அகிலத்திரட்டு அம்மானை 12361 - 12390 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

எச்சாதியும் புகழ்ந்து இருந்தார்கா ணம்மானை
அச்சாதி யெல்லாம் அப்படியே சொல்லிமிகச்
சாதிமற்றோ ரெல்லாம் தலைகவிழ்ந் திருக்கையிலே
நாதித் திருமால் நாடுகின்ற சான்றோரை
இவர்க்கருளு மாண்டு இலக்குத் திகைந்துதல்லோ
அவரவர்கள் வீட்டில் அனுப்பிவிட வேணுமென்று
தோணித்தா ரவர்மனதில் சொர்ப்பனம்போ லெம்பெருமாள்
மாணிக்கச் சான்றோர் மனமறியத் தாம்பார்த்து
இனிநாம ளிப்போ இருந்த தலமும்விட்டுத்
தனியானோம் நாமளங்கே சார்ந்தோமெ யானாக்கால்
நம்முடைய சாதி நகைத்திழிவு பேசுமல்லோ
எம்முடைய தவமும் இல்லையென்று போயிடுங்காண்
முன்னிருந்த வீடும் மூண்டிருந்த பண்டமுதல்
தன்னிருந்த சொத்தும் தலத்தை யிழந்தவந்தோம்
இனியங்கே போனால் இருக்க இடமுமில்லை
இனியங்கே போவதைக்கால் இந்தக் கடலதிலே
விழுந்தோமே யானால் மேலும் பதவியுண்டு
அழுந்த லுடன்நினைத்து எல்லோரு மேயிருந்தார்
அப்போ அரிநாதன் ஆகட்டென வுறுக்கி
இப்போநீர் போவும் என்றே விடைகொடுத்தும்
இன்னமிவர் போகலையே என்றே மனதிலுற்று
அன்ன மதைக்குறைத்து ஆழாக் கரிசியிட்டார்
ஆழாக் கரிசி அலர்மலர்ந்த கோவையுடன்
தாழாமல் சனங்கள் சடையாம லேற்றனரே
துவையல் முடங்கவில்லை தொழுதுநிதஞ் சேவிப்பதுவும்
உகப்பாட் டோதுவதும் ஓயாமல் செய்தனரே
இன்னம்போ னாரில்லையே இப்படியே செய்திடினும்
இன்ன மொருவிசனம் இப்போது செய்யவென்று
எண்ணியதற்கென்ன என்றுதிருமனதில்
உன்னித் திருமால் உற்றவை சூரியைத்தான்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 12331 - 12360 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

அந்திசந்தி உச்சி ஆதிதனைத் துதித்துத்
தந்திரம தாகத் தவசு மிகப்புரிந்தார்
கண்டிருந்த மற்ற கலிநீசச் சாதியெல்லாம்
பண்டி லமைத்ததுவோ பனையேறுஞ் சாணார்க்கு
மூணுநே ரந்துவைத்து உச்சியொரு நேரமதாய்
வேணும் பகுத்தாய் வெகுவா யலங்கரிக்க
வேத னவர்க்கு விதித்த விதிப்படியோ
நாதனவர் பங்கில் நாடிமிக வந்ததுவோ
எப்போமீ னுண்டு என்றே மிகப்பார்த்து
அப்போ ததைவேண்டி அரக்குரக் காயவித்து
வாயிலெடுத் திட்டு வயிறுவளர்க்குஞ் சாணார்கள்
புகையிலையு மறந்து பெண்ணாணு மோர்மனதாய்
இந்தப் படியாய் இருக்க இவர்களுக்கு
முந்தை விதித்த விதிவந் தொத்ததுவோ
அவர்க ளுடுக்கும் ஆடையழுக் கில்லாமல்
இவருடுக்கச் சற்றும் எண்ணமொன் றில்லாதார்
மூணுநே ரந்துவைக்கும் உற்றதுணி பொன்னிறம்போல்
தோணுதலா யவர்கள் தேகம் பழபழென
இந்த விதமாய் இவர்கள்பா வித்திடவே
சொந்தத் திருமால் சேர்ந்தா ரவரிடமே
ஆதி மகாமால் அவர்பங்கி லில்லாட்டால்
ஓதி யுணவருந்த ஒன்றுந்தெரி யாதிவர்க்கு
பேற்றி நம்பூரி பிராமணர்கள் தஞ்சீலை
மாற்றித் துவைப்பு மங்கலாய்க் காணுதுகாண்
இந்தசா ணார்சீலை எரிசூரி யன்போலே
பந்த வொளிபோலே பழபழெனத் தோணுதுகாண்
பிராமணர் சூத்திரர்கள் பேணி யிவர்தமக்கு
நிராதனமாய்க் காய்கனிகள் நித்தஞ் சுமக்கிறார்கள்
பாக்கியங்கள் வந்துதென்று பனையேறுஞ் சாணார்க்கு
நோக்கமது வந்துதென்று நீணலத் துள்ளோர்கள்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 12301 - 12330 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

