரத்தில் 
ஆனைத் திரள்கோடி அதிகப் பரிகோடி
சேனைத்திரள் கோடி சென்றார் சுசீந்திரத்தில்
சேவுகக் காரர் திலுக்கர் துலுக்கருடன்
ராவுத்தர் கோடி ராட்சதர்கள் முக்கோடி
சரடன் கரடன் சவுனி கெவுனியுடன்
முரட னுடனே மூர்க்கர் முழுமூடர்
படைக ளலங்கரித்துப் பார வெடிதீர்த்துக்
குடைக ளலங்கரித்துக் கொடிகள் மிகப்பிடித்து
வாள்கா ரர்கோடி வல்லயக்கா ரர்கோடி

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 11101 - 11130 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சங்கையுட னோர்தலத்தில் தண்ணீர் குடித்திருங்கோ
வாந்திருங்கோ நீங்கள் வைகுண்ட ருண்டெனவே
தாழ்ந்திருங்கோ வென்று தங்கள் கிளைபோலே
மிருக இனத்துக்கு இதுவுரைத்துப் பட்சிகட்கு
உறுதி யுடனே உரைத்தார்வை குண்டருமே
பட்சியெல்லா இனமும் பண்பா யொருஇனம்போல்
கட்சி யுடனே களிகூர்ந்து வாழ்ந்திருங்கோ
சிறிது பெரிது என்றுமிகச் சீறாமல்
உறுதி பெரிது உடையோனே தஞ்சமென்று
கூடிக் குலாவி குணமாய் மகிழ்ந்திருங்கோ
நாடி யுரைத்தார் நல்லபட்சி தங்களுக்கு
புல்பூ டானதுக்கும் பொறுதி மிகவுரைத்துக்
கல்வாரி தனக்கும் கனத்தசே டன்தனக்கும்
தங்கள் தங்களுக்கு தாழ்மை மிகவுரைத்து
மங்கள மாக மனமகிழ்ந்து வைந்தருமே
நாட்டுக்கு நம்முடைய நல்லதர்மத் தின்படியே
கூட்டுக்கு ஏற்றக் குருவுபதே சம்போலே
எய்யாமல் நாதன் எல்லோருந் தானறிய
செய்தர் மஞாயச் செய்திகே ளும்நடுவே

விருத்தம்

அன்னீதத் தாலே லோகம் அவனி யீரேழும் வாடி
குன்னியே கலியில் மூழ்கிக் குறுகியே யலைவர் கண்டு
கன்னிகள் மதலை யானக் கற்பகக் குலங்கள் தன்னில்
மன்னிய மனுப்போல் தோன்றி மன்னுகத் துதித்தார் தானே

விருத்தம்

உதித்தாயிரத் தெட்டாமாண்டில் உவரிசெந் தூரில்பெற்றுக்
குதித்தாண் டருள்மாசியில் தெச்சணா குருநாட்டினில்
பதித்தாமரை யூரினில் பள்ளிதான் கொண்டநாள்
விதித்தாமிதைத் கருத்தாய் அருளுரைத்தா ரறவுரையே

விருத்தம்

பொய்யில்லை பசாசு இல்லை பில்லியின் வினைக ளில்லை
நொய்யில்லை நோவு மில்லை நொம்பலத் துன்ப மில்லை
தொய்யில்லை யிறைக ளில்லை சுருட்டுமா ஞால மில்லை

விளக்கவுரை :   
Powered by Blogger.