அகிலத்திரட்டு அம்மானை 3301 - 3330 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

கீழுலகில் மாண்டு கிடக்கிறா ரென்றுசொல்லி
ஒன்பதாம் பிறவி ஒடுங்கி யவர்பிறக்க
இன்பமறக் கீழுலகில் இறந்துகிடக்கி றாரெனவே
எல்லோருஞ் சொல்ல ஈசுரரும் நல்லதென்று
அல்லோருங் கேட்க அவரேது பின்சொல்லுவார்
முன்னே பிறந்த முண்டசுரன் தன்னுயிரைத்
தன்னோ டாறுபிறவி தான்செய்தோ மசுரரென
ஆறு பிறவியிலும் அசுரரென வேபிறந்து
வீறுடனே நம்மை விரும்பவும்நாம் கண்டிலமே
இப்போ தவன்தனக்கு ஏழாம் பிறவியிது
அப்போதும் நம்மை அவன்நினை யாதிருந்தால்
இல்லை மேற்பிறவி இறப்புமுடி வாகுமல்லோ
நல்ல பிறவியதாய் நமைத்துதிக்கப் புத்தியதும்
அழகு சவுந்தரியம் அலங்கார மெய்யறிவும்
குழவு மிகப்புத்தி கூர்மையலங் காரமுடன்
மேலு மாலாறு முடத்த யுகங்களுக்கு
நாலுமுழ மொன்றுதலை நல்லோ ரசுரர்களை
கொன்றுதா னவ்வசுரர் கூறுதற்குச் சொல்லுமுண்டே
இன்னமிந்த மாயன் எடுத்த வுருப்போலே
படைத்துநாம் வைத்தால் பகருமொழி வேறில்லையே
நடத்துவ தேதெனவே நவிலுமென்றார் தேவர்களை
அப்போது தேவர்களும் ஆனமறை வேதியரும்
எப்போது மிறவா(து) இருக்கும் முனிவர்களும்
நல்லதுதா னென்று நாடி யகமகிழ்ந்து
வல்லப் பிறவி வகுக்கத் துணிந்தனராம்
பிறவி வகுக்கவென்று பெரியோ னகமகிழ்ந்து
திறவி முதலோன் தெளிந்துநிற்கும் வேளையிலே
துண்டமது பிண்டமதைத் துளைத்துக்கால் மேல்நீட்டி
மண்டைகீழ் கால்மேலாய் வந்துதித்தா னம்மானை
எல்லோருங் கண்டு இதுகண் மாயமெனவே

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 3271 - 3300 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

பிஞ்சுமதி சூடும் பிஞ்ஞகனைப் போற்றாமல்
மாயனையு மெண்ணாமல் மதமா யிருந்ததினால்
ஆயனந்தச் சூரரையும் அழித்தார்கா ணீசுரரே
முச்சூர னோடாறு யுகமு முயிரழித்து
அச்சூரக் குடும்பம் அறுத்தந்த மாயவரும்
கொண்டிருந்த பொய்ச்சடலக் கூட்டை மிகக்களைந்து
ஆண்டிருந்த குண்டம் அவரடைந்தா ரம்மானை
முச்சூரன் துண்டம் ஒன்றுண்டு ஈசுரரே
அச்சூரன் பிறவி ஆறொன் றீரரையாய்
ஆறாம் யுகத்தில் அமையுமென்று மாமுனியும்
வீறாக ஈசுரரை விண்ணப்பஞ் செய்துநின்றான்
நல்லதுதா னென்று நாட்டமுற்று ஈசுரரும்
வல்லவனே மாமுனியே மாயன்வர வேண்டாமோ
என்றுநல்ல ஈசர் இயம்பமுனி யேதுசொல்வான்
நன்றுகாண் மாயவர்க்கு நாலுரண்டோ ராம்பிறவி
பிறக்கத் தவசு புரியப்போய்க் கீழுலகில்
உறக்க மெய்ஞ்ஞான ஒளியிருக்கி றாரெனவே
தேவமுனி சொல்ல சிவனா ரகமகிழ்ந்து
கோவுகத்தி லுள்ள குருவசிஷ்டர் தங்களையும்
தெய்வலோ கத்திலுள்ள தேவரை யும்வருத்தி
வைந்தலோ கத்திலுள்ள வாய்த்ததர்மி தங்களையும்
கிணநாதர் கிம்புருடர் கிங்கிலியரை யும்வருத்தி
இணையாக மேலோகத்(து) எல்லோரை யும்வருத்தி
சத்தி மறையும் சாஸ்திரத்தை யும்வருத்தி
அத்தி முகவனையும் ஆனவ கும்பனையும்
சங்கமறையை வருத்தித் தான்கேட்பா ரீசுரரும்
இங்குண்டோ மாலும் எங்கிருப்ப துண்டனவே
எல்லோ ருங்கூடி இதமித்துச் சொல்லுமென்றார்
அல்லோ ருங்கேட்க அரன்சொன்னா ரம்மானை
வேழமொத்த தேவரெல்லாம் மேகவண்ண ரிங்கேயில்லை