இப்பதியில் நீங்கள் இந்தநே ரம்போனால்
அப்பதியி லுங்களுக்கு அதிகப்பலன் கிட்டுமென்று
தூக்கமதில் சொர்ப்பனம்போல் சொன்னாரே வுத்தரவு
ஆக்க முடனே அவனெழுந்து சொல்லிடவே
கேட்டு எல்லோரும் கெட்டிதா னென்றுசொல்லி
ஆட்டு மெனவே எல்லோருஞ் சம்மதித்த
நடக்கத் துணிந்தார் நாரண ருண்டெனவே
அடக்க முடனிதிலே ஆறுமா சம்வரைக்கும்
இருந்தோமே நன்றாய் இனிநடப்போ மப்பதியில்
வருந்தாமற் போவோம் மகாபரனா ருண்டெனவே
போவோ மெனவே பெண்ணா ணுடனெழுந்து
தாவமுள்ள முட்டப் பதிதலத்தில் வந்தனரே

விருத்தம்

வந்தனர் பதியின் கூறும் வாரியின் செயலுங் கண்டு
சந்தன வாரி போலும் தலமிது நன்ற தாகும்
இந்தநற் பதியில் நாமள் இருந்துதான் தவசு செய்தால்
செந்தமி ழாயன் பாதம் செயல்பெற வாழ்வோ மென்றார்

விருத்தம்

வாழ்வ திற்குறை வராது மக்களுங் கிளைக ளோடு
தாழ்வ தில்லை வண்ணம் தவமது வளர்வ தாகும்
நாள்வழிப் பலனுண் டாகும் நாரண ரருளி னாலே
ஆள்வது திடனா மென்று அதிலவ ரிருந்தா ரன்றே

நடை

என்றே மிகமகிழ்ந்து எல்லோரு மோர்முகமாய்
அன்றே மிகமகிழ்ந்து அதிலிருந்தா ரம்மானை
சூழ அணியாய்ச் சுற்று மதில்போலே
நீள அரங்குவைத்து நெருங்கப் புரைகள்வைத்து
வைத்தோர் திசையில் வாசலொன் றாகவிட்டு
மெய்த்தே தினமும் மிகவே துணிதுவைத்து
அன்ன மதற்கு அவித்தநெல் லேயுடைத்து
வன்னமுள்ள காய்கனிகள் வகைவகையாய்த் தான்வகுத்து
நல்லநீர் தன்னில் நாடி மிகத்துவைத்து
எல்லா வகைக்கும் இசைந்தநீ ரேயிருந்தி

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 12271 - 12300 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சீலைரண்டு தன்னைச் செகற்கொண்டு போயினதே
அய்யோ கடல்தான் அங்குசெல்லக் கூடுதில்லை
செய்ய விலகவென்றால் தெள்ளுநம்மை விட்டுதில்லை
வீட்டுக்குள் செல்ல விட்டுதில்லை மூட்டையது
ஊட்டுகின்ற அன்னமதில் உயரவந்து நண்டிருக்கும்
தேகமதிற் சிரங்கு சொறிச்சல் பொறுக்குதில்லை
வேகமுடன் காந்தல் மேலில் பொறுக்குதில்லை
தாகத்துக் கேற்ற தண்ணீர் கிடைக்குதில்லை
பாகமுட னுண்ணப் பற்றுதில்லை தீனதுவும்
இனியெங்கே போவோம் எல்லோரு மென்றுசொல்லி
மனுப்புகழுஞ் சான்றோர் மாதமொரு ஆறாய்
இருந்தா ரதிலே ஈசன் செயலெனவே
திருந்தார மார்பன் திரும்ப வொருதலத்தில்
கொண்டுபோய்ப் பார்ப்போம் குலதெய்வச் சான்றோரை
பண்டு வொருசணான் படுத்திருக்கு மவ்வேளை
சொர்ப்பனம்போல் உற்பனமாய் சுவாமி மிகவுரைத்தார்

முட்டப்பதி தவசு

இதின்நேர் தெற்கு இருக்கு மொருபதிதான்
அதின்நோக்குஞ் சொல்ல ஆராலு மேலாது
துட்டர் தமைவென்று சுற்றுமதில் கோட்டையிட்டு
முட்டப்பதிநாடுமுகுந்தர் முன்னால் ஆண்டதலம்
அலங்கார நற்பதியின் அழகுசொல்லக் கூடாது
அலங்கார மான வாய்த்த கடலதினுள்
தேரு பொன்பதிகள் சிங்கார மேடைகளும்
நீருக்குள் ளேயிருக்கும் நிறங்கள்சொல்லக் கூடாது
கன்னிமா ராடும் கரியநல்லப் பூஞ்சுனைகள்
பொன்னினா லேபடிகள் பூஞ்சப்பிரக் கொலுவும்
மாணிக்கக் கல்லால் வளர்ந்தமணி மண்டபமும்
ஆணிப்பொன் தன்னால் அழகுபூம் பந்தல்களும்
வகையின்ன தென்று வகுக்க முடியாது
தொகையின் தென்று தொகுக்க முடியாது

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 12241 - 12270 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

வாணுவமாய் ரொம்ப வந்து வளைந்துமிக
காணுதற்கு மெத்த கடுங்கோபமாய் எழுந்து
நடையிற் கடிக்கும் கிடக்கவிடா தேயரிக்கும்
குடிக்கின்ற வெள்ளமதில் கும்பல்கும்ப லாய்க்கிடக்கும்
முடிக்குந் தலையில் முச்சிறங்கை போல்கிடக்கும்
அன்னத்தி லேமிதக்கும் அண்டைக்கல்லி லேவாழும்
முன்னெற்றி மயிரில் மிதந்துமிக முன்னுதிரும்
இடைக்குள் ளிருந்து இடைவிடா தேயரிக்கும்
உடையி லிருந்து ஓயாம லேயரிக்கும்
மேலெல்லா மிதந்து மிகச்சரியும் கீழ்வழியாய்க்
காலெல்லாந் தெள்ளு கனமாய் மிகஅரிக்கும்
மாறி யிவரெடுக்க மனதுசற்று மில்லாமல்
ஆறிப் பதறி அசையாமல் தாமிருப்பார்
வாரிக் கரையில் வளர்நண்டு சேகரமாய்
மாரித் துளிபோல் வந்து வளைந்துமிகப்
பாண்டத்துக் குள்ளே பதிந்திருந் தேவாழும்
காண்டமாய்க் கண்டு கைநீட்ட லாகாதெனத்
தடவி யெடுத்துத் தன்னாலே போநீயென
வடவிப் போகாமல் வளர்ப்பார்கள் போலிருப்பார்
இப்படியே தெள்ளு ஈமூட்டை நண்டினங்கள்
அப்படியே கூடி அவரலைச்சல் செய்திடவே
அல்லாமல் சான்றோர் அவரவர்க்குத் தேகமதில்
பொல்லாத வங்குப் பெரிய சிரங்குடனே
வெகுவாய்ப் பெருத்து மேலிலிடை காணாமல்
தகுவாய்ச் சடைத்துச் சனங்கள்மிக எல்லோரும்
எங்கே யினிப்போவோம் எல்லோரு மென்றுசொல்லி
சங்கை யுடன்கூடிச் சமுத்திரக் கரையருகில்
போயிருக்கும் வேளை பொங்குகடல் கோபமதாய்
வாயிதமாய்த் திரைதான் வந்துகோபித் தடித்து
பாலதியப் பெண்கள் பண்பா யுடுத்திருந்த