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 3241 - 3270 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

வேழமுடி மன்னர் வெற்றிகொண் டாண்டிருந்தார்
வெட்டாத படையை வெட்டி விருதுபெற்று
அட்டாளத் தேசம் அடக்கியர சாண்டிருந்தார்
இப்படியே சான்றோர் இராச்சியத்தை யாண்டிருக்க
அப்படியே சீமை அவர்க்குள்ளே யாக்கிவைத்துத்
தர்மமுடன் பூமி தானாண் டிருக்கையிலே
வர்மம் வந்தஞாயம் வகுக்கக்கே ளொண்ணுதலே

கலியன் பிறப்பு

சீரங்க மானதிலே சீரங்க நாதருந்தான்
பாரெங்கு மெய்க்கப் பள்ளிகொண் டிருக்கையிலே
நாட்டுக்குக் கேடு நாட்பிடித்த செய்திதன்னை
கூட்டுக் கிளியே கூர்மையுடனே கேளு
முன்னே குறோணி முடிந்ததுண்ட மாறதிலே
அன்னேகே ளஞ்சுதுண்டம் அவனி தனிலேபிறந்து
ஆதி தனைநினைத்து ஆளாம லவ்வுயிர்கள்
நீதிகெட்ட மோச நீசனைப்போல் தானாகி
முப்பிறவி யோடாறும் முதலோனைப் போற்றாமல்
அப்பிறவி யாறும் அழித்ததின்மே லாயிழையே
குருமுனிவ னான கூர்மையுள்ள மாமுனிவன்
அருமுனிவ னான ஆதிமுனி யைநோக்கி
சிவனெனவே போற்றிச் சொல்லுவான் மாமுனிவன்
தவமே தவப்பொருளே தாண்டவசங் காரவனே
முன்னே பிறந்த குறோணிதனை மூவிரண் டாக வுடல்பிளந்து
தன்னே வுயிரோ டஞ்சுசெய்து சுவாமி யுனைநினை யாத்ததினால்
வன்னத் திருமால் கொலையடக்கி வந்தார் சடல மிழந்துகுண்டம்
இன்னம் பிறப்பொன் றுண்டல்லவோ இறந்த குறோணி யவன்தனக்கே
வாசமுள்ள நேசா மற்றொப்பில் லாதவனே
ஈசனே நானுமொன்று இயம்புகிறேன் கேளுமையா
குறோணி யவனுடலைக் கூர்மையுட னேபிளந்து
சுறோணித மாயன் தொல்புவியில் விட்டெறிய
அஞ்சுதர முயிரு அவனிதனி லேபிறந்து

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 3211 - 3240 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