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 12211 - 12240 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

உகத்துக்குத் தக்க உபாயமினிச் செய்யவென்று
மகத்துவ நாதன் மனதில்மிக வுத்தரித்துத்
தெள்ளு தனக்குச் சிணமே விடைகொடுத்தார்
விள்ளுறவே செய்து விடுநீ சிணமெனவே
ஆதி விடையருள அதுவெல்லா மேசமைந்து
மோதி யொருமித்து உற்றஅந்தத் தெள்ளினங்கள்
வந்து வளைந்துதல்லோ வாய்த்ததவத் தோரருகில்
பொந்து பொந்துள்ளும் போடுந் துணியதுள்ளும்
வைத்தக் குடிலுள்ளும் வளைந்ததுகாண் தெள்ளினங்கள்
மெய்த்தபுகழ்ச் சான்றோர் மெலிவாய் மிகச்சடைத்து
மாடா டுகோழி வளர்ப்பில்லா நம்மிடத்தில்
ஏடா விடமல்லோ இதுசெய்யு மாய்மாலம்
இருக்கு மிடத்தில் எண்ணக்கூ டாதபடிப்
பொருக்குப் பொருக்கெனவே பொன்றக் கடிக்குதென்ன
மூணுநேரந் துவைக்கும் உற்றகலை யானதிலே
கோணியலில் பற்றும் குறுந்தெள்ளு வந்ததென்ன
படுக்க இருக்கப் பண்புசற்று மில்லாமல்
முடுக்கமாய்த் தெள்ளு முடுக்கிமுடுக்கிக் கடிக்க
இதல்லால் சான்றோர்க்கு இன்னம்விட்டுப் பார்ப்போமென
சதமில்லா மூட்டை தன்னினங்க ளைவருத்தித்
தவத்தைக் குலைத்துச் சான்றோரைத் தான்விரட்டிப்
பவத்துமாய் நீங்கள் பாவிப்பீ ரென்றுசொல்லி
மூட்டைக் குரைகள் மொழிந்தார் முகுந்தனுமே
சேட்டைசெய் வோமெனவே திரண்டு மிகச்சூழ்ந்து
வந்து வளைந்தார் வாழரியச் சான்றோரை
முந்து பரிந்த மூண்டதெள் ளினங்ளோடு
கூடிக் குலாவிக் கூட்டமிட் டேதிரளாய்த்
தேடிச் சான்றோரைச் செகலதுக்குள் ளேவிரட்ட
வேணு மெனவே விசும்புகொண் டவ்வினங்கள்
பூணு முடைமை போர்த்துந்துணி யிலிருந்து

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 12181 - 12210 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

உச்சி யொருநேரம் உணவு மிகஅருந்தி
மெச்சிப் புகழ்ந்த விடிய வொருசாமம்
உகப்பாட்டு மோதி உற்ற அபயமிட்டு
வகையாய் விடிய வரும்நா ழிகையேழில்
துணிகள் துவைத்துத் தோய மதிலிறங்கிக்
கெணியாய்க் குளித்துக் கிருஷ்ணர் பதம்போற்றி
இப்படியே நித்தம் இவர்மறவா வண்ணமேதான்
அப்படியே வாரி அலைவாய்க் கரையிருக்க
வாரிப் புறமாய் வளர்காற்று வாடைமிக
நீரிறைத்தாற் போலே நித்தமந் தத்தவத்தோர்
பேரி லிறைத்துப் பெருவாடை யாய்வீசச்
சீருகந்த நாதன் செயலா மெனஇருந்தார்
இருந்தார் தவசு ஏற்றரிய சான்றோர்கள்
அருந்தாமல் மற்றொன்றும் அன்னமொரு நேரமுமாய்
வாரிநீ ரல்லால் மறுநீ ரறியாமல்
சீரியல்பாய்ச் சான்றோர் செய்தார் தவமதுவே
தவமாய்யிவர்கள் தானிருக்கும் அப்பொழுது
பவமா னதுநீக்கும் பச்சைநா ராயணரும்
முன்னாறு வருசம் உவந்திருந்த நற்றவத்தைப்
பின்னொரு வருசம் பேணி நடத்துமுன்னே
நீச னிடையில் நிறடுசெய் தானதினால்
தோச மவன்பேரில் சுமக்கச்சா பம்புரிந்து
ஆறு வருசம் அதிற்குறைவு வராமல்
வாறு தவசு வகுத்து முடிக்கவென்று
புரிந்தார் தவசு இலக்குத் திகைவதுமுன்
இருந்தார்தவசு லெக்குத்திகைவதுமுன்
சான்றோர் தவத்தைத் தான்பார்க்க வேணுமென்று
ஆன்றோர் மனதில் அன்புமிகக் கொண்டாடி
அலைவாய்க் கரையில் அமர்ந்திருந்த சான்றோரை
நிலைபார்க்க வேணுமென்று நிச்சயித் தெம்பெருமாள்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 12151 - 12180 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

நாம்நினைத் ததுபோலே நடந்து காரியந்தான்
தாம்நினைத் ததுபோலே தாநடந்து வீரெனவே
உத்தரவு சொல்ல உடைய வழிச்சான்றோர்
சித்தருட அருளால் சென்றார் தவமதுக்கே

விருத்தம்

தவமது செய்ய வென்று சடுதியிற் சான்றோ ரெல்லாம்
உகமது அளந்தோன் பாதம் உண்டென மனதி லாக்கி
வகைபொரு ளாசை யற்று மனைவிகள் மக்கள் கூட
திகையது நோக்கி வாரி துவரயம் பதியிற் சேர்ந்தார்

விருத்தம்


மண்ணுடன் மனைக ளாசை மாடுடன் வீடு மாசை
பெண்ணுடன் பொருளி னாசை பூதலப் பொன்னி னாசை
எண்ணுடன் எழுத்தி னாசை இடறுபொல் லாசை வேசை
ஒண்ணுடன் ஆசை நீக்கி உடையவ னாசை கொண்டார்

விருத்தம்

கொண்டுநல் மனதிற் பூண்டு குருபரா தஞ்ச மென்று
பண்டுநல் துவார கையின் பதிவாட வாசல் தன்னில்
தெண்டிரை வாவை சூழ்ந்த செகற்கரை தனிலே வந்து
கண்டுநற் பதியில் புக்கி கருத்துடன் இருந்தா ரன்றே

விருத்தம்


இருந்தவர் தலமும் பார்த்து ஏகநல் வெளியுங் கண்டு
பொருந்திடும் ஞான வான்கள் புண்ணிய மனதி லெண்ணி
வருந்திடக் கனிவே காணும் வாவைநற் பதியி தாகும்
தெரிந்திடக் கடலில் மூழ்கிச் சிவகலை யணிந்தார் தாமே

விருத்தம்


அணிந்தவர் பெண்ணு மாணும் அன்புடன் மகிழ்ச்சை கூர்ந்து
துணிந்தவர் தங்கள் தங்கள் துயரங்க ளறவே நீக்கப்
பணிந்தவர் நாதன் தன்னைப் பரிவுடன் மனதுள் ளாக்கித்
தணிந்தவர் கோப வேகத் தகுளியைத் தள்ளி வாழ்ந்தார்

நடை

வாழ்ந்தே தவசு வாகைப் பதியதிலே
தாழ்ந்தே சனங்கள் சந்தோச மாயிருக்க
அந்திசந்தி யுச்சி ஆகமூ ணுநேரம்
நந்தி யருளால் நல்ல துணிதுவைத்து
உவரிநீ ரில்துவைத்து உவரிநீ ரைக்குடித்து
உவரிநீர் தன்னில் உற்றன்ன மேசமைத்து

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 12121 - 12150 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