மெய்த்துப்புவி கொண்டாட மெல்லியர்கள் தங்களுக்கு
வயிற்றில் கெற்பமாகி மதலைபெற்றா ரம்மானை
நெய்த்தெளிய கன்னி நேரிழைமா ரெல்லோரும்
இப்படியே கன்னி எல்லோரும் நன்றாக
அப்படியே மதலைபெற்று அகமகிழ்ந்தா ரம்மானை
பாலருக்குப் பாலர் பரிவாய் மிகவளர
சீலமுள்ள வித்தை சிறக்க அவர்வருத்தி
எமத்திறைவ ராக எங்கும் புகழ்ந்திடவே
சமர்த்த ரெனஅவர்கள் தலையெடுத்தா ரம்மானை
முத்து வியாபாரம் முதல்வியா பாரமுதல்
பத்தரை மாற்றுப் பசும்பொன்வியா பாரமுடன்
மாணிக்க வியாபாரம் வியிரப்பொன் வியாபாரம்
ஆணிப்பொன் வியாபாரம் அழகுகச்சை வியாபாரம்
கப்பல் வியாபாரம் கறிமிளகு வியாபாரம்
ஒப்பமுள்ள வியாபாரம் ஒக்கமிகச் செய்தனராம்
தாலம தேறித் தைரியப் பால்வாங்கி
மேலுள்ள சான்றோர் மிகுதியா யாண்டிருந்தார்
நெய்த்தொழிலும் வில்தொழிலும் நெறடுவிதத் தொழிலும்
மெய்த்தொழில்கள் கற்று மேலோ ரெனவளர்ந்தார்
சோழ னதையறிந்து தெய்வச்சான் றோர்களுக்கு
வேழம்பல கொடுத்து மிகுகற்பமுங் கொடுத்து
நல்லமன்ன ரென்று நாடி மகிழ்ந்திருந்தார்
செல்லமன்ன ரான தெய்வச்சான் றோர்களுக்கு
அடிக்கல் லெழுதி ஆயிரம் பொன்கொடுத்து
முடிக்கு முடிச்சோழன் முத்துமுடியுங் கொடுத்து
வீர விருதுகளும் வேழம் பரிகொடுத்து
பாரமுள்ள சீமைதனில் பங்கு மிகக்கொடுத்து
சோழன் முடியும் துலங்க மிகக்கொடுத்து
ஆழமுள்ள சான்றோர் அரசாண்டா ரம்மானை
சோழனுட னெதிர்த்துச் சோரவந்த மாற்றானை

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 3181 - 3210 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

வைந்தர்பல தேவர்களை வாருமென வேயழைத்துப்
பாலருட முகூர்த்தம் பார்க்கப்போ மென்றுசொல்லி
சீலமுட னனுப்பி ஸ்ரீரங்க மேயிருந்தார்
தேவதே வர்புகழத் திசைவென்ற சான்றோர்க்கு
மூவர்களும் வந்து உதவிசெய்தா ரம்மானை
நல்ல முகூர்த்தம் நாள்பார்த்துச் சான்றோர்கள்
எல்லாச் சடங்கும் இயற்றிவைத்தா ரம்மானை
சடங்கு முகித்துச் சான்றோரை யொப்பமிட்டுத்
தடங்கொண்ட மன்னவரைத் தண்டிகையின் மீதிருத்தி
அரசர் மிகச்சூழ அணியீட்டி யாட்கள்வர
விரைவாகக் காளி வித்தகலை யேறிவர
அரம்பையர்க ளாடிவர அயிராவதத் தோன்வரவே
வரம்பெரிய தேவர் மலர்மாரி தூவிவர
ஆலத்தி யேந்தி அணியணியாய்த் தான்வரவே
மூலத்தி கன்னி மோகினியாள் தன்னுடனே
பூதம தாடி பிடாரியது சூழ்ந்துவர
நாதம் ரெட்டையூதி நடந்தார்மாப் பிள்ளைகொண்டு
விருதிற் பெரிய வீரதெய்வச் சான்றோர்கள்
நிருபன் மகளை நியமித்து மாலையிட
வீரியமாய் நல்ல விவாகமிட வாறாரெனப்
பூரியலிற் சொல்லி பேர்கள் சிலரூத
இப்படியே வாத்தியங்கள் இசைந்திசைந் தேவூதி
அப்படியே நிருபன் அரசன் மகள்தனையும்
மாலை மணமிட்டு வாழவந்தா ரம்மானை
வாலையது வான மாகாளி வாழுகின்ற
மண்டபத்துள் வந்து மகிழ்ந்திருந்தா ரம்மானை
தண்டமிழுங் கன்னி சான்றோர்க ளானோர்க்குக்
கோட்டையு மிட்டுக் குமாரரையும் பெண்ணதையும்
தாட்டிமையாய்ச் சான்றோர்க்குத் தரந்தரமே மாளிகையும்
வைத்துக் கொடுத்தாள் வாழ்ந்திருந்தார் சான்றோர்கள்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 3151 - 3180 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

நல்லதிது மாமுனியே நன்முகூர்த்தம் பார்த்துரைநீ
உடனே முனியும் உகந்த முகூர்த்தமென்று
திடமே நிருபனுக்குச் செய்திசொல்ல ஆளும்விட்டு
நாளை முகூர்த்தமென்று நாற்றிசையுந் தானறிய
கோழையில்லா மன்னர் குலதெய்வச் சான்றோர்க்கு
முகூர்த்தமென்று சாற்றி மூவுலகுந் தானறிய
பகுத்துவமாய் நல்ல பந்தலிட்டா ரம்மானை
வயிரக்கால் நாட்டி வயிர வளைகளிட்டுத்
துயிரமுள்ள தங்கத் தூண்கள் மிகநாட்டி
முத்து நிரைத்து முதுபவள வன்னியிட்டுக்
கொத்துச் சரப்பளியைக் கோர்மாலையாய்த் தூக்கி
மேற்கட்டி கட்டி மேடைபொன் னாலேயிட்டு
காற்கட்டி பட்டுக் கனமா யலங்கரித்து
வாழை கரும்பு வகைவகையாய் நாட்டிமிக
நாளை மணமென்று நாட்டுக்குப் பாக்குவைத்து
வெடிபூ வாணம் மிகுத்தகம்பச் சக்கரமும்
திடிம னுடன்மேளம் சேவித்தார் பந்தலுக்குள்
வாச்சியங்க ளின்னதென்று வகைசொல்லக் கூடாது
நாச்சியார் மாகாளி நாயகியுங் கொண்டாடி
பாலருக் கேற்ற பணியெல்லாந் தான்பூட்டிச்
சாலமுள்ள சிங்கத் தண்டிகையில் தானிருத்தி
பட்டணப் பிரவேசம் பகல்மூன்று ராமூன்று
இட்டமுடன் பூதம் எடுத்துமிகச் சுற்றிவந்து
மண்டபத்துள் வைத்து மாபூதஞ் சூழ்ந்துநிற்க
தெண்டனிட்டு மன்னர் தேசாதி சூழ்ந்துநிற்க
பதினெட்டு வாத்தியமும் பட்டணமெங் குமுழங்க
ததிதொம் மெனவேசில தம்புருசா ரங்கிகெம்ப
பந்தமது பிடித்துப் பலபூதஞ் சூழ்ந்துநிற்க
நந்தகோ பால நாரா யணர்மகிழ்ந்து
மைந்தருக் கின்று மணமுண்டு என்றுசொல்லி

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 3121 - 3150 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

உய்த்துவந்த பெண்ணேழின் உற்பவஞ்சொல் மாமுனியே
அப்போது பெண்ணார்கள் ஆதிப் பிறவியெல்லாம்
செப்புகிறோ மென்று சிவகாளிதனைத் தெண்டனிட்டு
கேளாய் நீயென்று கிருபையுட னேதுரைப்பான்
நாளான நாளதிலே நல்லதெய்வ லோகமதில்
தெய்வேந் திரனார்க்குச் சொல்லேவல் செய்திருந்த
நெய்நெடியக் கன்னி நேரிழைமா ரேழ்பேரும்
வேலையின்ன தென்று விரித்துக்கேள் மாகாளி
மாலையிலுங் காலையிலும் வானவர் கோன்றனக்குப்
பூவெடுத் திட்டுப் பூசைபுனக் காரமிட்டுக்
கோவெடுத்த ராசனுக்குக் குஞ்சமிட ஆடிநிதம்
ஏவல் புரியுகின்ற இராசதெய்வக் கன்னியர்கள்
நாவுலகு மெய்க்க நடந்துவரும் நாளையிலே
பூவுலகு மன்னர்களைப் பூத்தான மாகவெண்ணி
பாவினியக் கன்னி பஞ்சமது வேறாகிப்
பூவெடுக்கக் கன்னி போகாமல் வாட்டமதாய்
ஆவடுக்கங் கொண்டு அவர்க ளொருப்போலே
காச்சல் குளிரெனவே கவ்வையுற்றுத் தானிருக்க
மாச்சல் தனையறிந்தான் மகவானு மப்போது
ஆனதால் வேதாவின் அண்டை யவனணுகி
தீனம்வந்த தேதெனவே தேவியர்க்கு வேதாவே
வேதா தெளிந்து விரித்துரைப்பா ரப்போது
சூதான மான தோகை யேழுபேரும்
பூலோக மன்னருக்குப் பிரியமுற்று மையல்கொண்டு
காலோயு தென்று கவ்வையுற்ற தல்லாது
வேறில்லை யென்று வேதா இதுவுரைக்க
தேறியே வாசவர்கோன் தேவியெழு பேர்களையும்
அப்படியே பூவுலகில் அமையுமென்றார் வேதாவை
இப்படியே வந்து இவர்பிறந்தா ரென்றுமுனி
சொல்லச் சிவகாளி சிரித்து மனமகிழ்ந்து