நாட்டில் சிறப்பதிகம் நாமினிமேல் செய்யவென்று
தாட்டிமையாய் நாதன் சான்றோர் தமக்குப்போ
அறிவில் வினோதம் அதிகநே ருத்தமமாய்க்
குறியாய் மனதில் குறிக்கும் படியருள
அருளான விஞ்சை அருள்கொடுக்கு மாலோனும்
மருளாமல் சாணார் மனதி லுருவாக
மூணுநேரத் துவைத்து உச்சி யொருநேரமதாய்
வேணும் பச்சரிசி வெற்றிச் சிறுமணியும்
வேகவைத்து நன்றாய் விரைவாய் மணலிலிட்டுத்
தாக மில்லாமல் தவசிருக்க வேணுமென்று
பெண்ணுடனே ஆணும் பிறந்தபிள்ளை தன்னோடும்
கண்ணான கட்டில் கலருங் கிழவிவரை
சூலி யிளம்பிள்ளை திரண்ட மடமாதும்
மாலி னருளால் வஸ்துவகை தான்மறந்து
வீடு மனைமறந்து விற்று விலைகள்செய்து
ஆடுமாடுகளையும் ஆனமிருகங்களையும்
ஒண்ணிலரைப் பாதியென ஒக்கவிற்றார் சொத்ததனை
மண்ணு மறந்து மாடாடு தான்மறந்து
ஆண்டபண்ட மெல்லாம் அகல மிகமறந்து
கூண்டபண்ட மெல்லாம் கூசாம லேமறந்து
அனுபோக மற்று ஆண்பெண் ணிகழாமல்
இனிபோக மற்று இருந்தார் தவசெனவே
எல்லோரு மிக்க இருக்கத் தலம்பார்த்து
அல்லோரு மேக அவர்கள் மனதிலுற்று
நாத னரிநாதன் நாரா யணநாதன்
சீதக்குரு நாதனிடம் சென்றா ரவர்பதத்தல்
சென்றே யவருடைய சீர்பாதந் தெண்டனிட்டு
இன்றேக எங்களுக்கு இப்போ விடையருள்வீர்
என்றே சனங்கள் எல்லோரும் போற்றிநிற்க
அன்று பெருமாள் அகமகிழ்ந்து கொண்டாடி

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 12091 - 12120 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

ஏனிந்தப் பேச்சு யாம்சொல்லப் போறோமெனத்
தானிந்த வார்த்தை சனங்கள்சிலர் சொல்லவே
சொல்லன்பு வன்பு சுவாமி மிகப்பார்த்து
நல்ல அனந்தம்விட்டு நாடும்வால ராமம்விட்டுச்
செல்ல அரியும் சிறப்பா யகமகிழ்ந்து
வல்ல வழியில் வாழுகின்ற ஊரும்விட்டுப்

வாகைப்பதி முட்டப்பதி தவசு


பள்ளிவா சல்விட்டுப் பார்வதி யகரம்விட்டுப்
துள்ளிக் கோட்டாறு சுசீந்திரத் தலமும்விட்டு
வேக மடக்கி விளியிட்டு வண்டுறுக்கி
ஆகமத்தின் தேதி அடுத்தாலா கட்டெனவே
சொல்லுவேன் வெள்ளித் தோன்றி வருகையிலே
வெல்லுவே னென்று விசையடக்கி எம்பெருமாள்
தொட்டிலி லிருந்து சுவாமி விளியுமிட்டு
மட்டி லிருந்த வளர்தா மரைப்பதியில்
வந்து பதிகண்டு வட்டமிட்டுத் தானாடி
விந்து வழிகளுக்கு மேற்கெதிக ளாகுதென்று
இன்றுமே லெனக்கு ஏற்றவெகு சந்தோசம்
பண்டு எனக்குப் பகர்ந்த மொழிபோலே
சான்றோரை நல்ல தவத்துக் கனுப்பிடவும்
பண்டோர் நமக்குப் பகர்ந்தபடி மாதர்களை
நாடு மணங்கள் நல்லகலி யாணமுதல்
வீடுவகை சொத்து விருதுவே டிக்கையுடன்
தேரு திருநாள் திருக்கல்யாணக் கொலுவும்
பாரு புகழப் பாவாணர் கீதமுடன்
நாட்டில் மனுக்கள் நல்லோர்கள் வாழ்வதிலும்
மேட்டிமைக ளாக மிகுவாழ்வு சேர்கையுடன்
வேண்டும் பவிசு மிகுவாய்ப் பவிசுகளும்
தாண்டும் பெரிய சனங்கள் மிகக்குழைவும்
கொடியுமிகக் கட்டிக் கொக்கரித் திகனையுடன்
வெடியெக் காளமுடன் வெற்றியி டம்மானமிட்டு

விளக்கவுரை :   
Powered by Blogger.