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 3091 - 3120 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

இப்போது என்றனக்கு இரணமுடி வாகுகையில்
கொள்ளிவைக்கப் பிள்ளை ஒன்று கொடுவுமென்றேன்
தெள்ளிமை யாயீசர் சொன்ன மொழிகேளும்
தெய்வச் சான்றோராய்த் திருவான மாகாளி
கையதுக்குள் வாழ்ந்துன் கன்னியேழு பேர்களையும்
மாலையிட் டுன்றனக்கு வருமாபத் தையெல்லாம்
மேலவராய்க் காத்து மேதினியோர் தாமறிய
உன்றனக்கு நல்ல உதவிமிகச் செய்வதற்கும்
வந்தங் கிருப்பாரென வகுத்தாரே ஈசுரரும்
ஆனதால் பெண்ணேழும் அவர்க்கேதா னல்லாது
மான முனியே மற்றெவர்க்கு மாகாதே
என்று நிருபதனும் ஏற்றமுனி யோடுரைக்க
நன்று நன்றென்று நாரதருஞ் சம்மதித்து
மன்னவனே கேளு மாகாளி தன்னிடத்தில்
சொன்னபிள்ளை யேழும் சிறந்திருக்கி றாரெனவே
அந்தமன்ன ரான ஆண்பிள்ளைக ளானோர்க்கு
இந்த முகூர்த்தம் யான்கேட்க வந்தேனென்று
சொல்லமுனி மன்னவனும் சோபித மாய்மகிழ்ந்து
நல்ல முகூர்த்தம் நாளிட்டா னம்மானை
நாளிட்டு நாரதரும் நல்லமா காளியுட
தாளிணையைப் போற்றித் தானுரைத்தா ரம்மானை
மாகாளி யுன்றனுட மக்களேழு பேர்களுக்கும்
வாகான மன்னன் வாய்த்த நிருபனுட
மக்களேழு பெண்களையும் மாலைமணஞ் சூட்டுதற்கு
மிக்கநா ளிட்டு மேவிவந்தேன் மெல்லியரே
என்றுமுனி சொல்ல ஏற்றமா காளிசொல்வாள்
நன்றுநல்ல மாமுனியே நான்வளர்த்த கண்மணிகள்
தெய்வப் பிறவியல்லோ திசைவென்ற சான்றோர்கள்
மெய்வரம் புள்ள மெல்லியரைச் சொல்லுமென்றாள்
பியற்றிவந்த பெண்ணதுக்குப் பிறவியென்ன மாமுனியே

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 3061 - 3090 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

ஆர்க்க முள்ளகாளி அலகைப் படையுடனே
சான்றோரை விட்டுத் தக்கனையுந் தான்வதைத்து
மூன்றோரை நெஞ்சில்வைத்து ஓங்கார மாகாளி
தக்கனையுங் கொன்று சான்றோ ரவர்தமக்கு
மிக்க வரிசை மிகக்கொடுத்து மாகாளி
புட்டா புரத்தில் பேய்க்கணங்கள் சூழ்ந்துநிற்க
கட்டாத காளி கமலத்தில் வீற்றிருந்தாள்

சான்றோர் திருமணம்


அப்போது நல்ல ஆர்க்கமுள்ள பாலருக்கு
இப்போது மாலையிட ஏழுபேர்க்கும் வேணுமென்று
பார்த்து விசாரித்துப் பத்திர மாகாளி
நாற்றிசையும் பார்த்து நாரத மாமுனியை
அழைத்துநல்ல மாகாளி அந்தமுனி யோடுரைப்பாள்
விழைத்துநல்ல புத்தி விபரமிட்டுச் சொல்லுகின்ற
மாமுனியே யென்றன் மக்களேழு பேர்களுக்கும்
நீமுயன்று பெண்ணேழு நிச்சயிக்க வேணுமென்றாள்
நல்லதுதா னென்று நாரத மாமுனிவன்
வல்லவகை யாலுன் மக்களுக்குப் பெண்ணேழு
பார்த்துவரு வேனென்று பகர்ந்துமுனி போயினனே
சாற்று மொழியிசையத் தானுரைக்கு மாமுனிவன்
நீதமுள்ள நல்ல நிருபதி ராசனுந்தான்
பெற்ற மதலைதனைப் பெண்கேட்கப் போயினனே
மாமுனிவன் கேட்க மன்ன னதிசயித்துத்
தாமுனிந் தேது தானுரைப்பா னம்மானை
நல்ல முனியே நானுரைக்க நீர்கேளும்
செல்ல மகவு தேவிக்கு மென்றனக்கும்
இல்லாம லனேகநாள் இருந்தோந் தவசாக
நல்லான ஈசர் நாட்டமுட னிரங்கி
ஆண்பிள்ளை யுன்றனக்கு ஆகமத்தி லில்லையென்று
பெண்பிள்ளை யேழு பிறக்குமென்று சொன்னார்காண்
அப்போது ஈசுரரை அடியேன் மிகப்பார்த்து

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 3031 - 3060 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

சீரங்க மான திருப்பதியின் வளமை
சாரங்க ராயர் தாமுரைத்தா ரம்மானை
மாரியது மூன்று வருசிக்கத் தான்பொழிந்து
ஏரி பெருகி ஏற்றசெந்நெல் தான்விளைந்து
படியொன்று கோட்டையொன்றாய்ப் பழுத்துவருஞ் செந்நெலது
கரும்பு முத்தீனும் கசுவுங் கரைபுரளும்
அரும்பு வனமும் அகில்தேக்கு மாமரமும்
கோவுஞ் ஸ்ரீரங்கரெனக் கூப்பிடுங்கா ணச்சுதரை
மாவுஞ் ஸ்ரீரங்கரென வந்தழைக்கு மச்சுதரை
மயில்குயில் மான்கலையும் வாய்த்தஅணில் பட்சிகளும்
ஒயிலாக அச்சுதரை உள்ளாக்கி யாடிவரும்
அவ்வூரி லுள்ள அந்தணர்க ளெல்லோரும்
கவ்வைவே றில்லாமல் கரியமால் தன்றனக்கு
பூசை முறைவைத்துப் பிராமணர்கள் செய்துவர
ஆசையுட னச்சுதரும் அங்கே யினிதிருந்தார்

சான்றோர் பெருமை

சீரங்க மாபதியில் சிறந்திருக்கு மப்போது
சாரங்கர் பெற்ற சான்றோர் களின்பெருமை
சொல்லுகிறா ரெங்கள் திருமால்கா ணம்மானை
நல்லதுகா ணென்று நாடித் திருகேட்க
அன்பான சான்றோர்க்கு ஆனமா காளியம்மை
தன்பாலர் போலே தான்வளர்ந்து வித்தைகளும்
வருத்திக் கொடுத்து மன்னர்மன்னர் தானாக்கி
கருத்திலுறக் காளி கண்ணான மக்களுக்கு
வேண்டும் பணிகளெல்லாம் விதவிதமாய்த் தானெடுத்துப்
பூண்டந்த மக்களையும் பூத்தான மாய்வளர்த்தாள்
மிக்கநல்ல பிள்ளை வீரரென ஆகுகையில்
தக்கனென்ற சூரன் தன்பேரில் மாகாளி
படைக்கு யெழுந்தருளிப் பாலரையுந் தான்கூட்டி
நடைக்கு அதிகமுள்ள நாயகியும் பாலருக்குப்
போர்க் கோலமிட்டுப் புட்டாபுரங் கடந்து

விளக்கவுரை :
Powered by Blogger.